Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

34 இடங்களில் காயம்.. அதுவும் மர்ம உறுப்பில் செய்யப்பட்ட கொடுமை… வெளியான பகீர் தகவல்..!

நாட்டையே உலுக்கிய விஷயம் அண்மையில் திரையுலக வட்டாரத்தில் நடந்திருக்கும் விஷயமானது கடுமையான அதிர்வடைகளை இந்தியா முழுவதும் ஏற்படுத்தி உள்ளது.

இதற்குக் காரணம் திரைப்பட கதைகளில் கூட யூகிக்க முடியாத அளவு கடுமையான சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டு 34 இடங்களில் காயம், மர்ம உறுப்பில் மின்சாரத்தை பாய்ச்சி செய்யப்பட்ட கொடுமைகள் பற்றி இன்று இணையங்களில் பல்வேறு வகையான செய்திகள் வருகிறது.

34 இடங்களில் காயம்..

மேலும் இந்த விஷயமானது கடந்த இரண்டு வார காலமாக ஒட்டு மொத்த இந்தியாவையும் உலுக்க இருக்கக் கூடிய ஒரு விஷயமாக உள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது.

இதற்கு காரணம் கன்னட திரைப்பட நடிகர் தர்ஷன் செய்திருக்கும் செயல் தான் என்பது தற்போது வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது. இது வரை சுமார் 60-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த கூடிய இவர் மெஜஸ்டிக் என்ற திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானார்.


இதனை அடுத்து இவன் நடிப்பில் வெளி வந்த பல படங்கள் ஹிட்டடித்து ரசிகர்களின் மத்தியில் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்ததோடு கன்னட திரை உலக்கில் அதிகளவு சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராகவும் திகழ்கிறார்.

இந்நிலையில் இவர் 2003 ஆம் ஆண்டு விஜயலட்சுமி என்பவருடன் திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு மகன் இருக்கிறான். இந்நிலையில் நடிகர் தர்ஷனுக்கு நடிகை பவித்ரா கவுடாவிற்கும் நட்பு மலர்ந்து காலப்போக்கில் திருமணம் மீறிய உறவாக மலர்ந்தது.

நடிகை பவித்ராவிற்கு ரேணுகா சுவாமி ஆபாச மெசேஜை அனுப்பியது குறித்து நடிகை பவித்ரா நடிகர் தர்ஷனிடம் தெரிவித்திருக்கிறார். இதனை அடுத்து ரேணுகா சுவாமியை கொலை செய்ய திட்டமிட்ட தர்ஷன் மற்றும் பவித்ரா கவுடா உள்ளிட்ட சிலரை காவல்துறையினர் தற்போது விசாரித்து வருகிறார்கள்.

இந்நிலையில் மனிதா விமானம் இல்லாமல் மனிதர்கள் மத்தியில் தற்போது பரவி வரக்கூடிய வன்முறை கலாச்சாரம் இரும்பு கரம் கொண்டு அடக்கினாலும் தலை விரித்து ஆடி வருகிறது என்பதற்கு இந்த சம்பவத்தை உதாரணமாக சொல்லலாம்.

மர்ம உறுப்பில் மின்சாரத்தை பாய்ச்சி..

கடந்த இரண்டு வார காலமாக ஒட்டு மொத்த இந்தியாவையும் உலுக்கிக் கொண்டிருக்கக் கூடிய ஒரு விஷயம் என்னவென்றால் கன்னட நடிகர் தர்ஷன் தன் சக நடிகை குறித்து அருவருப்பாகவும் தன்னுடைய முன்னாள் மனைவிக்கு ஆதரவாகவும் சமூக வலைதள பக்கங்களில் கருத்து தெரிவித்து கொண்டு இருந்த தன்னுடைய ரசிகரான ரேணுகா சாமி என்பவரை கொடூரமான தாக்கி கொலை செய்த சம்பவம் தான்.

அதன் தொடர்ச்சியாக தர்ஷன் சிக்கியதும்.. அந்த வழக்கு குறித்து ஒவ்வொன்றும் தகவலாக வெளியாகி கொண்டிருப்பதும் மிகப்பெரிய அதிர்வலைகளை கிளப்பி வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடிகர் தர்ஷனின் மேலாளர் தவறான முடிவை எடுத்துக் கொண்டார்.

மேலும் தான் தீவிர மன அழுத்தத்தில் இருப்பதாகவும் தயவு செய்து என்னுடைய குடும்பத்தினரை எந்த தொந்தரவும் செய்ய வேண்டாம் எனவும் கூறிவிட்டு தர்ஷனின் மேலாளர் தவறான முடிவை எடுத்துக் கொண்டார். இது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திருக்கிறது.

வெளிவந்த பகீர் தகவல்..

இந்நிலையில், உயிரிழந்த ரேணுகா சாமியின் உடற்கூறாய்வு முடிவுகள் வெளியாகி இருக்கின்றன. இதில் 34 இடங்களில் காயம் செய்யப்பட்டிருக்கிறார் ரேணுகா சாமி.

மேலும் அவர் உயிருடன் இருக்கும் பொழுதே அவருடைய மர்ம உறுப்பில் மின்சாரம் பாய்ச்சப்பட்டு தொந்தரவு செய்யப்பட்டு இருக்கிறார் என்பதும் தெரிய வந்திருக்கிறது. இந்த விவகாரம் மேலும் அதிர்வலைகளை கிளப்பி விட்டிருக்கிறது.

Continue Reading

More in Tamil Cinema News

Trending

To Top
Exit mobile version