ரெண்டு பேரும் ஒரே நாளில் மோதிக்கிட்டோம்.. அப்ப இருந்த வலி இப்ப சரியாயிடுச்சு.. கோப்ரா பட இயக்குனர் குறித்து பேசிய விக்ரம்!.

ரெண்டு பேரும் ஒரே நாளில் மோதிக்கிட்டோம்.. அப்ப இருந்த வலி இப்ப சரியாயிடுச்சு.. கோப்ரா பட இயக்குனர் குறித்து பேசிய விக்ரம்!.

தமிழில் தொடர்ந்து வித்தியாசமான திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடுத்து வருபவர் நடிகர் விக்ரம் இருந்து வருகிறார். பெரும்பாலும் விக்ரம் நடிக்கும் திரைப்படங்களில் புதிய புதிய கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்துதான் நடித்து வருகிறார்.

இயக்குனர் பாலா இயக்கிய சேது படத்திற்கு பிறகு விக்ரம் நடிக்கும் திரைப்படங்களில் நிறைய மாற்றங்கள் இருந்தன. தொடர்ந்து அவர் நடித்த பிதாமகன் திரைப்படத்திலும் முக்கியமான ஒரு கதாபாத்திரமாகதான் நடித்திருந்தார் விக்ரம்.

சியான் விக்ரம்:

இதனாலேயே நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார்.  ஆனால் விக்ரம் நடிக்கும் எல்லா திரைப்படங்களும் பெரும் வெற்றி என்பது கிடைப்பது கிடையாது. பெரும்பாலும் அருள், சாமி மாதிரியான அவரது கமர்சியல் திரைப்படங்களுக்கு கிடைக்கும் வெற்றி இந்த மாதிரியான மாறுபட்ட கதைகளுக்கு கிடைப்பது கிடையாது.

ரெண்டு பேரும் ஒரே நாளில் மோதிக்கிட்டோம்.. அப்ப இருந்த வலி இப்ப சரியாயிடுச்சு.. கோப்ரா பட இயக்குனர் குறித்து பேசிய விக்ரம்!.

அதை அவரே கூட நிறைய பேட்டிகளில் கூறி வருந்தி இருக்கிறார். இந்த நிலையில் தற்சமயம் தங்கலான் திரைப்படத்திற்கு மிகவும் அதிக உழைப்பை வெளிப்படுத்தினார் விக்ரம். இந்த திரைப்படத்தை மிகவும் அவர் நம்பியும் இருந்தார்.

அப்ப இருந்த வலி:

அதை கெடுக்காத வகையில் தங்கலான் திரைப்படம் தற்சமயம் பெரிய வெற்றியை கொடுத்திருக்கிறது. தங்கலான் திரைப்படத்திற்கு முன்பு விக்ரம் நடிப்பில் வெளியான திரைப்படம் கோப்ரா. இந்த திரைப்படத்தில் பல வேஷங்களில் வருவார் விக்ரம்.

இந்த திரைப்படம் தூம் திரைப்படத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டிருந்தது திருடுவதற்காக பல வேஷங்களை விக்ரம் போடுவதாக இந்த படம் இருக்கும் அந்த திரைப்படம் குறித்து சமீபத்தில் தங்கலான் திரைப்படத்தின் வெற்றி விழாவில் பேசியிருந்தார் விக்ரம். அதில் அவர் கூறும் பொழுது கோப்ரா திரைப்படத்திற்காக மிகவும் பாடுபட்டு நடித்து இருந்தேன். அந்த திரைப்படத்தில் என்னுடைய சில கதாபாத்திரங்களை மிகவும் சிறப்பாக நடித்திருந்தேன்.

ரெண்டு பேரும் ஒரே நாளில் மோதிக்கிட்டோம்.. அப்ப இருந்த வலி இப்ப சரியாயிடுச்சு.. கோப்ரா பட இயக்குனர் குறித்து பேசிய விக்ரம்!.

இயக்குனர் குறித்து பேசிய விக்ரம்

ஆனாலும் அந்த படத்திற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. ஒரு படம் நன்றாக ஓடினால்தான் அதில் உள்ள நடிப்புக்கும் வரவேற்பு கிடைக்கிறது. இப்பொழுது எனக்கு திருப்தியாக இருக்கிறது. என்னால் இந்த விஷயங்களை மேடையில் பேச முடிகிறது.

முக்கியமாக கோப்ரா திரைப்படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்துவின் டிமான்டி காலணி 2 திரைப்படமும் என் படம் வெளியாகும் பொழுது வெளியாகி இருக்கிறது. அந்த திரைப்படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. அது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இருவரும் போட்டி போட்டு கொண்டு இப்படி படம் வெளியாகும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை என்று இப்பொழுது பேட்டியில் பேசியிருக்கிறார் நடிகர் விக்ரம்.

About Janett J

Avatar Of Janett J

Check Also

“80 வயசுலயும் ரொமான்ஸ் சக்சஸ் ஆகணும்னா இதை பண்ணனும்..” கூச்சமின்றி ஓப்பனாக பேசிய நடிகை நதியா..!

“80 வயசுலயும் ரொமான்ஸ் சக்சஸ் ஆகணும்னா இதை பண்ணனும்..” கூச்சமின்றி ஓப்பனாக பேசிய நடிகை நதியா..!

விகடன் நிறுவனம் குறித்து உங்கள் மத்தியில் அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. பத்திரிக்கை துறையில் பிரபலமான நிறுவனமாக …