சன் டிவியில் ஒளிபரப்பாகும் செவ்வந்தி என்னும் சீரியலில் நடித்ததின் மூலம் பிரபலமானவர்தான் திவ்யா ஸ்ரீதர் ( Divya Sridhar ). இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் செல்லம்மா சீரியல் கதாநாயகன் அர்னவ்வை காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.
திவ்யாவின் வீட்டில் செல்ல சம்மதிக்காத நிலையிலும் மதம் மாறி திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆகி சில மாதங்களிலேயே வந்து சர்ச்சைகள் சின்னத்திரையில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
சில காலம் கழித்து கர்ப்பமாக இருப்பதாக அர்னாவிடம் திவ்யா அறிவித்தார். ஆனால் அர்னவ் குழந்தை வேண்டாம் என்று கூறியதாகவும். தன்னை கணவர் அர்னவ் உதைத்து கொடுமைப்படுத்தியதாக புகார் கூறினார். அதனால் போலீசார் அர்னவை கைது செய்து சிறையில் அடைத்தனர் அதன் பின் ஜாமீனில் அவர் வெளியில் வந்தார்.
சீரியலில் டீம் தான் திவ்யாக்கு வளைகாப்பு செய்தது அதன் பின் பிரசவத்தில் திவ்யா ஸ்ரீதருக்கு பெண் குழந்தை பிறந்தது. எனினும் தற்போது திவ்ய ஸ்ரீதர் தனது குழந்தை போட்டோவை வெளியிட்ட உருக்கமாக பேசியிருக்கிறார்.
அந்த புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது. இதுவரை அர்னாவ் குழந்தையை பார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் ஈகோவை விட்டுவிட்டு குழந்தையை பார்க்க செல்லுங்கள் என ரசிகர்கள் இன்ஸ்டாகிராம் அவருக்கு அட்வைஸ் கூறியுள்ள்ளனர்.
கணவர் கைவிட்டு நிழலில் தற்போது திவ்யா ஸ்ரீதர் கைக்கு குழந்தையுடன் தைரியமாக தனியாக சூட்டிங் செல்கிறாராம். இதற்கு காரணமாக சில நாட்கள் செவ்வந்தி தொடரில் திவ்யா ஸ்ரீதர் நடிக்கவில்லை. அவர் சீரியலை விட்டு விலகி விட்டதாக பல வதந்திகள் கிளம்பியதால் ரசிகர்களும் வருத்தமடைந்தனர்.
இந்நிலையில், இரண்டு மாதங்களுக்குப் பிறகு தனது கை குழந்தைகளுக்கு கார் சூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து இறங்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தது அம்மா செய்யாத வேலையோ.. அவள் விரும்பாத பணியோ.. முத்தமிடாத குழந்தையோ இல்லை.. வேலைக்குச் செல்லும் அம்மா எல்லாவற்றையும் செய்கிறாள். மீண்டும் வேலைக்கு செல்கிறேன்.. என்பதை என பதிவிட்டு உள்ளார்.
சோசியல் மீடியாவில் தற்போது இந்த வீடியோவை வைரலாகி வரும் நிலையில் இருக்கும் பலரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர். மேலும் இவரை அவருடைய கணவர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிட்ட தக்கது