அம்பானி மகன் கண்ணீர் கதை.. கோடி கோடியாய் பணம் இருந்தும் சாதிக்க முடியாத ஒரு விஷயம்..!

கடந்த சில வாரங்களாகவே இந்தியா முழுவதும் பேசப்படும் விஷயமாக முகேஷ் அம்பானியின் மகனான ஆனந்த அம்பானியின் திருமணம் குறித்த பேச்சுக்கள் இருந்து வருகின்றன. ஐயாயிரம் கோடி செலவில் முகேஷ் அம்பானி தன்னுடைய மகனுக்கு திருமணத்தை நடத்தி வருகிறார்.

இந்த திருமணத்தில் இந்தியாவில் உள்ள முக்கியமான பிரபலங்கள் பலரும் கலந்து கொள்ள வேண்டும் என்று அனைவருக்கும் பத்திரிகையும் வைத்திருக்கிறார். அதனை தொடர்ந்து திரை பிரபலங்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.

பெரும் பொருட் செலவில் திருமணம்:

அதேபோல கிரிக்கெட் வீரர்களும் கூட இந்த விழாவில் கலந்து கொண்டனர் இந்த நிலையில் முகேஷ் அம்பானி தன்னுடைய பண பலத்தை வெளி உலகத்திற்கு காட்டுவதற்காகதான் இப்படியான திருமணத்தை நடத்துகிறார் என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்து வந்தன.

அம்பானி மகன் கண்ணீர் கதை.. கோடி கோடியாய் பணம் இருந்தும் சாதிக்க முடியாத ஒரு விஷயம்..!

அதே சமயம் இவ்வளவு பணத்தையும் உழைத்து சம்பாதித்த முகேஷ் அம்பானிக்கு அதை அவர் இஷ்டத்துக்கு செலவு செய்ய உரிமை இல்லையா என்று அவருக்கு ஆதரவாகவும் குரல்கள் எழுந்தன.

இந்தியாவைப் பொறுத்தவரை நடுத்தர வர்க்கத்தினரை கடன் வாங்கி பெரிதாக திருமணத்தை நடத்துவார்கள் என்பதால் முகேஷ் அம்பானி இவ்வளவு பொருட் செலவில் அவரது மகன் திருமணத்தை நடத்துவது ஆச்சரியத்துக்குரிய விஷயமாக இல்லை என்றே கூற வேண்டும்.

ஆனால் இதற்கு முன்பு அவரது மகள்களுக்கு திருமணம் செய்த பொழுது இந்த அளவுக்கு கிராண்டாக திருமணம் செய்யாத முகேஷ் அம்பானி இப்பொழுது தன்னுடைய கடைசி மகனுக்கு மட்டும் ஏன் இவ்வளவு செலவு செய்து திருமணம் செய்கிறார் என பார்க்கும் பொழுது அதற்கு பின்னால் ஒரு கதையே இருக்கிறது.

இதுதான் காரணம்:

முகேஷ் அம்பானியின் மகனான ஆனந்த் அம்பானி சிறு வயது முதலே ஆஸ்துமா பிரச்சனைகளால் அதிகமாக அவதிப்பட்டு இருக்கிறார். இந்த நிலையில் உலகத்தரம் வாய்ந்த மருத்துவர்களிடம் இதற்காக சிகிச்சை பெற்று வந்திருக்கிறார்.

இதற்காக கொடுக்கப்பட்ட மாத்திரைகள் ஆஸ்துமாவை ஓரளவு குறைத்திருக்கிறது. ஆனால் அதே சமயம் அவரது உடல் எடையை மிகவும் அதிகரித்துவிட்டன இந்த மாத்திரைகள்.

இதனை தொடர்ந்து கிட்டத்தட்ட 200 கிலோவுக்கும் அதிகமான உடல் எடைக்கு சென்றிருக்கிறார் ஆனந்த் அம்பானி. இதனால் பொது வெளியில் சுற்றுவது கூட கடினமான விஷயமாக அவருக்கு மாறவே அமெரிக்காவை சேர்ந்த புகழ்பெற்ற ஒரு உடல் எடை குறைப்பாளரிடம் சென்று மருத்துவம் பார்த்தார் ஆனந்த் அம்பானி.

அம்பானி மகன் கண்ணீர் கதை.. கோடி கோடியாய் பணம் இருந்தும் சாதிக்க முடியாத ஒரு விஷயம்..!

அவர் மருந்து மாத்திரைகள் மூலமாக உடல் எடையை குறைக்க முடியாது ஏனெனில் ஏற்கனவே ஆஸ்துமாவிற்கான மருந்துகளை எடுத்துக் கொள்கிறீர்கள். எனவே இயற்கை முறையில்தான் குறைக்க வேண்டும் என்று உணவு கட்டுப்பாடு மூலம் முகேஷ் அம்பானியின் உடல் எடையை குறைக்க உதவியிருக்கிறார்.

அதனை தொடர்ந்து சில வருடங்களிலேயே 100 கிலோவுக்கும் அதிகமாக உடல் எடையை குறைத்து சாதனை படைத்தார் ஆனந்த் அம்பானி. இருந்தாலும் தொடர்ந்து ஆஸ்துமாவிற்க்கான மாத்திரைகளை எடுத்துக் கொள்வதால் மீண்டும் அவரது உடல் எடை அதிகரித்துவிட்டது.

இதனால் ஆனந்த் அம்பானி மிகவும் விரக்தி அடைந்து இருப்பதாக கூறப்படுகிறது. எனவேதான் அவரது விரக்தியை போக்குவதற்கும் அவருக்கு ஏற்பட்ட தாழ்வு மனப்பான்மையை நீக்குவதற்கும் இவ்வளவு செலவு செய்து முகேஷ் அம்பானி இந்த திருமணத்தை நடத்துகிறார் என்று கூறப்படுகிறது