சைத்ரா ரெட்டி (Chaitra Reddy) சீரியல் நடிகையாக ரசிகர்களின் மனம் கவர்ந்தவர். உயரமான உடல் அமைப்பும், வட்டமான முகமும், கூர்மையான பார்வையும் கொண்டு, முக பாவங்களில் நவரசம் காட்டும் இளம் நடிகையாக இருக்கிறார்.தற்போது, ‘கயல்’ சீரியலில் பிஸியாக நடித்து வருகிறார் சைத்ரா ரெட்டி. இவர்,ஜீ தமிழ் தொலைக்காட்சியில் யாரடி நீ மோகினி என்ற தொடரில், ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர் சைத்ரா ரெட்டி.
அந்த சீரியலில் ஸ்வேதா என்ற பெயரில் நெகட்டிவ் ரோலில் நடித்திருந்தார்.இப்போது, சன் டிவியில் இவர் நடித்த கயல் சீரியல் பரபரப்பாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இதில், ஆல்யா மானசா கணவர், சஞ்சீவ், கார்த்திக் என்ற கேரக்டரில் நடிக்கிறார். இவர்தான், இந்த நாடகத்தில், கயல் கதாபாத்திரத்தின் ஜோடியாக உள்ளார்.
வழக்கமாக, இப்போது தமிழ் சீரியல்கள் பலவும், ஹீரோயினிசம் கொண்டவையாகவே இருக்கின்றன, பெரிய திரையான சினிமாவில், எப்படி ஹீரோயிசம் நிறைந்த படங்களாக வருகிறோ, அதே போல் டிவி சீரியல்களில் பெண்களை மையப்படுத்தும், பெண்கள் போராடி சாதனை படைப்பவர்களாக, எதிரிகளின் சதி திட்டங்களை முறியடிப்பவர்களாகவே, காட்டப்படுகி்ன்றனர். இந்த சீரியலும் அந்த வகையில் சேர்ந்ததுதான்.
Chaitra Reddyதன்னை சுற்றி நடக்கும் தனக்கு எதிரான விஷயங்களை, குடும்ப சிக்கல்களை, எதிர்மறை எண்ணம் கொண்டவர்களால் தனக்கு ஏற்படுத்தும் துன்பங்களை தனது புத்திசாலித்தனத்தால், கயல் என்ற கதாபாத்திரம் வெல்வது போன்ற கதைதான் இதுவும்.
கயல் கேரக்டரில் நடித்துள்ள சைத்ரா ரெட்டி, கடந்தாண்டு வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் வெளிவந்த வலிமை படத்திலும் ஒரு கேரக்டரில் நடித்திருந்தார். போலீஸ் அதிகாரி தலைமையின் கீழ், கம்ப்யூட்டர் செக்ஷனில் சைபர் க்ரைம் பிரிவில் பணிபுரியும் ஒரு பெண் போலீஸ் கேரக்டரில் இவர் நடித்திருந்தார்.
சைத்ரா ரெட்டி, கயல் நாடகத்தில் நடிக்கும் நேரம் போக, மற்ற நேரங்களில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவ்வாக இருக்கிறார். அவ்வப்போது, தனது படங்கள், வீடியோக்களை அப்டேட் செய்கிறார். அழகான, கவர்ச்சியான இவரது புகைப்படங்களை காண, ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. அதனால், லைக்ஸ் தெறிக்கிறது. கமெண்ட்டுகள் குவிகிறது.
சமீபத்தில், வெளிநாடு சென்றிருந்த சைத்ரா ரெட்டி, அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அந்த படங்கள், டிரெண்டிங் ஆகின. இப்போது, மீண்டும் சுடிதாரிலும், நார்மல் டிரஸ்சிலும் எடுத்த புகைப்படங்களை சைத்ரா ரெட்டி பதிவேற்றம் செய்திருக்கிறார். அந்த படங்களிலும், அவரது இளமையான அழகு, ரசிகர்களை தெறிக்க விடுகிறது.
கடந்த 10, 20 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் வெளியூர் சென்றாலே, அதிர்ஷ்டவசமாக வெளிநாடுகளுக்குச் சென்றாலோ அங்கே கேமராவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பிரிண்ட் எடுத்து, நண்பர்களை உறவினர்களை நேரில் சந்திக்கும் போது, அந்த புகைப்பட ஆல்பங்களை நேரில் காட்டி சந்தோஷப்படும் நிலை இருந்தது. ஆனால், இன்று எங்கு எப்போது புகைப்படம் எடுத்துக்கொண்டாலும், அடுத்த சில விநாடிகளில் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், அவர்கள் கண்டு ரசிக்கும்படியான மொபைல் போன் தொழில்நுட்பம் ஆச்சரியப்படுத்துகிறது.
Chaitra Reddyஆனால், இது பொதுமக்களை காட்டிலும் சினிமா நடிகைகளுக்குத்தான் அதிகமாக பயன்படுகிறது. அந்த வகையில், சீரியல் நடிகை சைத்ரா ரெட்டியும், தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு, ரசிகர்களை குளிர்ச்சிப்படுத்தி வருகிறார்.
மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து, தமிழகம் இணையத்தை படியுங்கள்.