Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

ஜாக்கிரதை.. அவன் ஆபத்தானவன்..? முதல் மனைவி உலக அழகி.. துரோகம்.. அசிங்கம்..!

தமிழ் திரையரங்கில் சுப்ரீம் ஸ்டாராக இருக்கும் நடிகர் சரத்குமாரின் முதல் தார மகளான நடிகை வரலட்சுமி திருமண தாய்லாண்டில் கோலாகலமாக நடந்து முடிந்து உள்ளது.

இவர் மும்பையை சேர்ந்த தொழில் அதிபரான நிக்கோலாய் சச்தேவ் என்பவரை காதலிக்க வருவதாகவும் விரைவில் திருமணம் என்று அறிவித்ததை அடுத்து ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய சலசலப்பு ஏற்பட்டது.

நடிகை வரலட்சுமி என் திருமணம்..

இதற்குக் காரணம் நடிகர் விஷாலை வரலட்சுமி காதலித்து வருவதாக திரையுலகில் கிசுகிசுக்கள் எழுந்ததோடு மட்டுமல்லாமல் நடிகை வரலட்சுமிக்காக பல வகைகளில் விஷால் குரல் கொடுத்து இருந்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.

மேலும் விஷால் சரத்குமாரை நடிகர் சங்க தேர்தலில் அவமானப்படுத்தியதை அடுத்த தான் இவர்கள் காதல் பிரேக்கப் ஆனதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இரண்டாவது திருமணத்தை செய்து கொண்டு விஷாலுக்கு பதிலடி தந்திருக்கிறார் என்ற வகையில் இணையங்களில் விஷயங்கள் உலா வருகிறது.

நடிகை வரலட்சுமி பொறுத்த வரை தென்னிந்திய மொழி படங்களில் நடித்திருக்கிறார். தமிழைப் பொறுத்த வரை 2012-ஆம் ஆண்டு வெளி வந்த போடா போடி என்ற திரைப்படத்தில் நடித்ததை அடுத்து இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தது.

மேலும் 2016-ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளி வந்த தாரை தப்பட்டை படம் ஆனது இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல ரீச்சை பெற்று தந்ததோடு இவரது நடிப்பும் வெகுவாக ரசிகர்களின் மத்தியில் மட்டுமல்லாமல் வெகுஜுன மத்தியிலும் பாராட்டுதல்களை பெற்றது.

இந்த சூழ்நிலையில் தாய்லாந்தில் கோலாகலமாக நடைபெற்று முடிந்த வரலட்சுமி திருமணம் பற்றி பிரபல திரைப்பட விமர்சகர் காந்தராஜா பகிர்ந்திருக்கும் சில விஷயங்கள் வைரலாக இணையத்தில் பரவி வருகிறது.

ஆபத்தானவன்.. ஜாக்கிரதை..

ஏற்கனவே திருமணம் ஆன நிக்கோலாய் சச்தேவ் வரலட்சுமியை இரண்டாம் தரமாக திருமணம் செய்து கொள்ளப் போகின்ற விஷயமும் அவருக்கு திருமண வயதில் ஒரு பெண் இருப்பதும் ரசிகர்களின் மனதில் பல்வேறு விதமான சந்தேகங்களை கிளப்பியது.

மேலும் இந்தியாவில் திருமணம் செய்து கொள்ளாமல் தாய் நாட்டில் சென்று திருமணம் செய்து கொள்ள என்ன அவசியம் என்ற கேள்வியை எழுப்பியதோடு அந்த திருமணத்திற்கு சரத்குமார் தான் அனைவருக்கும் டிக்கெட் போட்டு அழைத்துச் சென்று இருக்கிறார் என்ற பகீர் தகவலும் வெளி வந்தது.

மேலும் இவர் திருமணம் செய்து கொண்ட முதல் மனைவி ஒரு மிகச்சிறந்த அழகி என்பதோடு மட்டுமல்லாமல் இவர்களுக்குள் ஏன் கருத்து வேற்றுமை ஏற்பட்டது என்பது பற்றி ரசிகர்கள் சிந்திக்க ஆரம்பித்தார்கள்.

ஒருவேளை நிக்கோலாய் ஆபத்தானவராக இருக்கலாம் அல்லது முதல் மனைவிக்கு துரோகம் செய்து டார்ச்சை தந்து இருக்கலாம். அத்துடன் பல பெண்களோடு தொடர்பில் இருக்கலாம் என்பது போன்ற விஷயங்களை அனுமானத்தோடு பேசி இருக்கிறார்.

இந்த திருமணத்திற்கு முதல் மனைவி சாயாதேவி கூட வரவில்லை என்று சொன்னதை அடுத்து ஒரு வேளை சாயாதேவியை சரியான வகையில் அவரது மகள் வரலட்சுமி நடத்தி இருக்காமல் இருக்கலாம் என்ற குண்டையும் தூக்கி போட்டார்.

முதல் மனைவி உலக அழகி..

வரலட்சுமி நிக்கோலாய் சச்தேவ்வை தனது 39 ஆவது வயதில் திருமணம் செய்து கொண்டிருப்பதை அடுத்து இது ஒரு லேட் மேரேஜ் என்பதை தொகுப்பாளர் பேசியதை அடுத்து மருத்துவர் காந்த ராஜா இதனால் குழந்தை பேறு ஏற்படுவதில் சிக்கல் ஏற்படும் என்பதை சொன்னார்.

இந்தியாவில் இவர்களது திருமணம் நடந்திருந்தால் சட்ட சிக்கல் ஏற்படலாம் என்பதை அடுத்து தாய்லாந்தில் வைத்து நடத்தி இருக்கலாம். இதற்கு காரணம் திருமண வயதில் ஒரு பெண் இருக்கும்போது மற்றொரு பெண்ணை திருமணம் செய்வது தவறாக கருதப்படும் அல்லவா?

மேலும் இந்த திருமணமானது ஒரு சமூக செக்யூரிட்டிக்காக தான் நடந்து உள்ளது தவிர இதில் காதல் ஏதும் இருக்காது ஏனென்றால் ஏற்கனவே திருமணம் ஆகி பல பெண்களோடு அவர் தொடர்பில் கூட இருந்திருக்கலாம் என மருத்துவர் காந்தராஜா பகிர்ந்த விஷயமானது தற்போது இணையத்தில் காட்டு தீ போல் பரவி வருகிறது.

Continue Reading

More in Tamil Cinema News

Trending

To Top
Exit mobile version