பிரியங்கா காந்தியின் உதவியாளர் மீது வழக்கு பதிவு ! பிக் பாஸ் பிரபலம் காட்டம்

காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் உதவியாளர் சந்தீப் குமார் மீது கொலைமிரட்டல் விடுத்ததாகக் கூறி பிக்பாஸ் புகழ் அர்ச்சனா கவுதமின் தந்தை, வழக்குப் பதிவு செய்துள்ளார்.

கிடைக்கப்பட்ட தகவலின் படி , மீரட்டில் உள்ள பார்தாபூர் காவல் நிலையத்தில் 504 (அமைதியை கெடுக்கும் நோக்கத்துடன் வேண்டுமென்றே அவமதிப்பு), 506 (குற்றவியல் மிரட்டல்) மற்றும் எஸ்சி/எஸ்டி சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

புகாரில், அர்ச்சனா கௌதமின் தந்தை, தனது மகளுக்கு “கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும்” “சாதிவெறி வார்த்தைகளும் பேசப்பட்டதாகவும்” தெரிவித்துள்ளார்.

புகார் குறித்த தகவலை அர்ச்சனா கவுதம் தனது  ஃபேஸ்புக்கில் கணக்கில் தெரிவித்துள்ளார். சம்பவத்தன்று பிரியங்கா காந்தியின் அழைப்பின் பேரில், தனது மகள் பிப்ரவரி 26, 2023 அன்று சத்தீஸ்கரில் உள்ள ராய்ப்பூருக்கு காங்கிரஸ் பொது மாநாட்டில் கலந்து கொள்ள சென்றதாகவும் , நிகழ்ச்சியில், அர்ச்சனா கவுதம் பிரியங்கா காந்தியின் உதவியாளரிடம் தனக்கும் காங்கிரஸ் பொதுச் செயலாளருக்கும் இடையே ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்யுமாறு கேட்டுருக்கிறார்.

இதற்க்கு அர்ச்சனாவை பிரியங்கா காந்திக்கு அறிமுகப்படுத்த அவருடைய உதவியாளர் சந்தீப் குமார் மறுத்துவிட்டார். மேலும் அர்ச்சனாவிடம் அநாகரீகமாக  ஜாதிவெறி வார்த்தைகள் மற்றும் தவறான வார்த்தைகளை பயன்படுத்திஇருக்கிறார். இது தவிர, கொலை மிரட்டலும் விடுத்திருக்கிறார்.”

இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மீரட் நகர எஸ்பி பியூஷ் சிங், இந்த விவகாரத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியிருக்கிறார்.

இந்த நிலையில் ,முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரும், காங்கிரஸ் தலைவருமான அர்ச்சனா கவுதமை மிரட்டியதாக காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்திக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் விசாரணை தீவிரமாக வருவதாகவும் செய்திகள் வெளியாகிறது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

தமிழ் சினிமாவின் பிரபலமாக வளர்ந்து வரும் நடிகைகளில் மிக முக்கியமானவராக கீர்த்தி சுரேஷ் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் சினிமாவிற்கு வந்த …

Exit mobile version