விஜய் டிவியின் பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் சுஜா வருணி. அதற்கு முன்பு அவர் திரைப்படங்கள் நடித்து இருந்தாலும் பெரிய அளவில் பாப்புலர் ஆக்கியது பிக் பாஸ் தான்.
அவருக்கு அப்பா இல்லை என்பது பற்றி சுஜா பேசியது அனைவைரையும் மிகவும் எமோஷ்னல் ஆக்கியது.பிக்பாஸில் இருந்து வெளியில் வந்த பிறகு சுஜா அவரது காதலர் சிவகுமாரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு தற்போது சிம்பா என்ற ஒரு மகனும் இருக்கிறார்.
சுஜா மற்றும் சிவா இருவரும் சேர்ந்து ஒரு youtube சேனலும் நடத்தி வருகின்றனர். தமிழில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சுஜா வருணி. அவர் தமிழில் ‘அப்புச்சி கிராமம்’, ‘பென்சில்’, ‘கிடாரி’ ஆகிய படங்களில் வெயிட்டான கேரக்டரில் நடித்துள்ளார்.
தற்போது சுஜா வருணி ‘வைகை எக்ஸ்பிரஸ்’, ‘சதுரம்-2’ ஆகிய படங்களில் கேரக்டர் ரோலில் நடித்து வருகிறார். மலையாளத்தில் ‘அச்சயன்ஸ்’ படம் மூலம் மீண்டும் என்ட்ரியானார்.தமிழில் கவர்ச்சி நடிகையாக வலம்வந்த நேரத்தில் மலையாளத்தில் பல படங்களில் குத்துப் பாட்டுக்கு நடனமாடி வந்தார் சுஜா வாருணி.
ஆனால், தற்போதைய மலையாள ரீ-என்ட்ரியில் கவர்ச்சிகரமாக நடிக்கப் போவதில்லை என்று கூறியுள்ளார்.மேலும் தமிழில் படங்களில் நடித்தது போன்று அழுத்தமான கேரக்டரை தேர்ந்தெடுத்து நடிக்கப்போகிறாராம்.
மேலும், மலையாள டைரக்டர்கள் மீண்டும் தன்னை குத்துப்பாட்டு நடிகை என்கிற பட்டம் கொடுத்துவிடக்கூடாது என்பதற்காக தமிழ் படங்களில் தான் நடித்த கேரக்டர்களை அவர்களிடம் சொல்லி வாய்ப்பு கேட்க உள்ளார் நடிகை சுஜா வாருணி.
இந்நிலையில், பட வாய்ப்புகளை பெற தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.