ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை அஞ்சலி தற்பொழுது ஒரே ஒரு பாடலுக்கு ஆட்டம் போடும் ஐட்டம் டான்ஸர் அளவுக்கு இறங்கி வந்து விட்டார். இது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி இருந்தாலும் மறுபக்கம் அவரது அழகையும் , கவர்ச்சி ஆட்டத்தையும் கண்டு களிப்படைந்து வருகின்றனர்.
கற்றது தமிழ் என்ற படத்தில் நெசமா தான் சொல்றியா என்ற ஒரு வசனத்தின் மூலம் இளசுகள் மத்தியில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து நடிகை அஞ்சலி.
அதனைத் தொடர்ந்து அங்காடித்தெரு என்ற திரைப்படத்தின் மூலம் தன்னை ஒரு நடிகையாக நிரூபித்து தமிழ் சினிமாவில் கதாநாயகியாக உருவெடுத்தார் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த இவர் அடுத்தடுத்து இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வந்தார்.
இவருடைய மார்க்கெட்டும் நன்றாகவே இருந்தது. இவர் நடிக்கக்கூடிய படங்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால் தன்னுடைய சினிமா வாழ்க்கையை கவனிக்காமல் இளம் நடிகர் ஒருவரை காதலித்து கொண்டு அவருடன் திருமணமே செய்து கொள்ளாமல் சில காலம் குடும்பம் நடத்தினார்.
இதனால் படங்கள் கவனம் செலுத்த முடியாமல் திணறினார் அம்மணி. ஆனால் காதலனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து விட்ட நடிகை அஞ்சலி மீண்டும் சினிமாவிற்கு வந்த போது அவருக்கு சொல்லிக்கொள்ளும்படி படவாய்ப்புகள் இல்லை.
காரணம் அம்மணியின் இடத்தை அவருக்கு பின்னால் நின்றிருந்த நடிகைகள் துண்டு போட்டு ரிசர்வ் செய்து விட்டார்கள். தற்போதைய கிடைக்கும் இடங்களில் நடித்து வரும் அஞ்சலி ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடும் அளவுக்கு இறங்கி வந்து விட்டார்.
அந்த வகையில், தற்போது, தெலுங்கில் வெளியாகியுள்ள Macherla Niyojakavargam என்ற படத்தில் கவர்ச்சியாக ஆட்டம் போட்டு இளசுகளின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது இந்த திரைப்படம் நேற்று வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.