தோள்ல கை போட்டு.. அந்த உறுப்பில் முத்தம் கொடுத்தான்.. வைரமுத்து குறித்து சின்மயி அம்மா..!

தோள்ல கை போட்டு.. அந்த உறுப்பில் முத்தம் கொடுத்தான்.. வைரமுத்து குறித்து சின்மயி அம்மா..!

தமிழில் பாடல்கள் பாடும் பாடகிகளில் சிறப்பான குரல் அம்சத்தை கொண்ட சில பாடகிகளில் முக்கியமானவர் பாடகி சின்மயி. கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தில் வரும் ”ஒரு தெய்வம் தந்த பூவே” என்கிற பாடல் மூலமாக தமிழ் சினிமாவிற்கு பாடகியாக  அறிமுகமானார்.

ஏ.ஆர் ரஹ்மான் இசையில் சிறப்பான பாடல் வரிகளுடன் வெளியான அந்த பாடல் அப்போது பெரும் வரவேற்பை பெற்றது. இதனால் சின்மயிக்கும் எக்கச்சக்கமான வாய்ப்புகளும் வரவேற்புகளும் வர துவங்கின. பெரும்பாலும் அப்பொழுது ஏ.ஆர் ரஹ்மானின் பாடல்களுக்கு வைரமுத்துதான் பாடல் வரிகளை எழுதி வந்தார்.

வைரமுத்து குறித்து சின்மயி:

திரைத்துறையில் நடக்கும் பாலியல் சீண்டல்கள் குறித்து மீ.டூ என்கிற பிரச்சனை சர்வதேச அளவில் பேசப்பட்ட பொழுது தனக்கும் பாலியல் சீண்டல்கள் நடந்திருப்பதாக வெளிப்படையாக தமிழில் குரல் கொடுத்த முதல் பிரபலம் சின்மயி என்று கூறலாம்.

தோள்ல கை போட்டு.. அந்த உறுப்பில் முத்தம் கொடுத்தான்.. வைரமுத்து குறித்து சின்மயி அம்மா..!

கவிஞர் வைரமுத்துவால் நடந்த பாலியல் சீண்டல்கள் குறித்து அவர் வெளிப்படையாக கூறியதை அடுத்து பல்வேறு விளைவுகளை சந்தித்தார் சின்மயி. இதனை தொடர்ந்து வைரமுத்துவிற்கும் சின்மயிக்கும் இடையே பெரும் பிரச்சனையே இருந்து வந்தது.

சின்மயிக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலவிதமான கருத்துக்கள் அப்போது எழுந்து வந்தன. ஆனால் இது எதற்குமே பயப்படாமல் இப்போது வரை சின்மயி பெண்களுக்கு ஆதரவாக பல கருத்துக்களை பேசிக்கொண்டுதான் இருக்கிறார்.

தாய் வெளியிட்ட தகவல்:

இந்த நிலையில் தன்னுடைய மகளுக்கு நடந்த பாலியல் அத்துமீறல் குறித்து சின்மயியின் அம்மாவான பத்மாசினி ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது ஒருமுறை வைரமுத்து எனது மகளுக்கு போன் செய்து ”தேசிய விருதுக்கு உங்களுடைய பெயரை பரிந்துரைக்கப் போகிறேன், விரைவாக வாருங்கள்” என்று கூறியிருந்தார்.

இதனை அடுத்து நானும் என்னுடைய மகளும் வைரமுத்துவின் இடத்திற்கு சென்றோம். நான் காரில் இருந்து இறங்குவதற்கு முன்பே சின்மயி வைரமுத்துவை பார்க்க சென்று விட்டார். நான் மாடிப்படிக்கட்டுகளில் ஏறி வரும்பொழுது கலைந்த முடியோடு கையில் செருப்போடு கீழே பயந்து ஓடி வந்து கொண்டிருந்தார் சின்மயி.

தோள்ல கை போட்டு.. அந்த உறுப்பில் முத்தம் கொடுத்தான்.. வைரமுத்து குறித்து சின்மயி அம்மா..!

அப்பொழுதே ஏதோ தவறாக நடந்துவிட்டது என்று எனக்கு தெரிந்தது. உடனே நான் அவரை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்து விட்டேன். வைரமுத்துவிற்கு பெரிய சினிமா பின்புலம் இருந்த காரணத்தினால் அவரைக் குறித்து போலீசில் சொல்வதற்கெல்லாம் எனக்கு தைரியம் வரவில்லை.

முத்தம் கொடுத்தார்:

மானம் மற்றும் கௌரவத்திற்கு பயந்து அப்பொழுது நான் அந்த விஷயத்தை மறைத்து விட்டேன். எனது மகளிடம் கேட்கும் பொழுது வைரமுத்து தனது தோள் மீது கை போட்டு நெற்றியில் முத்தம் கொடுத்ததாக எனது மகள் கூறினார்.

கண்டிப்பாக இது குறித்து வைரமுத்துவிடம் கேட்டிருந்தால் அன்பின் வெளிப்பாடாகதான் அந்த முத்தத்தை கொடுத்தேன் என்று சொல்லி இருப்பார். ஆனால் ஒரு பெண்ணுக்கு ஆண் சீண்டும் போது  அது நல்ல தொடுதலா? அல்லது கெட்ட தொடுதலா? என்பதை அறிய முடியும்.

சின்மயி அப்படி பயந்து ஓடி வரும் பொழுது அது எப்படிப்பட்ட தொடுதல் என்பது தெரிந்து விட்டது. மீ டூ பிரச்சனை மூலமாக வைரமுத்து குறித்து அவர் பேசிய பொழுதும் இந்த விஷயங்களை வெளியிட வேண்டாம் என்றுதான் நான் கூறினேன். ஆனால் இப்பொழுது அவர் வெளியிட்டது எவ்வளவு நல்லது என்று எனக்குத் தெரிகிறது என்று கூறி இருக்கிறார் சின்மயியின் தாயார்.