Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

மாமனார் செய்ற வேலையா இது..? நடிகை ஜோதிகாவை வெளுத்து கட்டும் பிரபல நடிகர்..!

நடிகை ஜோதிகா ரசிகர்களால் ஜோ என்று அன்போடு அழைக்கப்படுகிறார். இவர் ஆரம்ப காலத்தில் ஹிந்தி திரைப்படங்களின் நடிக்க ஆரம்பித்ததை அடுத்து தமிழ் மற்றும் தென்னிந்திய மொழிகளில் நடிக்கக் கூடிய வாய்ப்பினை பெற்றார்.


தல அஜித் நடிப்பில் வெளி வந்த வாலி திரைப்படத்தில் ஒரு சிறு கெட்டப்பில் வந்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொள்ளும் அளவுக்கு தன் நடிப்பால் அனைவரையும் ஈர்த்தார்.

நடிகை ஜோதிகா..

ஜோதிகா நடிப்பில் வெளி வந்த காற்றின் மொழி, 36 வயதினிலே, மொழி, மாயாவி, த்ரீ ரோசஸ், காக்க காக்க, பிரியமான தோழி, குஷி, பூவெல்லாம் கேட்டுப்பார் போன்ற படங்கள் இவரது நடிப்புத் திறனை வெளிப்படுத்தக் கூடிய வகையில் இருந்தது.

இதனை அடுத்து அதிக அளவு தமிழ் படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் குஷி படத்தில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்திய இவர் காக்க காக்க படத்தில் சூர்யாவோடு இணைந்து நடித்தார்.


அப்படி அந்த படத்தில் நடித்த சமயத்தில் இவர்களது கெமிஸ்ட்ரி திரைப்படத்தில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் ஒர்க் அவுட் ஆனதை அடுத்து இருவரும் காதலித்தார்கள்.

இதனை அடுத்து இவர்களது திருமணம் பெற்றோர்கள் மத்தியில் சீரும் சிறப்புமாக நடந்தது என்றாலும் சிவக்குமாருக்கு இந்த காதல் திருமணத்தில் அவ்வளவு திருப்தி இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

திருமணத்திற்குப் பிறகு 36 வயதினிலே என்ற திரைப்படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்த ஜோதிகா பெண்களுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய கேரக்டர் ரோல்களை தேர்வு செய்து நடித்து வருவதோடு அண்மையில் மம்முட்டியோடு இணைந்து மலையாள படத்திலும் நடித்திருக்கிறார்.

மாமனார் செய்யற வேலைய இது..

நடிகை ஜோதிகா மும்பைக்கு தன்னுடைய குழந்தைகளின் படிப்புக்காக என்று சொல்லி சென்றிருக்கிறார். ஆனால், திரும்ப சென்னைக்கு வரப்போவதில்லை என்ற முடிவில் இருக்கிறார்.

அத்தோடு சென்னையில் இருக்கும் பொழுது மாமனார், சிவகுமாருடன் பல பிரச்சனைகளை செய்திருக்கிறார் ஜோதிகா என்றும் உச்சகட்டமாக தன்னுடைய மகன் கராத்தேவில் பிளாக் பெல்ட் வாங்கிய போது அவனுடைய பள்ளிக்கு வரவே இல்லை.


உதாரணத்திற்கு நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் பிரிந்து தான் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய குழந்தைகளின் பள்ளி விழாக்களில் இருவரும் கலந்து சேர்ந்தே கலந்து கொள்கிறார்கள்.

இதற்கு என்ன காரணம்..? அங்கு படிக்கக்கூடிய அனைத்து மாணவர்களின் பெற்றோர்களும் வருவார்கள்.

வெளுத்து வாங்கும் பிரபலம்..

அப்படி வரும் பொழுது தன்னுடைய பெற்றோரும் கலந்து கொள்ள வேண்டும் என்று அவருடைய குழந்தைகள் ஏங்குவார்கள்.

அப்படி ஏங்கி விடக்கூடாது என்பதற்காக இருவரும் பிரிந்து இருந்தாலும் கூட ஒன்றாக சேர்ந்து பள்ளிக்கு வருகிறார்கள்.


ஆனால், நடிகை ஜோதிகா தன்னுடைய மாமனாருடன் பிரச்சனை செய்து கொண்டு தன்னுடைய பள்ளி விழாவில் கலந்து கொள்ளாமல் கணவர் சூர்யாவை மட்டும் அனுப்பி வைத்திருக்கிறார் என பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதன் விளாசியுள்ளார்.

இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக மாறி இருப்பதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் உள்ளது.

Continue Reading

More in Tamil Cinema News

Trending

To Top
Exit mobile version