Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Actress

விஜய் யேசுதாஸ் மனைவி விவாகரத்து..! தனுஷால் சீரழிந்த நட்சத்திரங்கள்..! போட்டு தாக்கும் பிரபலம்..!

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் அமைதியான நடிகராக இருந்தாலும் திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து சர்ச்சைக்குரிய ஒரு நடிகராக இருந்து வந்தவர் நடிகர் தனுஷ்.

நடிகர் தனுஷிற்கும் சினிமாவில் உள்ள நிறைய பெண்களுக்கும் இடையே தொடர்பு உண்டு என்று பேச்சுக்கள் இருந்து வந்தாலும் அதை பற்றி வெளிப்படையாக ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.

திருமணத்திற்கு பிறகு தனுஷிற்கு 3 திரைப்படத்தின் போது சுருதிஹாசனுடன் தொடர்பு இருந்ததாகவே ஒரு பேச்சு உண்டு. இருந்தாலும் அதை தவிர்த்து நிறைய  நடிகைகளின் விவாகரத்துக்கு இவர் காரணமாக இருந்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

சுசித்ரா:

அப்படியாக எந்தெந்த நடிகைகளின் விவாகரத்துக்கு இவர் காரணமாக இருந்தார் என்று லிஸ்ட் போட்டு கூறுகிறார் பயில்வான் ரங்கநாதன். அவர் கூறும் போது தற்சமயம் அதிகமான சர்ச்சை தகவல்களை பேசி வரும் சுசித்ராவுடன்தான் ஆரம்பத்தில் தனுஷ் தொடர்பில் இருந்தார் என்று கூறப்படுகிறது.

---- Advertisement ----

பிறகு சுசித்ரா அதிகமாக மதுவுக்கு அடிமையானதால் அவருக்கு மனநல பாதிப்பு ஏற்பட்டது அதற்குப் பிறகு அவர் குடிப்பழக்கத்தை நிறுத்தாத காரணத்தினால் அவரது கணவர் அவரை விவாகரத்து செய்துவிட்டார் ஆனால் அதற்கு ஆரம்பத்தில் காரணமாக இருந்தவர் தனுஷ்.

திரிஷா:

அதற்குப் பிறகு திரிஷாவின் திருமணத்திலும் தனுஷ் தடையாக இருந்தார் திரிஷாவுடன் நெருங்கி பழகி வந்தார் தனுஷ். இந்த நிலையில் வருண் மணியன் என்கிற தொழிலதிபர் ஒருவர் திரிஷாவை திருமணம் செய்ய இருந்தார்.

இவர்கள் இருவருக்கும் இடையே நிச்சயதார்த்தம் நடந்தது ஆனால் நிச்சயதார்த்தத்திற்கு பிறகும் திரிஷா தொடர்ந்து தனுஷுடன் தொடர்பில் இருந்திருக்கிறார். இதனை அறிந்த வருண் மணியன் அந்த நிச்சயதார்த்தத்தை நிறுத்திவிட்டார்.

அமலாபால்:

அடுத்ததாக நடிகை அமலாபால் நடிகை அமலா பால். தலைவா படத்தில் நடித்த பொழுது அந்த படத்தின் இயக்குனரான ஏ.எல். விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

 

ஆனால் வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் நடித்தப்போது அந்த படத்தின் படப்பிடிப்பில் தனுஷுற்க்கும் அமலா பாலுக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து நடுராத்திரிகளில் எல்லாம் தனுஷிற்கு ஃபோன் செய்து அமலாபாலுடன் பேசியிருக்கிறார்.

அடிக்கடி இவர்கள் இருவரும் தனியாக அவுட்டிங் சென்றுள்ளனர். இதையெல்லாம் அறிந்த ஏ.எல் விஜய் பிறகு அமலாபாலை விவாகரத்து செய்துவிட்டார்.

சமந்தா:

அதேபோல நடிகை சமந்தாவும் நாகசைதன்யாவை விவாகரத்து செய்ததற்கு தனுஷ் தான் காரணம். தங்க மகன் திரைப்படத்தில் நடித்த பிறகு தனுஷுற்கும் சமந்தாவுக்கும் இடையே உறவு ஏற்பட்டது. அந்த உறவு நெருக்கமாக இருந்ததை கண்டுபிடித்த நாக சைதன்யா.

இது குறித்து கேட்ட பொழுது அவரிடமே ஆமாம் தனுஷுடன் உறவில் தான் இருக்கிறேன் என்று நேரடியாக கூறி இருக்கிறார் சமந்தா.இதனால் கடுப்பான நாக சைதன்யா அவரை விவாகரத்து செய்து விட்டார்.

திவ்யதர்ஷினி

அடுத்ததாக விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளினியாக இருக்கும் திவ்யதர்ஷினிவிடனும் உறவில் இருந்தார் தனுஷ். திவ்யதர்ஷினி திருமணம் ஆகி ஆறு மாதங்கள் கழித்து அவருக்கும் தனுஷ்க்கும் இருக்கும் இடையே உறவு ஏற்பட்டது.

இதனால் அவருடைய கணவருடன் அவருக்கு பிரச்சனை ஏற்பட அந்த கணவரை விட்டு பிரிந்து விட்டார் திவ்யதர்ஷினி. இப்படி தனுஷால் மற்றவர்களுக்கு விவாகரத்து ஆனது ஒரு பக்கம் என்றால் தனுஷ் உதவி செய்ததால் ஒரு ஜோடி பிரிந்து இருக்கிறது.

விஜய் ஜேசுதாஸ் மனைவி:

பிரபல பாடகர் ஜேசுதாஸின் மகனான  விஜய் ஜேசுதாஸ் விஐபி திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் பொழுது அவருடைய மனைவி தர்ஷனாவையும் படப்பிடிப்பிற்கு அழைத்து வந்திருந்தார்.

அப்பொழுது விஐபி திரைப்படத்தில் வில்லனாக நடித்த அமிதாஸ் என்னும் நபருக்கு தர்ஷனா மீது  காதல் உண்டானது. அதனை தொடர்ந்து  தர்ஷனா விஜய் யேசுதாஸை விட்டு பிரிந்து அமிதாசுடன் ஓடி விட்டார். பிறகு அவர்கள் இருவரும் தனியாக திருமணம் செய்து கொண்டனர். இந்த ஜோடிகள் சேர்வதற்கும் தனுஷ்தான் உதவி செய்தார் என்று இத்தனை விவரங்களையும் ஒரு பேட்டியில் பகிர்ந்திருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.

Continue Reading

More in Actress

Trending

To Top