தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக வலம் வந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயர் எடுத்தவர் அஞ்சனா ரங்கன் கயல் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான சந்திரன் என்ற நடிகரை திருமணம் செய்துகொண்டார்.
தொகுப்பாளினியாக தன்னுடைய பணியைத் தொடர்ந்து கொண்டிருந்தபோது கடந்த 2016ம் ஆண்டு கயல் சந்திரனை திருமணம் செய்து கொண்டார். ஒரு பேட்டியின்போது கயல் சந்திரனை இவர் பேட்டி எடுத்தபோது இவர்கள் இருவருக்குள்ளும் காதல் ஏற்பட்டு சில காலம் காதலித்து வந்த இவர்கள் அதனைத் தொடர்ந்து திருமணமும் செய்து கொண்டனர்.
தொகுப்பாளினி அஞ்சனா ரங்கன் தொலைக்காட்சி சேனலில் சன் மியூசிக் தொலைக்காட்சி சேனலில் நம்பர் ஒன் தொகுப்பாளினியாக இருந்து வந்தவர். இவருக்கு இன்றளவும் ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றது என்றால் அது மிகையாகாது.
திருமணத்திற்கு பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் இருந்து விலகி இருந்த இவர் தற்போது மீண்டும் தொகுப்பாளினியாக களமிறங்கியுள்ளா.ர் அதேசமயம் சினிமா நிகழ்ச்சிகள் இசை நிகழ்ச்சிகள் போன்றவற்றை போன்ற மேடை நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார்.
கணவனும் மனைவியும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் தற்போது வெறும் ஷார்ட்ஸ் மட்டும் அணிந்து கொண்டு வயலில் புல்லை பிடுங்கி விளையாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகை அஞ்சனா ரங்கனை பார்த்த கணவர் கயல் சந்திரன் உனக்கு என்னப்பா நீ பைத்தியம் என்ன பண்ணுவ என்ற வசனத்துடன் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்து கடுப்பான அஞ்சனா, எவ்வளவு நாள் இந்த ஆடியோவை மைண்ட்ல சேவ் பண்ணி வச்சி வெயிட் பண்ணிட்டு இருந்த.. நான் என்கிட்டே இருக்க உன்னோட வீடியோவை போஸ்ட் பண்ணட்டுமா.. என்று அவரை ப்ளாக் மெயில் செய்துள்ளார். காதல் ஜோடியின் இந்த அட்ராசிட்டி இணையத்தில் வைரலாகி வருகின்றது.