நடிகை கௌரி கிஷன் புதிதாக ஒப்பந்தமாகியுள்ள வெப் தொடர் ஒன்றில் நீச்சல் உடையில் நடிக்க சம்மதம் தெரிவித்திருப்பது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.
சினிமாவில் அறிமுகமான பகுதி அம்மாஞ்சியாக தெரிந்த நடிகை கௌரி கிஷன் அடுத்தடுத்த படங்களில் கவர்ச்சி களமாடினார்.
உச்சக்கட்டமாக ஓரினச்சேர்க்கையாளராக ஆல்பம் பாடல் ஒன்றில் நடித்து அதிர்வலைகளை கிளப்பினார்.
அதனை தொடர்ந்து நண்பர்களுடன் சுற்றுலா சென்றிருந்த இவர் அங்கே நீச்சலுடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
திரைப்படங்களில் குடும்ப குத்துவிளக்காக காட்சியளிக்கும் நடிகை கௌரி கிஷன் இப்படி இணைய பக்கங்களில் கவர்ச்சி தேவதையாக தெரிகிறாரே என்று ரசிகர்கள் பலரும் வியந்தனர்.
இந்நிலையில் தற்போது வெப்தொடர் ஒன்றில் ஒப்பந்தமாகி இருக்கும் கௌரி கிஷன் நீச்சல் உடையில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் என்ற தகவல் ரசிகர்களை வாய் விளக்க வைத்து இருக்கிறது.
என்ன காரணம் என்றால் நீச்சல் உடை அணிவதற்கு ஏற்ற உடல்வாகு தற்போது கௌரி கிஷனிடம் இல்லை என்று தான் கூற வேண்டும். உடல் எடை கூடி ஆள் அடையாளம் தெரியாமல் மாறி இருக்கும் கௌரி கிஷன் நீச்சல் உடையில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார்.
இதனை அறிந்த ரசிகர்கள் இந்த தண்டிய உடம்புக்கு இத்தனுண்டு நீச்சலுடை போதுமா..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.
அதே நேரம் தாங்கள் விரும்பிய ஆடையை அணிவதற்கு உடல் எடையோ வயதோ ஒரு தடையாக இருக்கவே முடியாது. அதனை கௌரி கிஷன் நிரூபித்திருக்கிறார்.
உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் நீச்சல் உடை அணியக்கூடாது என்ற எந்த ஒரு விதியும் கிடையாது.
கௌரி கிஷன் அவர் நினைக்கக்கூடிய விஷயங்களை செய்வதற்கு அவருக்கு உரிமை உள்ளது. அவருக்கு சுதந்திரம் இருக்கிறது என்று கருத்துக்களை பதிவு செய்து கௌரி கிஷனுக்கு வாழ்த்துக்களை பதிவு செய்யும் ரசிகர்களும் இருக்கிறார்கள்.
மறுபக்கம் அம்மணியின் இந்த வெப் சீரிஸ் எப்போது ரிலீஸ் ஆகும் என்று இப்போதே தேட தொடங்கி இருக்கிறார்கள் சில ரசிகர்கள்.