கடையில் கண்ணாடி டம்ளர் தண்ணீரில் எலுமிச்சை பழத்தை போட்டா இத்தனை நன்மைகளா?

இன்று பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் மற்றும் கடைகளில் ஒரு கண்ணாடி டம்ளரில் தண்ணீரை விட்டு அதன் எலுமிச்சை பழத்தை போட்டு இருப்பதை நீங்கள் அனைவரும் பார்த்து இருப்பீர்கள். அப்படி செய்வதின் மூலம் என்னென்ன நன்மைகள் ஏற்படுகிறது என்பதைப் பற்றி நீங்கள் எளிதாக தெரிந்து கொள்ள இந்த கட்டுரையை படித்தாலே போதுமானது.

 ஆரம்ப காலத்தில் இருந்தே சகுனம் பார்ப்பது அதற்கு ஏற்ற பரிகாரங்களை செய்வது கண் திருஷ்டிக்கு சுத்தி போடுவது போன்ற பழக்கவழக்கங்கள் நிறைந்த  இருக்கும்போது இந்த பழக்கம் எப்படி வந்தது  என்று யோசிப்பதை விட இதனால் நன்மை இருக்கிறது என்றால் அதை நாம் ஃபாலோ செய்வதில் எந்த விதமான தவறும் இல்லை.

 பொதுவாகவே இயற்கை அளித்த இந்த எலுமிச்சையால் எண்ணற்ற நன்மைகள் மனித சமூகத்திற்கு மட்டுமல்லாமல் இந்த பிரபஞ்சத்திற்கும் ஏற்படுகிறது. தெய்வத்துக்கே உரிய தேவ கனி என்று அழைக்க கூடிய எந்த எலுமிச்சை பழத்தை வைத்து எல்லாவற்றையும் கிரகிக்கக்கூடிய சக்தி இதற்கு உள்ளது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

 மேலும் தண்ணீருக்கு என்று அற்புதமான ஈர்ப்பு தன்மை இருப்பதால்தான் நீர் நிலைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதோடு மட்டுமல்லாமல் அந்த நீர் ஆதாரத்தை வைத்து அனைத்து அபிஷேகங்களும் கடவுளுக்கு செய்யப்பட்டு வருகிறது.

 மேலும் மந்திரங்களை நதிக்கரை ஓரங்களில் உச்சரிக்கும் போது அதன் சத்தி பன் மடங்காக  பெருகி வருவதாக கூறியிருக்கிறார்கள். நம் எண்ணத்திற்கு ஏற்ப நீரின் மூலக்கூறுகள் செயல்படுவதை ஜப்பானை சேர்ந்த அறிவியல் ஆய்வாளர்கள் மிக அருமையான முறையில் விளக்கி இருந்தார்கள்.

 இதனை அடுத்து கடையில் கண்ணாடி டம்ளரில் தண்ணீரில் எலுமிச்சம்பழம் போட்டு வைப்பதின் மூலம் கண் திருஷ்டியில் இருந்து நிவாரணம் கிடைக்கிறது. அதுமட்டுமல்லாமல் அந்த எலுமிச்சை நீரில் மிதந்த படியே இருந்தால் அன்றைய நாள் நல்ல நாளாகவும் வியாபாரத்தில் வெற்றிகள் வந்து சேரும் என்ற நம்பிக்கை இன்று வரை உள்ளது.

 அதுபோலவே அந்த எலுமிச்சை நீரில் மிதக்காமல் அடியில் சென்று விட்டால் அன்றைய தினம் அவ்வளவு சுபிட்சமாக இருக்காது வியாபாரத்தில் சுணக்கம் ஏற்படும் என்று கூறி இருக்கிறார்கள்.

 எனவே அவரவர் நம்பிக்கைக்கு எண்ணத்திற்கும் ஏற்றபடி பலாபலன் அமைகிறது. நீங்கள் நம்பிக்கையோடு கடையில் கண்ணாடி டம்ளரில் எலுமிச்சை பழத்தை போட்டு நன்மைகளை அடைய முடியும். இதன் மூலம் உங்கள் செல்வ வளர்ச்சியை நீங்கள் அதிகரிக்க அதிகரித்துக் கொள்ளலாம்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

&Quot;சமந்தாவின் மார்பில் இது இல்லை..&Quot; நடிகை ஸ்ரீரெட்டி மோசமான பேச்சு..!

“சமந்தாவின் மார்பில் இது இல்லை..” நடிகை ஸ்ரீரெட்டி மோசமான பேச்சு..!

ஸ்ரீரெட்டி : பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்து கொள்ளச் சொல்லி தன்னை படுக்கையில் ஆசை தீர பயன்படுத்திக் கொண்டு கடைசியில் …

Exit mobile version