Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

எனக்கும் பட வாய்ப்பு வேணும்ல.. கிளாமரில் இறங்கி அடிக்கும் பிக்பாஸ் பூர்ணிமா..! அதுக்குன்னு இம்புட்டு இறக்கமா..?

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக மிகப் பெரிய அளவில் பிரபலமானவர்தான் பூர்ணிமா ரவி. இவர் முன்னதாக யூடியூபில் பல்வேறு குறும்படங்களில் நடித்ததன் மூலமாக அராத்து ஆனந்தியாக எல்லோரது மனதிலும் இடம் பிடித்தார்.

ஆராத் ஆனந்தியாக இவர் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆகியதன் மூலமாகத்தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர் வாய்ப்பு இவருக்கு தேடிவந்தது.

பூர்ணிமா ரவி:

வேலூரில் பிறந்து வளர்ந்தவரான நடிகை பூர்ணிமாவுக்கு 28 வயது ஆகிறது. பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை வேலூரில் முடித்த அவர் சென்னைக்கு வந்து மீடியா உலகில் இருந்த ஆர்வத்தின் மூலமாக தன்னுடைய திறமைகளை வளர்த்துக் கொண்டார்.

இவர் நடித்த குறும்படங்களாக கூலாறு, காதல் காரிகை, ஒடுக்கம் கேளாயோ ,என் வாழ்வில்,ஹே சண்டக்காரி உள்ளிட்ட குறும்படங்கள் வெளியாகி பூர்ணிமா ரவி மிகப்பெரிய அளவில் பிரபலமாக்கியது.

குறிப்பாக இவரது கலகலப்பான நடிப்பு ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து இழுத்தது. வெகு சீக்கிரத்திலேயே இவர் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டார்.

அராத் ஆனந்தியாக பூர்ணிமா:

இது தவிர வெளிப் பாறையோ, கண்ட கனவு உள்ளிட்ட சில ஆல்பம் பாடல்களில் இவர் நடித்திருக்கிறார். Youtubeகளிலேயே மிகவும் பிரபலமான யூடியூப் சேனல் ஆன பிளாக் ஷீப் சேனலில் இவர் பல்வேறு குறும்படங்கள் மற்றும் வெப் தொடர்களில் நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார் .

இதனால் பிளாக் ஷீப்பில் டிஜிட்டல் விருது, பிஹைண்ட்வுட்ஸ் விருது ,ரேடியோ சிட்டியின் பெண்கள் பொழுது பொழுதுபோக்கு உள்ளிட்ட விருதுகளை பெற்று கவுரவிக்கப்பட்டிருக்கிறார்.

இப்படியாக பூர்ணிமா ஆரம்ப காலகட்டத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக தனது திறமையை வளர்த்துக்கொண்டு பின்னர் சினிமாவில் அடி எடுத்து வைத்து இன்று பிரபல நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார்.

பிக்பாஸில் வாய்ப்பு:

திரைப் பின் பலமே இல்லாத குடும்பத்தில் இருந்து வளர்ந்து தனது கனவு மட்டும் லட்சியத்தை மட்டுமே கொண்டு இன்று ஜெயித்து காட்டி இருக்கிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது இவர் மாயாவுடன் நெருங்கி பழகி மாயாவின் நட்பின் மூலமாக மிகப்பெரிய அளவில் பேசப்பட்டார்.

இதனிடையே எப்போதும் தனது சமூக வலைதளங்களில் அழகழகான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார் பூர்ணிமா ரவி.

இதன் மூலம் அவருக்கு திரைப்பட வாய்ப்புகளும் குவிய தொடங்கியது. முன்னதாக பிளான் பண்ணி பண்ணனும் படத்தின் மூலமாக வெள்ளித்திரையில் அறிமுகமான பூர்ணிமா பலரது கவனத்தை ஈர்த்தார் .

பின்னர் பட வாய்ப்பு கிடைக்காத பட்சத்தில் சின்னத்திரையில் ரியாலிட்டி ஷோ மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று தான் யார் என்று தொடர்ந்து மக்களுக்கு அறிமுகப்படுத்திக் கொண்டே இருந்தார்.

படவாய்ப்பிற்காக பலே கவர்ச்சி:

தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகளுக்காக தனது சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக புகைப்படங்களை பதிவிட்டு வரும் பூர்ணிமா ரவி தற்போது ட்ரெடிஷனல் மற்றும் மாடரன் உடைகளில் வித்தியாசமாக கவர்ச்சி காட்டி கிறுகிறுக்க வைத்திருக்கிறார்.

கருப்பு நிற சேலையில் அதில் இடுப்பழகை ஹாட்டாக காட்டி போஸ் கொடுத்திருக்கும் இந்த புகைப்படத்திற்கு நெட்டிசன்ஸ் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகிறது .

அதே நேரத்தில் மாடர்ன் உடையில் கிறுகிறுக்க வைக்கும் வகையில் போஸ் கொடுத்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பட வாய்ப்புக்காக என்னென்னமோ பண்றாங்க பாவம் இவர்களுக்கு யாரும் வாய்ப்பு கொடுக்க மாட்டேங்கிறாங்களே என நெட்டிசன்ஸ் பரிதாபப்பட்டு கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Continue Reading

More in Tamil Cinema News

Trending

To Top
Exit mobile version