Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

பாடல் காட்சியில் அத்து மீறிய நடிகர்.. கெட்ட வார்த்தையில் திட்டி.. ராதிகா ஆப்தே செய்ததை பாருங்க.!

ஒல்லி பெல்லி அழகை வைத்துக் கொண்டு ஓய்யாரமான கவர்ச்சி காட்டி திரைப்படங்களில் படுமோசமான கிளாமரான காட்சிகளில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் திக்கு முக்காட செய்பவர்தான் நடிகர் ராதிகா ஆப்தே.

மாநிறம் கொண்ட முகத்தோற்றத்துடன் நல்ல அழகு பவ்யமான தோற்றம் பார்ப்பதற்கு சிம்பிளான பெண் போன்று ரசிகர்களை திரைப்படங்களில் அறிமுகமான புதிதிலேயே கவர்ந்து ஈர்த்தவர் தான் நடிகர் ராதிகா ஆப்தே.

நடிகை ராதிகா ஆப்தே:

இவர் வேலூரை சொந்த ஊராகக் கொண்டு ஹிந்தி மற்றும் மலையாளம் தெலுங்கு மராத்தி பெங்காலி உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்த நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பிடித்தார்.

மிகப்பெரிய திரை பின்பலம் கொண்ட குடும்பம் ஏதும் இல்லாமல் பிறந்து வளர்ந்து தன்னுடைய திறமையின் மூலமாகவே ஜொலித்துக் கொண்டிருக்கிறார் என்றால் அது நடிகை ராதிகா ஆப்தேவுக்கு பொருந்தும்.

மிகத்திறமை வாய்ந்த நடிகையாக தற்போது அனைவராலும் பார்க்கப்பட்டு வருகிறார். முதன் முதலில் இவர் நடித்து வெளிவந்த Vaah! Life Ho Toh Aisi இந்தி திரைப்படம்.

இந்த படம் 2005 ஆம் ஆண்டு வெளிவந்தது. அதை எடுத்த தொடர்ச்சியாக இந்தி மொழி திரைப்படங்களில் நடித்து வந்த நடிகை ராதிகா ஆப்தேவுக்கு பிறமொழிகளில் இருந்தும் வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்து.

அதை மிகச்சரியாக பயன்படுத்திக் கொண்டார். இவர் தமிழில் முதன் முதலில் 2010 ஆம் ஆண்டில் ரத்த சரித்திரம் என்ற திரைப்படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார்.

தமிழ் திரைப்படங்கள்:

அதன் பிறகு 2012ல் தோனி திரைப்படத்தில் பிரகாஷ்ராஜுக்கு ஜோடியாக நடித்திருப்பார். திரைப்படத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த துணை நடிகைக்கான விஜய் விருது மற்றும் சிறந்த துணை நடிகைகான இந்திய சர்வதேச திரைப்பட விருது உள்ளிட்டவற்றை பெற்றிருக்கிறார்.

அதை தொடர்ந்து நடிகர் கார்த்திவுடன் ஆல் இந்த ஆல் அழகுராஜா திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் 2013 ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது.

தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக கபாலி திரைப்படத்தின் நடித்ததின் மூலமாக மிகப்பெரிய அளவில் புகழ்பெற்றார்.

அந்த படம் இன்றளவும் பேசும் படியாகவும் ரஜினிக்கு கச்சிதமான ஜோடியாகவும் வயதான தோற்றத்தில் நடித்து அசத்தியிருந்தார் ராதிகா ஆப்தே.

திறமையை மட்டும் வைத்துக்கொண்டு திரைத்துறையில் நட்சத்திர ஜோடியாக ஜொலித்துக் கொண்டிருக்கும் நடிகை ராதிகா ஆப்தேவுக்கு அடுத்தடுத்து திரைப்படவாய்ப்புகள் கிடைத்துக் கொண்டே இருக்கிறது.

இதனிடையே பல விஷயங்களைப் பற்றி வெளிப்படையாக பேசுபவர் ராதிகா ஆப்தே திரைப்படத்துறையில் நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட் கொடுமைகள் மற்றும் வாரிசு நடிகர்களின் அரசியல் உள்ளிட்டவற்றை வெளிப்படையாக பேசுவார்.

இதனால் அவர் சர்ச்சைக்குரிய நடிகையாகவும் ஹிந்தி சினிமா பிரபலங்களால் பார்க்கப்பட்டு வருகிறார். சமீபத்தில் கூட தெலுங்கு சினிமாவைப் போன்று மிக மோசமான திரைத்துறை எதுவுமே இல்லை என்று வெளிப்படையாக கூறினார்.

அத்துமீறிய தெலுங்கு நடிகர்:

அதில் நடிக்கும் நடிகர்கள் மிகவும் கீழ்த்தரமாக நடிகைகளிடம் நடந்து கொள்கிறார்கள் என வெளிப்படையாக கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

ரஜினியை போன்ற ஒரு மிகச்சிறந்த மனிதரை நான் பார்த்ததே இல்லை. அவர் மிகவும் கண்ணியமான மனிதர் என ரஜினியுடன் கபாலி திரைப்படத்தின் நடித்த போது நடந்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டிருந்தார்.

இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால். நடிகை ராதிகா ஆப்தே தெலுங்கு சினிமாவில் நடித்த போது பிரபல நடிகர் தன்னிடம் மோசமாக நடந்து கொண்டதாக கூறியிருக்கிறார் .

அதுமட்டுமில்லாமல் எனக்கு அந்த அனுபவம் மிக மோசமான அனுபவமாக இருந்ததோடு அவரை நேரடியாகவே நான் திட்டினேன் என்றும் கூறியிருக்கிறார்.

ஆம், பாடல் காட்சி ஒன்றில் தன்னிடம் அத்து மீறிய நடிகர் அஜ்மல் அமீரை கெட்ட வார்த்தையில் திட்டி விட்டு படப்பிடிப்பு தளத்தை விட்டு வெளியேறியுள்ளார் நடிகை ராதிகா ஆப்தே.

Continue Reading

More in Tamil Cinema News

Trending

To Top
Exit mobile version