மத்திய அரசின் சூப்பர் மெகா திட்டம் என்று சொல்லப்படக்கூடிய அனைவருக்கும் ஓய்வூதியம் என்ற என் பி எஸ் திட்டமானது ஓய்வு பெறும் காலத்தில் குடிமக்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை தரக்கூடிய திட்டம் என்று கூறலாம்.
முதுமையில் பயன்படக்கூடிய இந்த திட்டமானது சேமிக்கும் பழக்கத்தை அனைவரிடையே ஏற்படுத்தும் நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தத் திட்டத்திற்காக நீங்கள் உங்கள் பணத்தை அஞ்சல் துறை, பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான நிறுவனங்களில் நீங்கள் கணக்கை ஆரம்பித்து சேமிக்கலாம். இதற்காக பருமனண்ட் ரிட்டயர்மென்ட் அக்கவுண்ட் நம்பர் எனப்படும் பிரான் (PRAN) எண் உங்களுக்கு கொடுக்கப்படும்.
மேலும் 18 வயது முதல் 55 வயது வரை உள்ளவர்கள் எந்த திட்டத்தின் கீழ் சேர்ந்து பயனடையலாம். மத்திய அரசு ஊழியர்கள், மாநில அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், தனிநபர்கள் என அனைவரும் பயன்பெறும் வகையில் இந்த திட்டமானது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
முதலில் இந்தத் திட்டத்தில் சேருவதற்காக நீங்கள் ரூபாய் 600 செலுத்த வேண்டும். பின்னர் மாத மாதம் குறைந்த பட்சம் 100 ரூபாய் என்ற வீதத்தில் உங்கள் கணக்கில் பணத்தை செலுத்துவது மிகவும் நல்லது. குறைந்தபட்சம் இந்த 100 ரூபாய் ஆனது நீங்கள் செலுத்தும் போது இதே தொகையை மத்திய அரசும் உங்களுக்கான கணக்கு செலுத்தும் அதுவும் முதல் நான்கு வருடங்கள் மட்டுமே.
இந்தத் திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக பன்னிரண்டாயிரம் ரூபாய் வரை மாதம் செலுத்துபவர்கள், மத்திய அரசின் ஆயிரம் ரூபாய் கிடைக்கும். அதற்கு மேல் செலுத்துபவர்களுக்கு எந்த சலுகை இல்லை.
மேலும் 60 வயதாகும் போது நீங்கள் உங்கள் கணக்கில் இருக்கும் தொகையிலிருந்து 60% எடுத்துக் கொள்ளலாம். மீதித் தொகையை மாதா மாதம் வாழ்நாள் முழுவதும் பென்ஷனாக 8% முதல் 12% வரை கூடுதல் வட்டியோடு பெற முடியும்.
NPSஅதுமட்டுமல்லாமல் இந்தத் திட்டத்தில் ஆட்களை சேர்ப்பதன் மூலம் மகளிர் சுய உதவிக் குழு, இல்லத்தரசிகள், மாணவர்கள், பகுதி நேர வேலை தேடுபவர்கள் என அனைவருக்கும் முகவராக செயல்பட வாய்ப்பு உள்ளதோடு அதன் மூலமும் வருமானம் ஈட்ட நல்ல திட்டமாக உள்ளது.
எனவே வயதான காலத்தை நல்ல முறையில் கழிப்பதற்காகவும், உங்களது பொருளாதாரத்தை அதிகரித்துக் கொள்ளவும், இந்த திட்டத்தில் நீங்கள் பணத்தினை முதலீடு செய்வது சிறப்பாக இருக்கும்.