பிக்பாஸ் சீசன் 6 : நடந்து முடிந்திருக்கும் பிக் பாஸ் ஆறாவது சீசனில் வெற்றியாளர் யார் என்ற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. கடந்த 100 நாட்களாக நடைபெற்று வரும் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் பிக் பாஸ் போட்டியாளர்களின் தனித் திறமை வெளிப்படும் அவர்களுடைய திறமையை வெளிப்படுத்தும் விதமாக அவர்கள் செயல்படுவது மக்களை சென்றடையும் அப்படி இவர்களுடைய நடவடிக்கைகளை பார்க்கும் மக்கள் அவர்களுக்கு வாக்களிப்பதன் மூலம் அவர்களுடைய செல்வாக்கை நிலை நிறுத்துவார்கள்.
மக்கள் அளிக்கும் வாக்குகளே இந்த போட்டியின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கிறது. அதிலும் நடப்பு சீசனில் பங்குபெற்ற பிக் பாஸ் போட்டியாளர் விக்ரமனுக்கு வெளியில் இருந்து அரசியல் ரீதியான ஆதரவுகளும் வந்து கொண்டிருந்தன. இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஒரு சாதாரண தொலைக்காட்சி நிகழ்ச்சி அதிலும் இந்த நிகழ்ச்சியை ஆரம்ப நிலையில் இருந்த பொழுது இந்த நிகழ்ச்சியை தரக்குறைவாக மட்டமாக பேசியவர் போட்டியாளர் விக்ரமன்.
மட்டுமில்லாமல், தற்போது அவருக்கு ஆதரவு கொடுக்கக்கூடிய அரசியல் தலைவர்களும் பிக் பாஸ் நிகழ்ச்சியை எவ்வளவு கேவலமாக பேச முடியுமோ அவ்வளவு கேவலமாக பேசியவர்கள். அப்படி பேசிவிட்டு அதே போட்டியில் கலந்து கொள்கிறார் விக்ரமன்.
அந்த போட்டியில் இருப்பவருக்கு ஆதரவு கேட்டு பொதுவெளியில் பதிவுகளை எழுதுகின்றனர் அவருக்கு ஆதரவு கொடுக்கும் அரசியல் தலைகள். இதெல்லாம் என்ன வகையான மனநிலை என்று புரியவில்லை என்று இணையவாசிகள் திட்டி தீர்த்து வருகின்றனர்.
இது ஒரு பக்கம் இருக்க தற்பொழுது இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்று இருப்பது அஸீம் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. விக்ரமன் இரண்டாவது இடத்தையும், போட்டியாளர் ஷிவின் மூன்றாவது இடத்தையும் பிடித்திருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
ஆரம்ப முதலிலேயே பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி வந்தவர் ஆஸிம். தன்னுடைய குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும் என்பதற்காக பல விஷயங்களில் தன்னை இணைத்துக் கொண்டு தன்னுடைய பங்களிப்பை கொடுத்திருக்கிறார். தற்போது இந்த போட்டியில் வெற்றியும் பெற்று இருக்கிறார்.