தூக்கி எறிஞ்ச தமிழ் சினிமாவுக்கு பாடம் புகட்டுறேன்.. அதிதி ஷங்கரின் அதிர்ச்சி முடிவு..!

தமிழ் சினிமாவில் எல்லா காலங்களிலும் வாரிசு நடிகர்கள் நடிகைகள் என்பவர்கள் சினிமாவை ஆக்கிரமித்துக் கொண்டு இருப்பது நடந்து கொண்டுதான் இருக்கிறது.

உதாரணத்திற்கு நடிகை சுருதிஹாசன் மற்றும் நடிகை அதிதி ஷங்கரை கூறலாம். இவர்கள் இருவருமே பெரிதாக நடிக்க தெரியாதவர்கள் என்று ரசிகர்களால் கூறப்படும் நடிகைகாக இருக்கின்றனர். எமோஷனலான காட்சிகளில் இவர்கள் நடிக்கும் பொழுது அது பெரிதாக வரவேற்பு பெறாது என்கின்றனர் சினிமா விமர்சகர்கள்.

சினிமாவுக்கு பாடம் புகட்டுறேன்

அந்த அளவிற்கு எதிர்மறையான விமர்சனங்களை பெற்றாலும் கூட இவர்கள் இருவருமே அதிக வாய்ப்புகளை பெற்ற நடிகைகளாக இருந்து வருகின்றனர். அதற்கு அவர்கள் பிரபலங்களின் வாரிசுகள் என்பதுதான் காரணமாக இருக்கிறது என்பது இங்கிருக்கும் பேச்சாக இருக்கிறது.

அதிதி ஷங்கர் இயக்குனர் ஷங்கரின் மகள் என்பதால் எடுத்த உடனே அவருக்கு பெரிய படத்தில் வாய்ப்பு கிடைத்தது. இயக்குனர் முத்தையா இயக்கிய விருமன் திரைப்படத்தில் முதன்முதலாக கதாநாயகியாக அறிமுகமானார் அதிதி ஷங்கர்.

தூக்கி எறிஞ்ச சினிமா

அந்த திரைப்படத்தில் அவருக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரம் ஓரளவு செட்டாகி இருந்ததால் அது அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. அதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்த மாவீரன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார் அதிதி ஷங்கர்.

அதிதி ஷங்கர் சினிமாவிற்கு அறிமுகமாகும் பொழுது 25 வயதை தாண்டி இருந்தார். பெரும்பாலும் நடிகைகள் 20 வயதிற்குள்ளாகவே சினிமாவில் அறிமுகம் ஆகிவிடுவது உண்டு.

அப்படி இருந்தும் இவ்வளவு தாமதமாக வந்து அதிதி சங்கருக்கு வாய்ப்புகள் கிடைப்பதற்கு அவர் ஷங்கர் மகள் என்பதுதான் காரணமாக இருக்கிறது ஆனாலும் தொடர்ந்து வாரிசு நடிகை என்று அவரை முத்திரை குத்துவது அவருக்கு பிடிக்கவில்லை.

அதிதி ஷங்கரின் அதிர்ச்சி முடிவு

ஆனால் அதே சமயம் மற்ற எந்த நடிகைகளுக்கும் கிடைக்காத அளவிற்கு ஷங்கரின் மகளுக்கு வாய்ப்புகள் அதிகமாகவே கிடைக்கிறது உதாரணத்திற்கு தற்சமயம் கூட இரண்டு திரைப்படங்களில் தொடர்ந்து நடித்த வருகிறார் அதிதி ஷங்கர்.

அதிதி ஷங்கருக்கு முன்பிருந்தே சினிமாவில் இருக்கும் பல நடிகைகளுக்கு இப்படியாக வரிசையாக வாய்ப்புகள் கிடைப்பது கிடையாது. இந்த நிலையில் திறமையால் தன்னால் முன்னேற முடியும் என்பதை நிரூபிக்க அதிதி ஷங்கர் முடிவெடுத்துள்ளார்.

அதாவது தெலுங்கு சினிமாவில் அடுத்து நடிப்பதற்கு அதிதி ஷங்கர் முடிவெடுத்து இருக்கிறார். தெலுங்கில் இயக்குனர் ஷங்கரை யாருக்கும் புதிதாக தெரியாது. எனவே தெலுங்கில் நடித்து வரவேற்பு பெற்றுவிட்டால் அதன் மூலமாக தன்னுடைய நடிப்பு திறமையின் மூலம் வளர்ச்சி பெற்றதை நிரூபிக்க முடியும் என்று நினைக்கிறாராம் அத்தி ஷங்கர். எனவே அடுத்து தெலுங்கு படத்தில் நடிப்பதற்கு இவர் தயாராகி வருகிறார்.

About Jiraya

Check Also

ப்பா.. சுண்டி இழுக்கும் அழகு சைட் போஸில் நச் போஸ்..! கிக்கு ஏற்றும் வேதிகா.. அட.. ஒரு வாரம் தாங்கும்!!..

தென்னிந்திய திரைப்படங்களில் அதிக அளவு நடித்திருக்கும் நடிகை வேதிகா 2005 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த மதராசி என்ற திரைப்படத்தின் …

Exit mobile version