பிரபல தொகுப்பாளனி ஒருவர் சினிமா நடிகைகளை தாண்டி கோடிக்கணக்கான ரூபாய்களில் உருண்டு புரண்டு வருகிறார். சென்னையில் இருக்கக்கூடிய மிகவும் பிரபலமான பிரபலங்கள் வசிக்கக்கூடிய ஒரு பகுதியில் கோடிக்கணக்கான மதிப்பிலான வீடு ஒன்றை சமீபத்தில் வாங்கியிருக்கிறார் அந்த தொகுப்பாளினி.
இது குறித்து தகவல்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முன்னணி ஹீரோக்கள் கூட அந்த இடத்தில் ஒரு வீடு வாங்கி விட முடியாதா என காத்துக் கொண்டிருக்கும் நிலையில் தொகுப்பாளனியாக மட்டும் இருந்து கொண்டு அந்த இடத்தில் எப்படி இத்தனை கோடி மதிப்புள்ள சொத்தை வாங்கினார்..? இந்த தொகுப்பாளினி என்று பலரும் வியந்து போனார்கள்.
அதற்குண்டான காரணம் என்னவென்று தற்பொழுது தெரிய வந்திருக்கிறது. அடிக்கடி வெளிநாடுகளுக்கு பறந்து விடும் அந்த தொகுப்பாளினி பிரபல அரசியல்வாதி ஒருவரின் பிடியில் இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
கடந்த இரண்டு வருடமாக அவருடன் நெருக்கமாக பழகி வரும் இவர் அவருடைய பினாமியாகவும் செயல்பட்டு வருகிறார் என்று கூறுகிறார்கள் விவரம் அறிந்து வட்டாரங்கள்.
மேலும் தொகுப்பாளினி பெயரில் சில நிறுவனங்களும் இயங்கி வருகிறதாம். இந்த நிறுவனங்களில் எல்லாம் பல கோடிகளில் வர்த்தகம் நடைபெற்று வருவதாகவும் அந்த அரசியல்வாதியின் பினாமியாக இருப்பதன் மூலமே இவருக்கு கோடிக்கணக்கான ரூபாய்கள் வருமானமாக வந்து கொண்டிருக்கின்றது என்றும் கூறுகிறார்கள்.
மேலும் அந்த அரசியல்வாதியுடன் மிகவும் நெருக்கமாக பழகி வரும் இவர் அவருடன் அடிக்கடி காதலை கொண்டாடி வருகிறார் என்றும் கூறப்படுகிறது. வார இறுதி நாட்களில் ECR-ல் உள்ள அந்த அரசியல்வாதியின் பண்ணை வீட்டில் தன்னுடைய காதலை கொண்டாடும் அம்மணி நேரம் கிடைக்கும்போது வெளிநாடுகளுக்கு சென்று விடுவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
இந்த விவகாரம் தற்போது சின்னத்திரை மற்றும் சினிமா வட்டாரத்தில் புகைச்சலை கிளப்பி விட்டு இருக்கிறது. ஏற்கனவே பல இளம் நடிகர்களுடன் தொடர்பில் இருந்தார் இந்த தொகுப்பாளினி என்று கூறப்பட்டது. இந்நிலையில் தற்பொழுது அரசியல்வாதிகளும் தொடர்பில் இருக்கிறார் என்ற விவகாரம் புகைச்சலை கிளப்பி விட்டு இருக்கிறது.