கோடை காலம் வந்து விட்டாலே கூந்தல் உதிர்வு ஏற்பட ஆரம்பித்து விடும். அப்படிப்பட்ட கூந்தல் உதிர்வை கட்டுப்படுத்த பல வழிகளை நாம் பின்பற்றினாலும் எளிதில் அந்த உதிர்வதை நம்மால் தடுத்து நிறுத்த முடியாது. அப்படி நாம் கூந்தல் உதிர்வை தடுத்து நிறுத்த மிகச்சிறந்த மருந்தாக பயன்படுவது விளக்கெண்ணெய் தான். இந்த எண்ணெயை தொன்றுபட்டு நம் முன்னோர்கள் தலைக்கு தேய்ப்பதற்கு பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.
Hair growthமேலும் விளக்கெண்ணெய்யில் வைட்டமின் ஈ சத்து, தாதுக்கள், புரதம் போன்றவை அதிக அளவு இருப்பதால் இது தலைமுடிக்கு தேவையான போஷாக்கை தருகிறது. எனவே நீங்கள் கோடை காலம் மட்டுமல்லாமல் மற்ற காலங்களிலும் விளக்கெண்ணையை உங்கள் தலைமுடிக்கு பயன்படுத்துவதின் மூலம் முடி உதிர்விலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.
விளக்கெண்ணெய் சற்று அடர்த்தி அதிகமாக இருப்பதால் தடிமனாக இருக்கும். இதனை நீங்கள் உங்கள் வீட்டில் இருக்கும் தேங்காய் எண்ணெயோடு சேர்த்து உங்கள் தலைக்கு தேய்ப்பதின் மூலம் தலை முடி உதிராது.
Hair growthவிளக்கெண்ணெய்யில் உள்ள பண்புகளானது தலை முடியை உள்ளிருந்து வலுப்படுத்தக்கூடிய தன்மை கொண்டது. மேலும் இது தலைமுடி வளர்ச்சியை ஊக்கப்படுத்தும்.
இந்த எண்ணையை தேய்த்து நன்கு உங்கள் தலையில் மசாஜ் செய்துவிட்டு பிறகு நீங்கள் ஷாம்புவை போட்டு குடிப்பதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.
Hair growthஇதில் இருக்கும் அமினோ அமிலங்கள், ஒமேகா ஆறு, கொழுப்பு அமிலங்கள் ஆகியவை முடி வறட்சி அடைவதையும், பிளவு படுவதையும் தடுத்து நிறுத்த கூடிய தன்மை கொண்டது.
கூந்தலுக்கு தேவையான போஷாக்கை கொடுத்து முடி உதிர்வை கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் முடியை அடர்த்தியாக வளர்வதற்கும் ஊக்கத்தை தரக்கூடிய இந்த எண்ணையை நீங்கள் பயன்படுத்துவது மிகவும் சிறப்பானது.
Hair growthபாதாம் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் இரண்டையும் கலந்து சூடு செய்து தலைமுடிக்கு தேய்ப்பதின் மூலம் முடி ஆரோக்கியமாக மாறும்.
எனவே மேற்கூறிய குறிப்புகளை நீங்கள் பயன்படுத்தி உங்கள் கூந்தல் உதிர்விலிருந்து பாதுகாக்க இந்த முறையை பயன்படுத்திப் பாருங்கள்.இது கட்டாயம் உங்களுக்கு நன்மை தரும். அப்படி நன்மை ஏற்பட்டால் அதனை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.