Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

ரம்பாவுடன் சண்டை.. என்ன காரணம்..? ரகசியம் உடைத்த நடிகை தேவயாணி..!

இயக்குனர் அகத்தியன் இயக்கிய காதல் கோட்டை திரைப்படத்தில் அஜித்தோடு பார்க்காமலேயே காதல் செய்து பல்லாயிரக்கணக்கான தமிழக ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் நிரந்தர இடத்தை பிடித்துக் கொண்ட நடிகை தேவயாணி, ரம்பா உடன் ஏற்பட்ட சண்டைக்கு என்ன காரணம் என்ற ரகசியத்தை தற்போது உடைத்திருக்கிறார். அது பற்றிய விரிவான பதிவை இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவயாணி..

தென்னிந்திய மொழிகளில் அதிக அளவு திரைப்படங்களில் நடித்து தமிழ் படத்தில் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்த நடிகை தேவயாணி பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை.


பார்ப்பதற்கே ஹோமிலியான லுக்கில் காட்சி அளிக்கும் இவர் அதிக அளவு கவர்ச்சி காட்டாமல் குடும்ப பாங்கான கேரக்டர் ரோல்களை தேர்வு செய்து நடிப்பதில் வல்லவர். சில சமயம் கவர்ச்சி படத்துக்கு தேவைப்படும் என்று சொல்லும் போது கவர்ச்சி காட்டவும் தயங்கமாட்டார்.

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்களாக விளங்கும் அனைவரோடும் இணைந்து நடித்திருக்கும் இவர் சரத்குமாரோடு சூரியவம்சம் படத்தில் நடித்த போது செய்த இட்லி உப்புமாவை யாரும் எளிதில் மறக்க மாட்டார்கள்.

இவர் இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்து கொண்டதை அடுத்து தற்போது இரண்டு பெண் பிள்ளைகளுக்கு தாயாராக விளங்குகிறார். மேலும் சீரியல்களிலும் நடித்து இருக்கக்கூடிய இவர் என்றுமே எவர்கிரீன் நடிகையாக திகழ்கிறார்.

---- Advertisement ----

படப்பிடிப்பில் சண்டை..

இவரும் ரம்பாவும் இணைந்து நினைத்தேன் வந்தாய் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தில் இவர்கள் நடிப்பு மெச்சி கொள்ளும்படி இருந்தது.


மேலும் இந்த படத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டில் நாங்கள் இருவரும் இருக்கும் போது எங்கே சண்டை போட்டுக் கொள்வோம் என்று அனைவருமே பயந்து இருக்கிறார்கள். அந்த அளவு துரு துருவென்று இருக்கக்கூடிய மிகவும் ஸ்வீட்டான தோழியாக ரம்பா விளங்கினார்.

அந்த ஷூட்டிங் ஸ்பாட்டில் நாங்கள் இருவரும் மிகச்சிறந்த தோழிகளாக இருந்தோம். ஒவ்வொரு ஷூட்டிங்கும் என்ஜாய் செய்து நடித்திருந்தோம். எனினும் எங்களுக்குள் எந்தவிதமான சண்டையோ, சிக்கல்களோ ஏற்பட்டதில்லை.

மேலும் நானும் ரம்பாவும் சகோதரிகளை போல பழகி இருக்கிறோம். எங்களுக்குள் எந்த வித்தியாசமும் இல்லை. இன்று வரை இந்த நட்பு தொடர்வது எனக்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுத்து உள்ளதாக தேவயானி கூறி இருக்கிறார்.

இதனை அடுத்து தனக்கு இன்று நடிகை ரம்பா ஒரு மிகச்சிறந்த தோழியாக விளங்குகிறார் என்ற உண்மை விஷயத்தை உடைத்து கூறியிருக்கிறார். மேலும் நடிகை தேவயானி பேசிய பேச்சு இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு இவர்களுக்குள் இவ்வளவு ஒற்றுமையா என்று ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்து விட்டது.

இதை அடுத்து ரசிகர் ஒருவர் இன்ஸ்டா பக்கத்தில் அன்புச் சகோதரிக்கு அழகையும் நல்ல குணத்தையும் ஆண்டவன் கொடுத்து வைத்திருக்கிறார். அதனால் நீங்களும் கொடுத்து வைத்தவர்கள். கடவுளை உங்கள் முகத்தில் நான் பார்க்கிறேன் என கமெண்ட் செய்திருக்கிறார்.

இன்னும் சிலர் ரசிகர்கள் இவர்களது நட்பு இப்படியே நல்ல முறை தொடர இறைவனை வேண்டுவதாக தெரிவித்திருக்கிறார்கள். நீங்களும் அந்தப் படத்தை கட்டாயம் அந்த படத்தில் எவ்வளவு அழகாக இருவரும் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள் என்பது உங்களுக்கே தெரிய வரும்.

Continue Reading
Click to comment

More in Tamil Cinema News

Trending

To Top