“உஷாரய்யா உஷாரு… !” – இனிமே இந்த பழம் PLUS இந்த பழத்தை ஒன்னா சேர்த்து சாப்பிடாதீங்க..!!

மனித உடலுக்கு தேவையான ஆற்றலையும் உடலில் இருக்கும் பல விதமான நச்சுக்களையும் வெளியேற்றக்கூடிய சக்தி இந்த பழங்களுக்கு உள்ளது. எனவே தான் பழங்களை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் கூறி இருக்கிறார்கள்.

ஆனால் குறிப்பிட்ட பழங்களை குறிப்பிட்ட பழங்களோடு இணைத்து சாப்பிடுவதால் எண்ணற்ற பக்க விளைவுகள் ஏற்படுகிறது. இதனை தவிர்த்து அதிலிருந்து தப்பித்துக் கொள்ள எந்தெந்த பழங்களை நீங்கள் சேர்த்து சாப்பிடக்கூடாது என்பதை பற்றி இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

சேர்த்து சாப்பிடக்கூடாத பழங்கள்

நீங்கள் கொய்யாப்பழம் சாப்பிடுகிறீர்கள் என்றால் அந்த கொய்யாப்பழத்தை சாப்பிடும் போது வாழைப்பழத்தை ஒன்றாக சேர்த்து சாப்பிட்டால் தீமை ஏற்படும். இதனால் உங்களுக்கு வாய் தொல்லை, குமட்டல் போன்ற பக்க விளைவுகள் ஏற்படுவதால் கொய்யாவையும் வாழைப்பழத்தையும் ஒன்றாக சாப்பிடாதீர்கள்.

அதுபோலவே நீங்கள் பச்சையாக கேரட் சாப்பிடும்போது ஆரஞ்சு இணைத்து சாப்பிடும் போது உங்களுக்கு சிறுநீரகத்தில் மோசமான விளைவுகள் ஏற்படும். அது மட்டுமல்லாமல் இந்த கலவை பித்தத்தை அதிகப்படுத்தி நெஞ்செரிச்சல் கூடுதலாக கொடுக்கும். எனவே கேரட் மற்றும் ஆரஞ்சு ஒன்றாக இணைத்து சாப்பிட வேண்டாம்.

உடலுக்கு சக்தியை தரக்கூடிய பப்பாளி பழத்தையும் எப்போதுமே நம் உடலுக்கு நன்மையை செய்யும் எலுமிச்சை பழத்தையும் ஒன்றாக சாப்பிடுவதால் உடலில் ரத்தத்தில் இருக்கக்கூடிய ஹீமோகுளோபின் அளவு குறைய வைக்கிறதாம். எனவே இந்த கலவையை கட்டாயம் உங்கள் குழந்தைகளுக்கு கொடுத்து ரத்தத்தில் இருக்கும் ஹீமோகுளோபின் அளவை குறைத்து விடாதீர்கள்.

பாலுடன் ஆரஞ்சு பழத்தை சேர்த்து சாப்பிடுவதால் செரிமான பிரச்சனைகள் ஏற்படும். எனவே பாலையும் ஆரஞ்சுயும் ஒன்றோடு ஒன்று இணைத்தோ சிறு இடைவேளை விட்டு அருந்துவதோ தவறானதாகும்.

அண்ணாச்சி பழத்தில் இருக்கும் வேதிப்பொருளான ப்ரோமிலைன் பாலுடன் கலக்கும் போது வாயு தொந்தரவு, தலைவலி, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே அன்னாச்சி பழம் சாப்பிட்ட பிறகும் அல்லது இரண்டையும் ஒன்றாக சாப்பிடாதீர்கள்.

எந்த பழத்தையும் நீங்கள் சாப்பிடும் போது காய்கறிகளோடு இணைத்து சாப்பிடக்கூடாது. ஏனெனில் பழங்களில் சர்க்கரை சத்து அதிகமாக இருக்கும் அவை காய்கறிகளோடு சேர்ந்து சாப்பிடுவதால் செரிமான தொல்லை ஏற்பட்டு உடலில் நஞ்சு பொருளாக மாறி உங்களுக்கு வயிற்றுப்போக்கை தூண்டிவிடும். எனவே அப்படி நீங்கள் செய்யாதீர்கள்.

மாதுளம் பழம் மற்றும் ஆப்ரிகாட் போன்ற பழங்களில் நிறைய புரதம் மற்றும் சர்க்கரை உள்ளது.  இந்த  பழங்களையும் ஒன்றாக சாப்பிட்டால் செரிமான பிரச்சனைகள் ஏற்படும். நெஞ்செரிச்சல் போன்றவை ஏற்படும். எனவே அதை தவிர்த்து விடுங்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

தமிழ் சினிமாவின் பிரபலமாக வளர்ந்து வரும் நடிகைகளில் மிக முக்கியமானவராக கீர்த்தி சுரேஷ் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் சினிமாவிற்கு வந்த …