நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்,(Aishwarya rajesh) இன்று தமிழ் சினிமாவில் முக்கிய நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். பா. ரஞ்சித் இயக்கிய அட்டக்கத்தி படத்தில், பக்கத்து வீட்டு பெண்ணாக, நடித்திருப்பார்.
அடுத்தடுத்த பட வாய்ப்புகளில், தன் திறமையை சிறப்பாக வெளிப்படுத்தியதால், இன்று ஐஸ்வர்யா ராஜேஷின் கேரக்டரை மையப்படுத்திய கதைகளில் நடிக்கும் அளவுக்கு, முன்னேறி இருக்கிறார். அதாவது, நயன்தாரா, திரிஷா, கீர்த்தி சுரேஷ் போல, ஹீரோயினுக்கு அதிக முக்கியத்துவம் தரும் படங்களில், ஐஸ்வர்யா ராஜேஷ் தொடர்ந்து நடித்து வருகிறார்.
இதில் மிகவும் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, திரிஷா போன்ற முன்னணி நடிகைகளே, கிளாமர் ரோலில் நடித்துவரும் நிலையில், ஐஸ்வர்யா ராஜேஷ் இதுவரை அப்படிப்பட்ட ரோல்களில் நடிக்காமல் கதைக்கும், கேரக்டருக்கும் முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடித்து, இந்த இடத்துக்கு வந்திருக்கிறார் என்பதுதான்.
ஐஸ்வர்யா ராஜேஷின் சினிமா கேரியரில் காக்கா முட்டை, கனா, நம்ம வீட்டுப்பிள்ளை, ரம்மி, டிரைவர் ஜமுனா, பண்ணையாரும், பத்மினியும், தர்மதுரை, க/பெ ரணசிங்கம், திட்டம் இரண்டு உள்ளிட்ட படங்கள், மிக முக்கிய கவனிக்கப்பட்ட படங்களாக அமைந்தன, இப்போது, ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார்.
மற்ற நடிகைகளை போல, வெகு எளிதாக சிபாரிசு, சினிமா பின்புலம் மூலமாக சினிமாவுக்குள், ஐஸ்வர்யா ராஜேஷ் வரவில்லை. துவக்கத்தில் இருந்தே பலவிதமான வாழ்க்கை துன்பங்களை கடந்து, வறுமையை கடந்துதான் இந்த நிலைக்கு, ஐஸ்வர்யாவும், அவரது குடும்பமும் வந்திருக்கிறது.
ஐஸ்வர்யா ராஜேஷூக்கு மூன்று சகோதரர்கள் இருந்திருக்கின்றனர். அதில் விபத்துகளில், தனது இரண்டு சகோதரர்களை இழந்திருக்கிறார். சிறுவயதில் இருந்தே, குடும்பத்தில் பல கஷ்டங்களை கண்டிருக்கிறார்.
அவரது தாயார் நாகமணியின் ஆதரவிலும், பராமரிப்பிலும் ஐஸ்வர்யா உள்ளிட்ட அவரது சகோதரர்கள் வளர்ந்திருக்கின்றனர். கல்லூரி நாட்களிலேயே, குடும்ப தேவைகளுக்காக, வீதி வீதியாகச் சென்று ஐஸ்வர்யா ராஜேஷ், விளம்பர நோட்டீஸ் வினியோகம் செய்திருக்கிறார். வேலை வாய்ப்புகளை தேடி இருக்கிறார். பிறகு, சன்டிவியில் கலக்கப் போவது யாரு, நிகழ்ச்சியில், தொகுப்பாளினி வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
அதையடுத்து தொடர் முயற்சிகளில் அட்டக்கத்தி படவாய்ப்பு அமைந்து, ஒரு நல்ல நடிகையாக தன்னை நிரூபித்து, இன்று வாழ்வில் ஒரு நல்ல நிலைக்கு உயர்ந்திருக்கிறார். இவரது சகோதரர் மணிகண்டன், விஜய் டிவியில், கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 6ல் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வெப் சீரிஸ் ஒன்றிலும் நடிக்க துவங்கி இருக்கிறார்.
இந்நிலையில், ஐஸ்வர்யா ராஜேஷின் தாயார் நாகமணிதான், அந்த குடும்பத்தின் ஆணிவேராக இருந்து, இந்தளவுக்கு ஐஸ்வர்யா ராஜேஷ், உயர்வதற்கு உந்துசக்தியாக இருந்திருக்கிறார். பிள்ளைகளை சுதந்திரமாக செயல்பட அனுமதித்திருக்கிறார். இப்போதும், ஒரு நல்ல தாயாக அந்த குடும்பத்தை வழிநடத்திக்கொண்டு இருக்கிறார்.
சிறந்த குடும்ப பெண்மணியாக, அவர் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், மகளிர் தினத்தை கொண்டாடும் விதமாக, நாகமணிக்கு ஆளுநர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 21ம் தேதி இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது.
இதுகுறித்து தகவலறிந்த சினிமா நண்பர்களும், ரசிகர்களும் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து, தமிழகம் இணையத்தை படியுங்கள்.