Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

கூவத்தூர் ரிசார்ட்.. விடிய விடிய நடந்த கொடூரம்.. காதல் பட நடிகை சந்தியா பீச் ஹவுஸ் சம்பவம்..!

தமிழ் மலையாளம் தெலுங்கு கன்னட மொழிகளில் நடித்திருக்கும் நடிகை சந்தியா 2004-ஆம் ஆண்டு தமிழில் வெளி வந்த காதல் திரைப்படத்தில் நடித்து அனைவரையும் அசத்தியவர்.

இதையும் படிங்க: “பாவாடை கட்டிக்கிட்டு. காட்டு வேலைக்கு போவேன்.. பூ மொட்டில் அதை தடவி..” கன்னிகா ஓப்பன் டாக்..!

ஒரு இயற்பெயர் ரேவதி திரைப்படங்களில் நடிப்பதற்காக சந்தியா என்று பெயரை மாற்றிக் கொண்டார். மேலும் இவர் நடித்த முதல் படமே தமிழ்நாடு மாநில விருதையும், பிலிம்பேர் விருதையும் இவருக்கு பெற்று தந்தது.


காதல் பட நடிகை சந்தியா..

தமிழில் பல திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகை சந்தியா காதல் படத்தை அடுத்து டிஷ்யூம், வல்லவன், கூடல் நகர், கண்ணாமூச்சி, வெள்ளித்திரை, மஞ்சள் வெயில், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், நூற்றுக்கு நூறு போன்ற படங்களில் நடித்து அசத்தியிருக்கிறார்.

அடுத்து திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு குறைந்ததை அடுத்து இவர் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விட்டார். இவரது கணவர் வெங்கடேஷுக்கு பேல் பீச் என்ற பெயரில் சொந்தமாக பீச் ஹவுஸில் பண்ணை வீடு நடத்தி வருகிறார்.

இந்த வில்லாக்களில் காதலியுடன் வார விடுமுறையை கழிப்பதற்கு செல்வது அனைவரும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் காதலர்கள் தங்கி இருந்த அறையை சுத்தம் செய்யக்கூடிய பொறுப்பு சுபாஷ் என்ற நபருக்கு வழங்கப்பட்டுள்ளது.


அத்தோடு காதலர்கள் உள்ளிருக்கும் போது அந்த அறையை வெளியில் இருக்கும் கதவில் இருக்கும் தாழ்பாள் கொண்டு திறக்கக்கூடிய வசதியோடு இருந்தது பலருக்கும் தெரியாது.

கூவத்தூரில் விடிய விடிய நடந்த கொடூரம்..

இதனை சரியான சந்தர்ப்பம் பார்த்து பயன்படுத்திக் கொண்ட சுபாஷ் உள்ளே நுழைந்து காதலியிடம் பல்வேறு வகையான சில்மிஷங்களை செய்ய தன் காதலனா? என்ற சந்தேகம் ஏற்பட்டு காதலியும் விளக்கினை ஆன் செய்து விடுகிறார்.

அப்போது கட்டிலில் தனது காதலன் உறங்கி இருப்பதை பார்த்து அதிர்ந்து போன அவர் கட்டிலுக்கு அடியில் பார்த்த போது பகிர் என ஆகிவிட்டது. அத்தோடு அவனைப் பார்த்த அதிர்ச்சியில் சத்தமிட காதலியின் சத்தத்தை கேட்டு காதலன் எழுந்து விட்டான்.

பீச் ஹவுஸ் சம்பவம்..

காதலில் மீது கை வைத்த சுபாஷை விடிய விடிய அடித்து உதைத்து இருக்கிறார்கள். இதனை அடுத்து கூவத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்ததை அடுத்து காயம் அடைந்த சுபாஷை போலீசார் கைது செய்தார்கள்.

மேலும் போலீசார் சுபாஷின் அலைபேசியை பரிசோதனை செய்து பார்த்தபோது பீச் ஹவுஸில் தங்கி இருந்த பெண்கள் உடை மாற்றும் போதும் குளிக்கும் போதும் எடுத்து இருக்கக்கூடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பல இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


மேலும் பெண்களை ஆபாசமாக படம் எடுத்த ரூம் பாய் சுபாஷ் தன்னை தாக்கிய நாலு பேர் மீதும் போலீசில் புகார் கொடுத்திருக்கக் கூடிய சம்பவமானது கடுமையான அதிர்வடைகளை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: இந்த கேடு கெட்டவங்களுக்கு எல்லோர் முன்னாடியும் கிஸ் அடிச்சு அதை சொல்லுவேன்.. நடிகை பாப்ரி கோஷ் ஒரே போடு..!

இதனை அடுத்து இந்த விஷயமானது இணையங்களில் காட்டு தீ போல பரவி வருகிறது. இந்த காலத்தில் இது போன்ற விஷயங்கள் அதிக அளவு நடந்து வருவதால் எப்போதும் விழிப்புணர்வோடு தங்கும் இடங்களில் இருக்க வேண்டும் என்பதை இந்த சம்பவம் உணர்த்தியுள்ளது.

Continue Reading

More in Tamil Cinema News

Trending

To Top
Exit mobile version