அவசரத்துக்கு கேரவேனில் ஏறினேன்.. அப்போது.. அந்த ஹீரோயினின் அம்மா.. சீரியல் நடிகை வெளியிட்ட பகீர் தகவல்..!

அவசரத்துக்கு கேரவேனில் ஏறினேன்.. அப்போது.. அந்த ஹீரோயினின் அம்மா.. சீரியல் நடிகை வெளியிட்ட பகீர் தகவல்..!

ஒரு பெண்ணின் கஷ்டம், மற்றொரு பெண்ணுக்குதான் தெரியும் என்று சொல்வார்கள். சினிமாவில் கூட இப்படி ஒரு வசனத்தை ஏதாவது ஒரு கேரக்டர் பேசும். ஆனால், உண்மையில் ஒரு பெண்ணுடைய கஷ்டத்தை, மற்றொரு பெண் புரிந்து கொள்வதில்லை, கண்டு கொள்வதும் இல்லை. அதை சகஜமாக ஏற்றுக் கொள்வதுமில்லை என்பதை தான் இந்த சம்பவம் வெளிப்படையாக உணர்த்துகிறது.

காயத்ரி ரேமா

ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பான டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானவர் காயத்ரி ரேமா. டைரக்டர் எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான டூரிங் டாக்கீஸ் என்ற படத்தில் மூலம் அறிமுக நடிகையாக காயத்ரி ரேமா அறிமுகமானார்.

சினிமா மற்றும் வெப் சீரிஸ் என இரண்டிலும் நடித்து வரும் இவர், சமீபத்தில் வெளியான வா வரலாம் வா என்ற படத்தில், பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ் உடன் டித்துள்ளார்.

அவசரத்துக்கு கேரவேனில் ஏறினேன்.. அப்போது.. அந்த ஹீரோயினின் அம்மா.. சீரியல் நடிகை வெளியிட்ட பகீர் தகவல்..!

அட்ஜஸ்ட்மென்ட் பண்ண மாட்டேன்

சினிமாவில் நான் பெரிய அளவில் ஜெயிக்காமல் போனதற்கு காரணமே, அட்ஜஸ்ட்மென்ட் பண்ண மாட்டேன் என்று மறுத்ததுதான். நடிக்கச் சொன்னால் ஓகே ஆனால் நடிப்பதற்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்வது அது என்னால் முடியாது என்று வெளிப்படையாக சொல்லி இருக்கிறார்.

திறமைக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும். ஆனால் இங்கே சிலர் திறமையை பார்ப்பதே இல்லை. அவர்கள் ஆசைக்கு யார் சம்மதிக்கிறார்களோ அவர்களுக்குதான் சான்ஸ் கொடுக்கிறார்கள் என்று வெளிப்படையாக பேசி பரபரப்பு ஏற்படுத்தியவர் காயத்ரி ராமா.

அந்த 4 நாட்கள்

பெண்களுக்கு இயற்கையாகவே பீரியட்ஸ் வரும்போது, அந்த 4 நாட்கள் மிகவும் கஷ்டமாக இருக்கும். அதுவும் சினிமா ஷூட்டிங்கில் பாலைவனத்தில் இறக்கிவிட்டு, நடிக்கும் போதெல்லாம் நடிகைகளின் நிலைமை மிகவும் மோசமான சங்கடமான சூழ்நிலையில் இருக்கும்.

அங்கே பாத்ரூம் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்காது. அட்லீஸ்ட் ஹீரோயின்களின் கேரவனையாவது பயன்படுத்த அனுமதித்தாலும், இப்படி ஒரு பிரச்சனை உள்ளது என்று காயத்ரி ரேமா வெளிப்படையாக பேசியுள்ளார்.

அவசரத்துக்கு கேரவேனில் ஏறினேன்.. அப்போது.. அந்த ஹீரோயினின் அம்மா.. சீரியல் நடிகை வெளியிட்ட பகீர் தகவல்..!

பீரியட் நேரத்தில் பாத்ரூம் வசதி இல்லை

ஒருமுறை ஏர்போர்ட் அருகே, ஒரு படத்தின் ஷூட்டிங் நடந்தது. அப்போது திடீரென பீரியட் ஏற்பட்டது. மேனேஜிடம் போய் பாத்ரூம் வசதி இருக்கிறதா என்று கேட்டேன். அதற்கு அவர் இல்லை என்றார். சரி அப்படி என்றால் பக்கத்தில் கிண்டியில் தான் என் வீடு இருக்கு. நான் போய்விட்டு பத்து நிமிஷத்தில் வந்து விடுகிறேன் என்று சொன்னேன்.

ஹீரோயின் கேரவன்

உடனடியாக ஹீரோயின் கேரவன் இருக்கு, அதை யூஸ் பண்ணிக்கோங்க என்று சொன்னார். அவர் ரொம்பவே யோசித்து, கேரவனில் உள்ள பாத்ரூமை பயன்படுத்திக்கொள்ள அனுமதி கொடுத்த நிலையில், கேரவன் சென்று நாப்கின் சேஞ்ச் பண்ணிட்டு வந்தேன்.

கண்டவங்களை எல்லாம்…

அங்கே இருந்து ஹீரோயின் அம்மா ஓடிவந்தார். எப்படி கண்டவங்களை எல்லாம் என் பெண்ணோட கேரவனுக்குள் அலவ் பண்ணலாம் என்று சண்டை போட்டு என்னை வெளியவே தள்ளிட்டாங்க.

அவசரத்துக்கு கேரவேனில் ஏறினேன்.. அப்போது.. அந்த ஹீரோயினின் அம்மா.. சீரியல் நடிகை வெளியிட்ட பகீர் தகவல்..!

அசிங்கம் நடந்திருக்கு..

இப்படி எல்லாம் அசிங்கம் எனக்கு நடந்திருக்கு என்று காயத்ரி ரேமா சினிமாவில் இளம்பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகளையும், நடிகைகளின் அம்மாவும் ஒரு பெண்ணாக இருந்தாலும் பெண்களின் அந்த பிரச்சனை எல்லாம் யாரும் யோசித்துக்கூட மாட்டார்கள் என்பதையும் வேதனையுடன் பதிவு செய்துள்ளார்.

அவசரத்துக்கு…

பீரியட்ஸ் நேரத்தில் அவசரத்துக்கு கேரவேனில் ஏறினேன்.அப்போது அந்த ஹீரோயினின் அம்மா, சண்டைக்கு வந்துவிட்டார் என சீரியல் நடிகை காயத்ரி ரேமா என்ற தகவலை கூறியுள்ளார்.

அவசரத்துக்கு கேரவேனில் ஏறினேன்.. அப்போது.. அந்த ஹீரோயினின் அம்மா.. சீரியல் நடிகை வெளியிட்ட பகீர் தகவல்..!