ஒரு நிமிஷத்துல 5 லட்சம் ரூபாய் பணால்..” காலா பட நடிகையை விளாசும் ரசிகர்கள்..!

ஒரு நிமிஷத்துல 5 லட்சம் ரூபாய் பணால்..” காலா பட நடிகையை விளாசும் ரசிகர்கள்..!

காலா படத்தில், ரஜினி மகனாக நடித்த மணிகண்டனுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை அஞ்சலி பாட்டீல். தமிழில் குதிரைவால் என்று ஒரு படத்திலும் இவர் நடித்திருக்கிறார். காலா படத்தில், ரஜினியையே கிண்டலடிக்கும் விதமாக பேசி நடித்திருப்பார் அஞ்சலி பாட்டீல். அதனால் அவரது நடிப்பு கவனிக்கப்பட்டது. பலரும் அவரது இயல்பான நடிப்பை ரசிக்கவும் செய்தனர்.

இந்தி, தெலுங்கு, மராத்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்துவரும் அஞ்சலி பாட்டீலுக்கு இப்போது 36 வயதாகிறது. மும்பையில், அந்தேரி மேற்கு கில்பர்ட் ரோடு பகுதியில் தற்போது வசித்து வருகிறார். இவரது போனுக்கு சில தினங்களுக்கு முன் ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில், உங்களுக்கு வெளிநாட்டில் இருந்து வந்த கூரியர் பார்சலில், போதைப் பொருள் வந்துள்ளது. அது தற்போது, விமான சுங்கத்துறை அதிகாரிடம் வசம் சிக்கியுள்ளது என போனில் பேசியவர் கூறியுள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அஞ்சலி பாட்டீலிடம், நீங்கள் உடனடியாக மும்பை சைபர் கிரைம் போலீசாரை தொடர்பு கொள்ளுங்கள் என போனில் பேசியவர் அறிவுறுத்தியுள்ளார். இதையடுத்து ஸ்கைப் மூலமாக, அஞ்சலி பாட்டீலை பானர்ஜி என்பவர் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அவர் தன்னை மும்பை சைபர் க்ரைம் போலீஸ் அதிகாரி என அறிமுகம் செய்துள்ளார்.

அப்போது அவர், உங்களது 3 வங்கி கணக்குகளில், சட்டவிரோதமாக பண பரிமாற்றம் நடந்துள்ளது. அதுகுறித்து விசாரிக்க நீங்கள், 96 ஆயிரத்து 525 ரூபாய் செலுத்த வேண்டும் எனக்கூறியுள்ளார். உடனடியாக அந்த தொகையை, அஞ்சலி பாட்டீல் ஜி பே மூலம் அனுப்பியுள்ளார். அதன்பின் வங்கி அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டிருக்கலாம் என்று கூறி அதை விசாரிக்க கட்டணமாக, 4 லட்சத்து 83 ஆயிரத்து 291 ரூபாய் கட்டணமாக அனுப்புங்கள் என்க, அதையும் யோசிக்காமல் அனுப்பி இருக்கிறார் அஞ்சலி பாட்டீல்.

இதன்பிறகு நடந்த சம்பவத்தை அவர் சிலரிடம் கூறிய போது, இது மோசடி வேலை, பணம் பறிக்கும் கும்பலின் நடவடிக்கையாக இருக்கலாம் என்று கூறியுள்ளனர். இதுகுறித்து அவர் போலீசில் புகார் அளித்திருக்கிறார். நடந்த சம்பவம் குறித்து மும்பை போலீசார் விசாரித்து வருகின்றனர்.