Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

வனிதா விஜயகுமாரை நள்ளிரவில் ஓங்கி குத்திய நபர் இவர் தான்..! ரகசியத்தை வெளியிட்ட பிரபல நடிகர்..!

வாயாடி வனிதா அக்காவின் மகள் ஜோவிகா, பிக் பாஸ் சீசன் 7ல் பங்கேற்றது உங்கள் அனைவருக்கும் நினைவில் இருக்கலாம். தாயைப் போல பிள்ளை, நூலைப்போல சேலை என்ற பழமொழிக்கு ஏற்ப தன்னோடு போட்டுயிட்ட சக போட்டியாளரான நடிகை விசித்ராவை வாங்கு, வாங்கு என்று வாங்கிய விதத்தைப் பார்த்து அனைவரும் அதிர்ந்தது நினைவில் இருக்கலாம்.

தன் மகளைப் போலவும் இவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தாலும், பிக் பாஸை எதிர்த்து அதன் மீது கேஸ் போடுவேன் என்று தைரியமாக கூறியதோடு கமலஹாசன் மீதும் வழக்கு தொடர்வேன் என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

அதே சமயத்தில் ஒவ்வொரு முறையும் பிக் பாஸ் பற்றி தனியார் யூடியூப் சேனல்களில் ரிவ்யூ செய்து வரக்கூடிய இவரது பேச்சினை கேட்பதற்காகவே ரசிகர்கள் பலரும் காத்திருப்பார்கள். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து பிரதீப்பை வெளியேறிய பிறகு இவர் கூறிய கருத்து பலர் மத்தியிலும் பரவலாக சென்றடைந்தது.

இந்நிலையில் இவர் இரவு நேரத்தில் வெளியே சென்று வரும் போது இவரது சகோதரி வீட்டில் காரை நிறுத்தி இருந்த சமயத்தில் முகம் தெரியாத ஒருவர் வனிதாவை தாக்கிச் சென்றதின் காரணத்தால் கண்ணுக்கு கீழ் இருக்கக்கூடிய பகுதியில் காயம் ஏற்பட்டு கன்னம் வீங்கி இருந்த நிலையில் புகைப்படங்கள் இணையங்களில் வைரலாக பரவியது நினைவில் இருக்கலாம்.

இந்த நிகழ்வுக்கு காரணம் பிரதீப்பின் ஆதரவாளர்கள் அவரைப் பற்றி வனிதா பேசியதால் தான் இது போன்ற வன்முறையில் வனிதாவை தாக்கி இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. எனினும் இதனை இவர்கள் செய்தார்களா? என்பது இன்று வரை உறுதியாக தெரியவில்லை.

இந்த சம்பவத்தை அடுத்து வனிதா விஜயகுமார் ஏன் போலீசில் புகார் கொடுக்கவில்லை என்ற கேள்வியை பயில்வான் ரங்கநாதன் எழுப்பி இருக்கிறார். மேலும் சென்னையில் இருக்கும் விருவம்பாக்கம் காவல் நிலையத்தில் இருந்து வனிதாவின் போன் நம்பரை கேட்டு பல கால்கள் பறந்துள்ளதாக தெரிவித்திருக்கிறார்.

விமர்சனம் பெறுவதற்காக தான் இந்த சம்பவம் நடந்தேறி உள்ளதா? அப்படி என்றால் அவரை தாக்கியவர்கள் இவர்களுக்கு வேண்டப்பட்டவர்கள் என்பதால் தான் இவர் போலீசில் புகார் கொடுக்கவில்லையா? என்பது போன்ற அடுக்கடுக்கான சந்தேகங்களை பயில்வான் ரங்கநாதன் எழுப்பி இருக்கிறார்.

அத்தோடு வனிதா விஜயகுமார் வாயை கொடுத்து வம்படியாக உடலை புண்ணாக்கி கொண்டார் என்று விமர்சித்திருக்கும் பயில்வான் ரங்கநாதன் இந்த விஷயத்திற்கும் வனிதாவிற்கும் இடையே ஏதாவது தொடர்பு இருக்குமா? என்பது ரீதியாக சில சந்தேகங்களை எழுப்பியிருக்கிறார்.

Continue Reading
Click to comment

More in Tamil Cinema News

Trending

To Top
Exit mobile version