டார்லிங் டம்பக்கு நாயகியான நடிகை ஹன்சிகா தற்போது தன் கணவருடன் எகிப்திய மண்ணுக்கு சென்று அங்கு இருக்கும் பிரமிடுகளை சுற்றிப் பார்த்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் பாலைவனம் மண்ணில் அவர் ஒட்டகச் சவாரியும் செய்து இருப்பது ரசிகர்களின் மத்தியில் மகிழ்ச்சியை உண்டு பண்ணி உள்ளது.
சமீபத்தில் தான் நடிகை ஹன்சிகா மோத்வானிக்கும் தொழிலதிபரான சோஹைல் கத்தூரியா விற்கும் டிசம்பர் மாதம் ஜெய்ப்பூர் அரண்மனையில் பிரம்மாண்ட முறையில் திருமணம் நடைபெற்றது.
இந்த திருமணமானது 450 ஆண்டுகளுக்கு பழமை வாய்ந்த அரண்மனையில் பிரம்மாண்டமாக நடைபெற்றதோடு பல பாலிவுட் நட்சத்திரங்கள் மற்றும் தென்னிந்திய திரை உலகத்தை சார்ந்தவர்கள் அவர்களது உறவினர்கள் அனைவரும் இந்து திருமண விழாவில் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
இதை அடுத்து தென்னிந்திய சினிமாவின் குட்டி குஷ்பூ என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படக்கூடிய ஹன்சிகா மோத்வானி தனது கணவரோடு எகிப்து நாட்டுக்கு ஹனிமூன் ட்ரிப் சென்று இருக்கிறார்.
ஏற்கனவே இவர் புத்தாண்டை முன்னிட்டு ஜெர்மனி, பாரிஸ் ஆகிய நாடுகளுக்கு சென்று அங்கு தங்களது கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டை கொண்டாடிய நிலையில் தற்போது இந்த ஜோடி எகிப்துக்கு சென்றுள்ளது.
அங்கு உலக புகழ்பெற்ற பிரமிடுகளின் மத்தியில் இவர் நின்று கொண்டு கொடுத்திருக்கும் போஸ்சை பார்த்து உலகில் எட்டாவது அதிசயம் என்று ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.
மேலும் தனது கணவரோடு இணைந்து அடித்த லூட்டிகளையும் ரொமான்ஸ் போட்டோக்களையும் தற்போது இவர் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் இதற்கு தேவையான லைக் மற்றும் கமெண்ட்களை போட்டு வறுத்து தள்ளி இருக்கிறார்கள்.
இவர் வெளியிட்ட போட்டோக்களிலேயே காதல் கணவர சோஹைல் கத்தூரியாவுடன் சேர்ந்து பிரமிடு முன் ரொமான்டிக் போஸ் கொடுத்திருக்கும் போட்டோஸ் தான் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகிவிட்டது.
இதனை தொடர்ந்து பார்த்து வருவதால் இணையத்தில் எந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. மேலும் சில ரசிகர்கள் இவருக்கு நல்ல முறையில் வாழ்த்துக்களை தந்திருக்கிறார்கள்.
இதை எடுத்து திருமணத்துக்கு பிறகும் இவர் திரை உலகில் நடிப்பாரா என்பது போன்ற கேள்விகளையும் இவர் முன் வைத்திருக்கிறார்கள். இதற்கான பதிலை ஹன்சிகா விரைவில் தெரிவிப்பார் என்ற நம்பிக்கையில் அவர்கள் அனைவரும் காத்திருக்கிறார்கள்.