எல்லோருக்குமே முக பொலி-வாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகளவு உள்ளது. குறிப்பாக காலை எழுந்து மாலை வரையும் உங்கள் முகம் பிரஷ்ஷாக இருக்க வேண்டுமென்றால் இந்த கட்டுரையில் கூறப்பட்டிருக்கும் குறிப்புக்களை நீங்கள் ஃபாலோ செய்தாலே டல்லான முகம் மாறி ஈசியாக பளிச் என்று மாற்றி விடலாம்.
இதற்காக நீங்கள் காலையில் எழுந்தவுடன் முகத்தில் எலுமிச்சை பழத்தை நன்கு தேய்த்து விட்டு பத்து நிமிடங்களுக்குப் பிறகு உங்கள் முகத்தை ஃபேஸ்வாசக் கொண்டு கழுவி விடுங்கள். இதன் மூலம் முகத்தில் படிந்திருக்கும் கறைகள் நீங்கி உங்கள் முகம் பளிச்சென்ற தோற்றத்தில் மாலை வரை இருக்கும்.
வீட்டில் எலுமிச்சை பழம் இல்லை என்ன செய்வது என்று தடுமாறுபவர்கள் சிரமம் இல்லாமல் வீட்டில் இருக்கும் தக்காளியை எடுத்து அதை மிக்ஸியில் லைட்டாக அடித்து அப்படியே உங்கள் முகத்தில் பூசி பொறுமையாக ஐந்து நிமிடங்கள் மசாஜ் செய்து விடுங்கள்.
இதனை அடுத்து உங்கள் முகத்தை குளிர்ந்த நீரை கொண்டு கழுவி விடுவதின் மூலம் முகம் பொலிவாக மாறுவதோடு முகத்தில் இருக்கும் மருக்கள் நீங்கி மென்மையாகி விடும்.
அது மட்டுமல்லாமல் காலையில் நீங்கள் முகத்தில் குளிர்ந்த பாலை கொண்டு கழுவுவதின் மூலம் உங்கள் முகம் பிரகாசமாகவும், மென்மையாகவும் மாறும்.மேலும் குளிர்ந்த பால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளையும் மாற்றிவிடும்.
தேனை கொண்டு உங்கள் முகத்தில் இருக்கும் பூனை முடிகளை அகற்றவும் சருமத்தின் நிறத்தை மேம்படுத்தவும் முடியும்.இதற்கு இரண்டு ஸ்பூன் தேனை 15 நிமிடங்கள் உங்கள் முகம் முழுவதும் தடவிய பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவுவதால் உங்கள் முகம் பளபளப்பாகும்.
ஸ்ட்ராபெரி பழத்தில் அதிகளவு வைட்டமின் சி உள்ளது. இதை உங்கள் கண்களில் சுற்றி வைக்கும் போது கண்களில் இருக்கும் சுருக்கங்கள், கருவளையம் மாறக்கூடிய நிலை உள்ளதால் இதை நீங்கள் பயன்படுத்தி உங்களது முக அழகை மேம்படுத்திக் கொள்ள முடியும்.
காலை எழுந்தவுடன் முகத்தை சுத்தமான நீரில் கழுவ வேண்டும். முகத்தில் சோப்பு பயன்படுத்துவதை தவிர்த்து விட்டு நீங்கள் பாசிப்பயிறு போன்ற பாரம்பரிய பொடிகளை பயன்படுத்துவதன் மூலம் உங்கள் முகம் எப்போதும் பளபளப்பாக இருக்கும்.
எனவே மேற்கூறிய குறிப்புகளை பயன்படுத்தி நீங்கள் கட்டாயமாக உங்கள் முக அழகை மேம்படுத்திக் கொள்ள இந்த குறிப்புகள் உதவியாக இருக்கும்.