பாவனி ரெட்டி ( Pavani Reddy ) அட நாராயணா இதுதான் கலிகாலம் என்பதா? மேற்கத்திய நாகரீக மோகத்தால் தற்போது தமிழ்நாட்டிலும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் ஜோடிகள் பல வாழ்வதாக செய்திகள் வந்துள்ளது. அதில் குறிப்பாக பிக் பாஸ் ஜோடி ஒன்று இந்த ரிலேஷன்ஷிப்பை வாழ்ந்து வருவதாக கழுவி ஊற்றி இருக்கிறார்கள்.
அந்த ஜோடி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ரியாலிட்டி ஷோக்களில் பிரம்மாண்டமான ஷோவான திகழ்ந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஷோவில் நடக்காத நிகழ்வுகளை இல்லை என்று கூற கூடிய வகையில் சினிமாவை மிஞ்சம் அளவுக்கு சண்டை காதல் எமோஷன் என்று எதற்கும் பஞ்சமில்லாத ஒரு மசாலா கலவையாகவே இருக்கும்.
இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் அமீர் பாவனி [Amir Pavani] ஜோடியை பற்றி தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள். ஆரம்பத்தில் அமீரின் காதலை ஏற்காத பவானி நாளடைவில் அமீரின் காதலுக்கு பச்சை கொடி காட்டினார்.
அடுத்து இந்த இரண்டு ஜோடிகளுமே அஜித்தின் துணிவு படத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறார்கள். இதை அடுத்து இவருக்கு பல வாய்ப்புகள் வந்து சேர உள்ள நிலையில் புது படத்தில் நடிப்பதற்காக இருவரும் ஒப்பந்தம் செய்யப்பட்டு அதற்கான பூஜையும் நடைபெற்றது.
இதனை அடுத்து தற்போது இந்த இரண்டு ஜோடிகளுமே லிவ்விங் ரிலேஷன்ஷிப் முறையில் வாழ்ந்து வருவதான செய்தியானது மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்குக் காரணம் இந்த இரண்டு ஜோடிகளுமே பிரபல சேனலுக்கு தங்கள் வீட்டை சுற்றி காண்பித்து பேட்டி கொடுத்தது மூலம் இந்த உண்மை உடைத்து வெளிவந்துள்ளது.
இதில் மேலும் ஒரு அதிர்ச்சிகரமான செய்தி என்னவென்றால் சென்னையில் தனி பிளாட்டில் வசித்து வரும் பாவனியின் அம்மாவின் அமீருடன் சேர்ந்து தங்கிக் கொள்ளுமாறு கூறியிருக்கிறாராம்.
அதுமட்டுமல்லாமல் இந்த லிவிங் ரிலேஷன்ஷிப்புக்கு அரேஞ் செய்து தந்ததே அவர் அம்மா தான் என்று பாவனி பப்ளிக்காக கூறியதுதான் மிகப்பெரிய அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் அனைவரது மத்தியிலும் ஏற்படுத்தியுள்ளது.
அடுத்து பல வகையான விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் இதை எப்படி யார் எடுத்துக் கொள்கிறார்களோ அது அவர்களது மனநிலையை பொறுத்து தான் அமையும்.
எனினும் இது போன்ற விஷயங்களை நமது கலாச்சாரம் சீரழிந்து வருகிறது என்பதற்கு இதை ஒரு உதாரணமாக கூட நாம் கூற முடியும். இவரைப் பின் தொடர்ந்து வரும் ரசிகர்களும் இதுபோன்ற தவறுகளை கண்டிப்பாக செய்வார்கள்.
எனவே இது போன்ற விஷயங்களை செய்யும்போது பப்ளிக்காக எதையும் செய்யாமல் இருந்தால் அதுவே மற்றவர்களுக்கு நன்மையை தரும் என்பதை எப்போது இவர்கள் உணர்வார்கள்.