சினிமாவுக்கு வரும்பொழுது ஒவ்வொரு இயக்குனருக்கும் ஒரு கனவு என்பது இருக்கும். ஏதாவது ஒரு படத்தை எடுத்து முடிப்பது அவர்களது பெரும் சாதனையாக இருக்கும்.
உதாரணத்திற்கு சுந்தர் சிக்கு சங்கமித்ரா என்கிற ஒரு திரைப்படம் எடுக்க வேண்டும் என்கிற கனவு உண்டு. அதேபோல லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகும் பொழுதே ஹாலிவுட் இயக்குனர் டெரண்டினோ போல 10 திரைப்படங்கள் தான் மொத்தமே எடுக்க வேண்டும் பத்தும் ரத்த காட்சிகள் கொண்ட திரைப்படங்களாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.
இவருக்கே இப்படி ஆயிடுச்சே
அதேபோல இயக்குனர் ராஜமௌலிக்கு மகாபாரத கதையை திரைப்படமாக்க வேண்டும் என்பது கனவாக இருந்து வருகிறது. இந்த வரிசையில் இயக்குனர் ஷங்கருக்கும் ஒரு கனவு உண்டு. அதுதான் வேள்பாரி கதை.
எழுத்தாளர் சு வெங்கடேசன் எழுதி விகடனில் வார இதழாக வெளிவந்து அதிக வரவேற்பை பெற்ற நாவல்தான் வேள்பாரி சேர சோழ பாண்டியர்களுக்கு முன்பு வாழ்ந்த வேள்பாரி என்கிற மன்னனின் கதையை அடிப்படையாகக் கொண்ட இந்த கதையை படமாக்க வேண்டும் என்பது சங்கரின் வாழ்நாள் கனவாக இருந்து வருகிறது.
கனவை உடைத்த திரைப்படம்
இதற்காக பல தயாரிப்பாளர்களிடமும் அவர் பேசி வருகிறார். ஏற்கனவே இந்த படத்திற்கு வேலைகளையும் அவரும் முடித்து விட்டார் ஏனெனில் வேள்பாரி திரைப்படத்தை பொறுத்தவரை இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படமாக தான் இருக்கும்.
எப்படியும் இதற்கு ஒரு ஆயிரம் கோடி ரூபாயாவது செலவாகும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் வேள்பாரி நாவலில் வரும் சில காட்சிகளை வேறு படங்களில் பயன்படுத்தியிருப்பதாக தற்சமயம் ஷங்கர் வேதனை தெரிவித்து இருக்கிறார்.
சுக்கு நூறான ஷங்கர்
மேலும் அவர் கூறும்பொழுது தொடர்ந்து இந்த மாதிரி யாராவது செய்தால் நான் பிறகு வழக்கு போட வேண்டி இருக்கும். எனவே வேள்பாரி நாவலில் இருந்து எதையும் திருடாதீர்கள் என்று கூறியிருக்கிறார். நேற்று தேவாரா திரைப்படத்தின் டிரைலர் ஒன்று வெளியாகியிருந்தது.
அந்த ட்ரெயிலரில் வேள்பாரி நாவலில் வரும் காட்சிகள் சில இடம்பெற்று இருப்பதாக பேச்சுகள் இருக்கின்றன. அதுதான் இயக்குனர் ஷங்கருக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்றும் கூறப்படுகிறது.