மைக் கிடைச்சா.. கண்டத பேசலாமா..? – இயக்குனர் நெல்சனின் கருத்தால் வெடித்த சர்ச்சை..!

சென்னையில் நியூ கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் முடித்தவர், ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் உதவி ஸ்கிரிப்ட் டைரக்டராக இருந்தவர் நெல்சன்.

இவர் பல படங்களுக்கு உதவி டைரக்டராகவும், எழுத்தாளராகவும் இருந்துள்ளார், எனினும் இவர் முதலிலே இயக்கிய திரைப்படம் ‘கோலமாவு கோகிலா’ இதில் நயன்தாரா, யோகி பாபு, சரண்யா, வடிவேல் பாலாஜி, மொட்டை ராஜேந்திரன் போன்ற பலரும் நடித்திருந்தனர். மேலும் திரைப்படத்தின் நகைச்சுவை காட்சிகளை சிறப்பாக அமைத்திருப்பார் நெல்சன்.

கோலமாவு கோகிலா, டாக்டர், மிருகம், ஜெயிலர் போன்ற திரைப்படங்கள் இவரது இயக்கத்தில் குறிப்பிடத்தக்கது. இளைய தளபதி விஜயின் 65 ஆவது படமான பீஸ்ட் திரைப்படத்தை இயக்கியவர் இயக்குனர் நெல்சன். மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் 169 வது படமாக உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தையும் இவரை இயக்கியுள்ளார்.

என் நிலையில் தற்போது உலக திரையரங்குகள் அனைத்திலும் வெளியாகி பிரம்மாண்ட வெற்றியைப் பெற்ற சரித்திர கால திரைப்படம் ஆன பொன்னியின் செல்வன் பற்றிய சர்ச்சையான கருத்தை நெல்சன் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பு இயக்குனர் வெற்றிமாறனும் ராஜராஜ சோழனை இந்துவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள் என்று கூறியதால் பெரும் பரபரப்பும் சர்ச்சையும் ஏற்பட்டது. அந்த சர்ச்சை ஓய்வதற்குள் நெல்சனின் இந்த கருத்தை இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.

நெல்சன் கூறியதாவது, அரசர்கள் கோவிலை கட்டினார்கள், பெரிய கோட்டைகளை கட்டினார்கள், ஏரிகளை கட்டினார்கள் என்றால் ,அவர்கள் மக்களின் வரிப்பணத்தில் தானே அவற்றையெல்லாம் செய்தார்கள் கோவில், ஏரி, கோட்டைகளை கட்டுவதற்கு அனைத்து மக்களுமே தான் கடுமையாக உழைத்தார்கள்.

உழைக்காமலேயே பிறப்பின் அடிப்படையிலேயே அதெப்படி சில சாதிகள் மட்டும் கோயிலை, கோட்டையை , நிலத்தை, அதிகாரத்தை சொந்தம் கொண்டாடிவிட முடியும்.

அரண்மனையும் அந்தப்புரம் மட்டுமே நமது வரலாறு அல்ல,  “புதினம் ஒருபோதும் வரலாறு இல்லை” என்ற நெல்சரின் கருத்தால் பரபரப்பு அதிகமாகியுள்ளது.

எந்த தைரியத்தில் தமிழ்நாட்டில் தமிழினங்களையும் தமிழையும் குறை கூறி பேசுகிறார்கள் கருத்துக்களை தெரிவிக்கிறார்கள் என்று ரசிகர்கள் தமிழ் மன்னர்களின் வரலாற்றை பற்றி படம் எடுத்து அதில் அவர்களை நெற்றியில் திருநீறு உடன் காட்டினால் போதுமே … தங்களது கோபத்தை பதிவு செய்து வருகிறார்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகளாக அதிக பிரபலமாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சுருதிஹாசன். பெரிதாக நடிப்பின் மீது …