Tuesday, September 24

விஜய் இடம் வாய்ப்பு கேட்டேனா? அப்பவே வேண்டாம்னு சொல்லிட்டாரா.. கோபத்தில் கொந்தளித்த சிம்ரன்..

நடிகை சிம்ரன் பற்றி உங்களுக்கு அதிகளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவர் நடித்த காலகட்டத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்ததோடு மட்டுமல்லாமல் இவருக்கு என்று ஏராளமான ரசிகர்கள் தென்னிந்திய திரை உலகில் இருந்தார்கள்.

மேலும் இவர் இடுப்பை வெட்டி, வெட்டி ஆடுகின்ற அழகை பார்ப்பதற்காகவே ஒரு தனி ரசிகப்பட இருந்ததோடு மட்டுமல்லாமல் இவர் நடிப்பை பற்றி ரசிகர்கள் பேசாத நாட்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு இவர் மீது கிறுக்கு பிடித்து இருந்தார்கள்.

விஜய் இடம் வாய்ப்பு கேட்டேனா?

அந்த வகையில் தமிழ் திரை உலகில் பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்து ரசிகர்களின் கனவு கனியாக வாழ்ந்த இவர் இதுவரை வாய்ப்பு தேடி யாரையும் அணுகியது இல்லை என்ற விஷயத்தை அண்மை பேட்டி ஒன்று பேசி இருக்கிறார்.

மேலும் திரைப்படங்களில் நடித்து பிக்கில் இருக்கும் போதே இவர் திருமணம் செய்து கொண்டு குழந்தை குட்டி என்று செட்டில் ஆன பிறகு தற்போது தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்து இருக்கிறார்.

இதைத்தொடர்ந்து தனது வாய்ப்புக்காக தளபதி விஜய் சந்தித்ததாகவும் தனது சொந்த படத்தில் அவரை நடிக்க வைக்க கால்சீட் கேட்டதாகவும் இதைத் தொடர்ந்து தளபதி விஜய் அவரை அமர வைத்து அட்வைஸ் செய்ததாகவும் இணையம் முழுவதும் தகவல்கள் வேகமாக பரவியது.

இந்த நிலையில் நடிகை சிம்ரன் பற்றி அப்பட்டமாக வெளி வந்திருக்கும் அந்த விஷயங்களுக்கு பதில் அளிக்க கூடிய வகையில் பேட்டி ஒன்றில் சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

அப்பவே வேண்டாம்னு சொல்லிட்டாரா..

அந்தப் பேட்டியில் தான் ஆரம்பகாலத்தில் பலரிடம் வாய்ப்பு கேட்டதாக தகவல்கள் வெளி வந்துள்ளது. அது நிச்சயமான உண்மை அல்ல. இது வரை யாரிடமும் நான் வாய்ப்பைத் தேடி சென்றதும் இல்லை. கேட்டதும் இல்லை என்ற உண்மையை ஓப்பன் ஆக சொல்லி இருக்கிறார்.

மேலும் தன்னை பற்றி நடிக்கின்ற காலத்தில் வந்த விஷயங்களுக்கு எந்த ஒரு பதிலையும் சொல்லாமல் இருந்ததற்கு காரணம் அன்று நான் படு பிஸியாக இருந்ததின் காரணத்தால் தான் அதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் என் பணியில் கவனத்தை செலுத்தி வந்தேன் என்பதையும் கூறுகிறார்.

இந்நிலையில் விஜயை வைத்து சிம்ரனால் படம் எடுக்க முடியுமா? அதுவும் ஒரு மாஸ் ஹீரோ அவரின் கடைசி படம் இவ்வளவு விஷயங்கள் அதில் உள்ள போது இந்த மாதிரியான தகவல் எப்படி கசிந்தது.

தற்போது கடைசி படத்தில் நடிக்க கூடிய நிலையில் இருக்கும் இவரிடம் சிம்ரன் எப்போது படத்தில் நடிக்க கால்சீட் கேட்டார் என்பதும் தெரியவில்லை என செய்யாறு பாலு பேட்டியில் பேசி இருக்கிறார்.

மேலும் தன்னை பற்றி ஏதாவது தகவல்கள் கிடைத்தால் அதை உறுதி செய்ய தன்னிடம் போன் செய்து கூட கேட்கலாம் என்று சிம்ரன் தெரிவித்து இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் சிம்ரன் ஒரு புத்திசாலியை தனமான நடிகை என்பதை உணர்த்தக்கூடிய வகையில் இந்த கிராஸ் செக் செய்யுங்கள் என்று சொல்லப்பட்டு இருக்கும் விஷயம் உள்ளதாக செய்யாறு பாலு பேசினார்.

கோபத்தில் கொந்தளித்த சிம்ரன்..

துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் விஜய் உடன் இணைந்து நடித்திருக்க கூடிய சிம்ரன் அந்த காட்சிகளில் எப்படி நடித்திருந்தார். இதில் கலெக்டர் ஓடி வருவது போன்ற ஒரு காட்சி இதை எப்படி மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று சிம்ரனுக்கும் ஒரு டவுட் ஏற்பட்டு இருக்கிறது.

எனினும் இந்த படம் தெலுங்கில் டப் செய்யப்பட்ட போது பூமிகா நடித்திருந்தார் அங்கும் என்ற படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. மேலும் ஹீரோ முதல் டைரக்டர் வரை கலந்து ஆலோசித்த பின்பு தான் இந்த காட்சி வைக்கப்பட்டது என்று சொன்ன பிறகு சிம்ரன் அதை ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

இந்த விஷயத்தை எதற்காக செய்யாறு பாலு கூறினார் என்றால் அந்தகன் படத்தில் பழைய முகங்களை எல்லாம் தியாகராஜன் நடிக்க வைத்து இருந்த அதில் சிம்ரன் நடிப்பு குறிப்பிடத்தக்க கூடிய வகையில் இருந்தது.

மேலும் திறமைசாலியான நடிகை சிம்ரன் குறித்து படம் எடுக்க போவதாகவும் வாய்ப்புக்காக அழைப்பதாகவும் இணையங்களில் வெளி வந்த விஷயம் அவரை கடுமையாக பாதித்துள்ளது. எனவே சிம்ரனின் கோபத்தில் அர்த்தம் இருப்பதாக செய்யாறு பாலு அந்த பேட்டியில் பேசி முடித்தார்.