ஐம்பதிலும் ஆசை வரும்…. பப்லு பிரித்விராஜ் விஷயத்தில் உண்மையாகி விட்டதா?

பப்லு பிரித்விராஜ் சமுதாயத்தில் ஒரு முக்கிய அந்தஸ்தில் இருக்கக்கூடியவர்.மேலும் சமூகத்தில் பிரபலங்கள் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் கலாச்சாரத்தை பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் நாம் அதன் கடமை உணர்ந்து அவர்கள் செயல்பட வேண்டும் என்பதுதான்.

 சினிமாவில் பஞ்ச் டயலாக் பேசிவிட்டு வாழ்க்கையை தரமாக நடத்தாமல் சம்பவங்களாக மாற்றி வரக்கூடிய என்ற காலகட்டத்தில் தற்போது பழமொழிகள் எல்லாம் உண்மையாகும் விதத்தில் தான் உள்ளது.

 பெரிய திரை, சின்னத்திரை என்ற வித்தியாசம் இல்லாமல் இப்போது  இந்த கலாச்சார சீரழிவை பல நியாயப்படுத்தும் வகையில்  பேட்டி கொடுத்து மற்றவர்களை திசை திருப்பும் செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

 அந்த வரிசையில் நடிகர் பப்லு எனும் பிரிதிவிராஜ் இதே செயலை தான் செய்திருக்கிறார். 60 வயதை நெருங்கப் போகும் இவர் தற்போது 23 வயதான இளம் பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.

ஏற்கனவே தனது முதல் மனைவியோடு ஏற்பட்ட கருத்து வேற்றுமை காரணமாக பிரிந்து வாழும் இவரின் இரண்டாவது திருமணம் இப்போது சினி வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பி விட்டுள்ளது.

 மேலும் இவர் அது குறித்து பேசும் போது சில கேள்விகளை கேட்டு இருக்கிறார்கள். அந்த பேட்டியில் இவரிடம் எந்த வயசிலும் உங்களுக்கு பெண் சுகம் தேவையா என்று கேட்டதற்கு தயங்காமல் ஆம் என்று தடாளடியாக கூறியிருக்கிறார்.

 இது மட்டுமல்லாமல் நான் எந்த விதத்திலும் தனது முதல் மனைவிக்கு துரோகம் செய்யவில்லை என்றும் இவர் தன்னை விட்டு பிரிந்து சென்றதன் காரணத்தினால் எனக்கு தேவையானதை வெளியில் தேடினேன் என்று கூறுகிறார்.

 மேலும் இவரின்  முதல் மனைவி கொடுக்காத காதல்,மரியாதை, சுகத்தை இரண்டாவது மனைவி கொடுத்து இருக்கிறார் என கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் பேசி இருப்பது ரசிகர்கள் மட்டுமல்லாமல் மற்றவர்களிடையே  பலவிதமான அபிப்ராயங்களை கிளப்பி விட்டுள்ளது.

திருமண வயதில் மகன் இருக்கும்போது இவர் இப்படி செய்திருப்பது மிகவும் தவறான செயல் அதை ஒத்துக் கொள்ளாமல் இந்த மாதிரி பேசி வருவது சர்ச்சையை கிளப்பி இருப்பதோடு இந்த விஷயம் தான் தற்போது வைரலாக பேசப்படுகிறது.