கண்ணுக்கு மை அழகு, கவிதைக்கு பொய்யழகு, கார் கூந்தல் பெண்ணழகு என்று பாடியிருக்கிறார்கள். இந்தப் பாட்டை கேட்கும் போது கூந்தலின் எவ்வளவு முக்கியம் என்பதை புரிந்து இருப்பீர்கள். அப்படிப்பட்ட கூந்தலில் இருந்து கோடைகாலத்தில் உதிர்கின்ற முடியை அப்படியே உதிரவிடாமல் செய்யக்கூடிய அருமையான ரெசிபி பற்றி தான் இந்த கட்டுரையில் நாம் பார்க்க போகிறோம்.
இந்த ரெசிபியானது உங்கள் முடி வளர்ச்சியை தூண்டுவதோடு முடி உதிர்வதை தடுக்கக்கூடிய ஆற்றல் கொண்டது. வீட்டில் இருக்கும் எளிய பொருட்களை கொண்டே நீங்கள் இதை மிக நேர்த்தியாக செய்து முடித்து விடலாம்.
கருவேப்பிலை மோர் ரெசிபி செய்வதற்கு தேவையான பொருட்கள்
1.தயிர் அரை கப்
2.கருவேப்பிலை 20
3.பெருங்காயத்தூள் கால் டீஸ்பூன்
4.இஞ்சி சிறு துண்டு
5.பச்சை மிளகாய் 3
6.சீரகம் கால் டீஸ்பூன்
7.தண்ணீர் ஒன்றரை கப்
8.உப்பு சுவைக்கு ஏற்ப
செய்முறை
முதலில் இந்த கருவேப்பிலை மோர் செய்வதற்கு நீங்கள் ஒரு மிக்ஸி ஜாரில் இஞ்சி, கருவேப்பிலை ,பச்சை மிளகாய், சீரகம் இவற்றை நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்வது மிகவும் நல்லது.
இதனை அடுத்து நீங்கள் அரைத்து வைத்திருக்கும் இந்த கலவையோடு ஒரு கப் அளவு தயிரை சேர்த்து மீண்டும் ஒரு முறை நன்கு அடித்துக் கொள்ளுங்கள்.
பிறகு மீண்டும் ஒரு கப் அளவு தண்ணீர் சேர்த்து அதில் உப்பு மற்றும் பெருங்காயத் தூள் போட்டு மீண்டும் இரண்டு சுற்றுக்கள் நன்கு அடித்துக் கொள்ளுங்கள்.
இப்போது உங்கள் முடி உதிர்களை கட்டுப்படுத்தக்கூடிய கருவேப்பிலை மோர் ரெசிபி தயாராகிவிட்டது. இதை நீங்கள் வடிகட்டியும் குடிக்கலாம் இல்லையென்றால் அப்படியேவும் குடிக்கலாம்.
கோடையில் உங்களைத் தாக்கக்கூடிய உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடிய இந்த கருவேப்பிலை மோரை வாரத்தில் ஒரு முறை குடும்பத்தோடு அனைவரும் குடித்து நல்ல பயன் பெறுங்கள்.