வளைகாப்பு முடிஞ்சாச்சு…. பாப்பா பிறந்ததும் ரைடு போக புது கார் வாங்கிய திவ்யா ஸ்ரீதர்…!!

 சின்னத்திரை சீரியல் நடிகையான திவ்யா ஸ்ரீதர் தற்போது மாசமாக இருக்கிறார். இவர் கேளடி கண்மணி சீரியல் நடித்ததின் மூலம் பிரபலமானவர்.

 மேலும் இந்த சீரியலில் தன்னோடு இணைந்து நடித்த சக நடிகரான  அர்னவ்வை உருக உருக காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனை அடுத்து தான் கர்ப்பமாக இருக்கக்கூடிய அந்த சந்தோஷமான தகவல்களை மீடியாவில் ஷேர் செய்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

 இதனைத் தொடர்ந்து கண் பட்டது போல அக்டோபர் மாதம் திவ்யாவுக்கும் அவரது கணவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு இதன் காரணமாக அவர் எனது மனைவியின் வயிற்றில் அடித்து உதைத்ததின் காரணமாக கரு கலையும் அபாயம் ஏற்பட்டதாக வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

அத்தோடு நின்று விடாமல் காவல் நிலையத்திலும் புகார் கொடுத்து தனது கணவரை கைது செய்தார். இதன் பிறகு இவர் ஜாமினில் தற்போது வெளிவந்திருக்கிறார்.

 தற்போது தனது கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வரும் நடிகை திவ்யா கடந்த சில மாதங்களுக்கு முன்பு செவ்வந்தி சீரியலில் பணியாற்றும் நடிகைகள் மற்றும் நடிகர்கள் இணைந்து இவருக்கு வளைகாப்பை நடத்தி அசத்தியிருந்தார்கள்.

 இந்த வீடியோவும் இன்ஸ்டாகிராமில் வெளிவந்து மகிழ்ச்சியை ரசிகர்கள் முன்னால் ஏற்படுத்தியது. இதனை அடுத்து இவர் தற்போது புதிய கார் ஒன்றை வாங்கி இருக்கிறார்.

இந்த மகிழ்ச்சியை, அந்த கார் வாங்கிய நிமிடங்களை ரசிகர்களோடு பகிர்ந்து கொள்ள அதை வீடியோவாக மாற்றி  ரீல்சில் அது தற்போது வெளிவந்துள்ளது.

இதனைப் பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் இவருக்கு மகிழ்ச்சியை தெரிவித்து இருப்பதோடு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் விரைவில் சுகப்பிரசவம் ஆகி குழந்தையோடு நீங்கள் இந்த காரில் குதுகலமாக உலா வர வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …