Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

சூரியா ஜோ’வின் போலி வாழ்க்கை..ஜோதிகாவின் இன்னொரு முகம்.. கிழிக்கும் பிரபல நடிகர்…!

மும்பை இறக்குமதியான நடிகை ஜோதிகா தல அஜித் நடிப்பில் வெளி வந்த வாலி திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்த தன் மூலம் ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.


இதனை அடுத்து தமிழில் பல முன்னணி நடிகர்களோடு இணைந்து கதாநாயகியாக நடித்த நடிகை ஜோதிகா தமிழ் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகள், ஹிந்தி திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

ஜோவின் போலி வாழ்க்கை..

தமிழ் திரை உலகில் நடிக்கும் போது ஜோதிகாவின் நடிப்பில் வெளி வந்த பல படங்கள் மாஸ் வெற்றியை தந்தது. அடுத்து தமிழில் முன்னணி நடிகையாக ஜொலித்த இவர் நடிகர் சூர்யாவோடு இணைந்து நடித்த போது காதல் ஏற்பட்டது.

இதனை அடுத்து அடுத்தடுத்த படங்களில் இவர்கள் இணைந்து நடிக்க ஆரம்பித்த போது இவர்களது காதல் வேரூன்றி வளர ஆரம்பித்தது.

அந்த வகையில் காக்க காக்க படத்தில் இருவரும் நடித்திருந்த போது அதில் அவர்களின் கெமிஸ்ட்ரி திரையில் மட்டுமல்லாமல் ரியல் வாழ்க்கையிலும் ஒர்க்கவுட்டானது.

---- Advertisement ----

மேலும் நடிகர் சூர்யாவும் நடிகை ஜோதிகாவும் திருமணம் செய்து கொள்ள, பெற்றோர்கள் இடையே பேசிய போது நடிகர் சிவகுமார் ஜோதிகாவை திருமணம் செய்து கொள்ள பல்வேறு கண்டிஷங்களை போட்டதோடு சூர்யாவின் தங்கை பிருந்தாவின் திருமணம் முடிந்த பிறகு தான் திருமணம் என்று காரராக சொல்லி இருக்கிறார்.


இதனால் பல ஆண்டுகள் காத்திருந்து தன் தங்கையின் திருமணத்தை தான் சம்பாதித்த பணத்தின் மூலம் செய்து முடித்த சூர்யா தனது திருமணத்திற்கு ஒப்புதல் கேட்ட நிலையில் வேறு வழியின்றி நடிகர் சிவகுமார் ஒப்புக்கொள்ள திருமணம் விமர்சனையாக அன்றைய முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் நடந்தது.

ஜோதிகாவின் இன்னொரு முகம்..

திருமணத்திற்கு பிறகு திரை உலகில் தலை காட்டாமல் இருந்த ஜோதிகா மீண்டும் 36 வயதினிலே திரைப்படத்தில் நடித்ததை அடுத்து குடும்பத்திற்குள் புகைச்சல் ஏற்பட்டது.

மீண்டும் திரைப்படங்களில் நடிப்பதை விரும்பாத ஜோவின் மாமனார் சிவக்குமார் ஜோவிக்கு சில அறிவுரைகளை சொன்னதை அடுத்து வழக்கம் போல மாமனார் மற்றும் மருமகள் இடையே பனிப்போர் ஏற்பட்டது.


இதனை அடுத்து தனது கணவர் மற்றும் குழந்தைகளை அழைத்துக் கொண்டு தனது சொந்த ஊருக்கு குடி பெயர்ந்து சென்று தற்போது அதிக அளவு ஹிந்தி படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருவதோடு பல படங்களில் நடிக்க கமிட்டாக இருக்கிறார்.

கிழிக்கும் பிரபல நடிகர்..

கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்த நடிகர் சூர்யாவின் குடும்பத்தில் விரிசலை ஏற்படுத்தி நாசுக்காக கணவன் மற்றும் குழந்தைகளை மும்பைக்கு அழைத்துச் சென்று அங்கு தனிக்குடித்தனம் செய்து வரும் ஜோதிகா தனது ஜனநாயக கடமையைக் கூட அண்மையில் நடந்த தேர்தலில் செய்யவில்லை.

மேலும் இவர் திரைப்படங்களில் நடிப்பதை விரும்பாத காரணத்தால் அவர்களுக்குள் மன கசப்பு ஏற்பட்டதை அடுத்த தான் தனி குடுத்தனம் செய்ய ஜோ விருப்பப்பட்டு காய்களை நேர்த்தியான முறையில் நகர்த்தி விட்டார்.

வெளிநாட்டில் ஷூட்டிங்கில் இருந்த தளபதி விஜய் கூட தனது ஜனநாயக கடமையை செய்ய ஓட்டு போட சென்னை வந்திருந்தார். ஆனால் ஜோதிகாவோ மும்பையில் இருந்து சென்னைக்கு வந்து தனது ஜனநாயக கடமையை செய்யவில்லை.


இது தான் ஜோதிகாவின் உண்மையான முகம் திட்டம் போட்டு தான் அவர் தனது மாமனார் மீது கொண்டிருந்த கசப்புகளை நாசுக்கான முறையில் வெளிப்படுத்தி வருவதாக பிரபல சினிமா பத்திரிக்கையாளர் மற்றும் நடிகர் பயில்வான் ரங்கநாதன் கருத்துக்களை சொல்லி அதிர வைத்திருக்கிறார்.

இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவரும் ஜோதிகாவின் உண்மையான முகத்தை உரித்து காட்டி விட்டார் பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதன் என இணையத்தில் ட்ரெண்டிங் ஆகக் கூடிய வகையில் பேசி வருகிறார்கள்.

Continue Reading

More in Tamil Cinema News

Trending

To Top