செய்தி வாசிப்பாளராக ரசிகர்கள் மத்தியில் அறிமுகமான அனிதா சம்பத் ( Anitha Sampath ) சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி இன்னும் பிரபலமானார். அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பட்டி தொட்டி எங்கும் தன்னுடைய பெயரையும் முகத்தையும் பதிவு செய்தார்.
சமீபத்தில் பிரபல பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அனிதா சம்பத் கூறியதாவது எனக்கென்று ஒரு இலக்கே கிடையாது. இலக்கே இல்லாமல் பயணித்துக் கொண்டிருக்கிறேன். சிறு வயதில் எனக்கு இருந்த ஒரே இலக்கு செய்தி வாசிப்பாளராக வேண்டும் என்பதுதான்.
செய்தி வாசிப்பாளரான பிறகு வேறு எந்த இலக்கும் இல்லாமல் பயணித்துக் கொண்டிருக்கிறேன். செய்தி வாசிப்பாளராக இருந்த எனக்கு கிடைத்த அனைத்து வாய்ப்புகளையும் நான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன்.
நகை கடை விளம்பரங்கள், பெரிய நிறுவனங்களின் விளம்பரங்கள் என தற்போது நடித்துக்கொண்டிருகின்றேன். செய்தி வாசிப்பாளராக இருந்த எனக்கு கிடைத்த அனைத்து வாய்ப்புகளையும் நான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன்.
பெரிய நிறுவங்களின் விளம்பரங்களில் மட்டுமில்லாமல் சிறு குறு நிறுவனங்கள் விளம்பரங்கள் கூட செய்துகொண்டிருக்கின்றேன். எனக்கு கிடைக்கக்கூடிய அனைத்து வாய்ப்புகளையும் நான் பயன்படுத்திக் கொள்கிறேன்.
கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் என்ன வேலையை செய்ய வேண்டும் என்று நான் உறுதியாக இருக்கிறேன். இதுதான் என்னுடைய பயணம் என்று நினைக்கிறேன். எந்த வாய்ப்பு கிடைத்தாலும் அதன் என்னுடைய கடின உழைப்பை உங்களால் பார்க்க முடியும்.
கண்டிப்பாக என்னை நான் நிரூபிக்க முயற்சி செய்வேன் என பதிவு செய்திருக்கிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இயங்கிக் கொண்டிருக்கும் நடிகை அனிதா சம்பத் அவ்வப்போது கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
தற்பொழுது உடல் எடை கூடியிருக்கும் நடிகை அனிதா சம்பத் ஆரஞ்சு நிறத்திலான கோட் மற்றும் கருப்பு நிறத்திலான உள்ளாடை அணிந்து கொண்டு புகைப்படங்கள் சிலவற்றை பதிவு செய்திருக்கிறார்.
இதனை பார்த்த ரசிகர் ஒருவர் பார்ப்பதற்கு பொறுக்கி மாதிரியே இருக்க என்று கருத்து தெரிவித்திருக்கிறார். இதனை பார்த்து கடுப்பான நடிகை அனிதா சம்பத் உங்களை யாரேனும் இப்படி கூறி இருப்பார்கள்.
அதை அப்படியே என்னிடம் கூறி உங்களுடைய கோபத்தை தணித்துக் கொள்கிறீர்கள் என்று பதிலடி கொடுத்திருக்கிறார். இவருடைய இந்த பதில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.