இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான பிரேமம் திரைப் படத்தில் மூன்று கதாநாயகிகள் வைத்திருந்தனர். அதில் ஒருவர்தான் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.
தமிழில் கொடி என்ற திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த அம்மணிக்கு இந்த படம் வெற்றியை கொடுக்கவில்லை. ஆளை விடுங்கடா சாமி என்று தெலுங்கு சினிமா பக்கம் ஒதுங்கினார்.
அங்கே அவருக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பு கொடுக்கப்பட்டது. தன்னுடைய கவர்ச்சியான அழகுகளை காட்டி அக்கட தேசத்து இளசுகளை கட்டிப் போட்டுள்ளார் அனுபமா பரமேஸ்வரன்.
தொடர்ந்து கவர்ச்சியாக நடித்தால்தான் சினிமாவில் தாக்குப்பிடிக்க முடியும் என்பதை உணர்ந்து கொண்ட அவர் சமீபகாலமாக படு கிளாமரான உடைகளை அணிந்துகொண்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகின்றார்.
மேலும், வெப்சீரிஸ் ஒன்றில் முதன் முறையாக நீச்சல் உடையில் நடிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. கிட்டத்தட்ட அது உண்மைதான் என்பது போல இருக்கிறது அவரின் சமீபத்திய நகர்வுகள்.
காரணம், நீச்சலுடையை தோற்கடிக்கும் விதமான கவர்ச்சி உடைகளை அணிந்து கொண்டு படு கிளாமரான போஸ் கொடுத்து நடித்து வருகிறார் அனுப்பமா. அந்த வகையில் தற்போது தன்னுடைய முதுகில் முழு அழகையும் அப்பட்டமாக படம் போட்டு காட்டி ரசிகர்களின் சூட்டைக் கிளப்பியுள்ளார்.
கடுகளவு கூட தன்னுடைய முதுகின் அழகை மறைக்காமல் அப்படியே ரசிகர்களுக்கு பரிசளித்துள்ளார். ஒரு காலத்தில் தன்னுடைய தொப்புளை காட்டி விட்டார்கள் என்று இணையத்தில் ஒப்பாரி வைத்தார் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.
ஆனால் தற்போது தன்னுடைய முழு அழகையும் படம் போட்டு காட்டி கொண்டிருக்கிறார். இதனை பார்த்த, ரசிகர்கள் பணம் பத்தும் செய்யும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்