மிகப் பிரம்மாண்டமான முறையில் சூப்பர் ஹீரோவின் படமாக உருவாகி வரும் ஹனு-மான்…!

திரை உலகில் தற்போது புதிய புதிய பெயர்களில் வரலாற்று திரைப்படங்கள் வெளிவந்து பிரம்மாண்டத்தை காட்டி இருக்கிறது. தற்போது தமிழில் வெளிவந்த பொன்னியின் செல்வன் கன்னடத்தில் வெளிவந்த காந்தாரா போன்ற படங்களை இதற்கு உதாரணமாக நாம் எடுத்துக் கொள்ளலாம்.

இந்த வரிசையில் தற்போது திரையுலகத்தை அதிரடியாக கலக்க வரும் படம் தான் ஹனு-மான். இந்தப் படத்தை பிரசாந்த் வர்மா இயக்கப் போகிறார் இதில் தேஜா சஜ்ஜா  படத்தின் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார்.

இவருக்கு ஜோடியாக சூப்பர் ஹிட் நடிகையான அம்ரிதா ஐயர் நடிக்க உள்ளார்.மேலும் இவர்களுடன் வரலட்சுமி சரத்குமார், வினை ராய், கெட்டப் சீனு, ராஜ் தீபக் ஷெட்டி உள்ளிட்டோர் பலர் நடிக்க உள்ளார்கள்.

 எனவே இந்தப் படமானது மெர்சலான படமாக இருக்கும் என்பது நடிக்கக்கூடிய நடிகர்களின் பெயரை பார்த்தாலே நமக்குத் தெரிகிறது.

 இதனை அடுத்து இந்த படத்தின் ஒளிப்பதிவை தாசரதி சிவேந்தரா ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். மேலும் பிரம்மாண்டமான இந்த திரைப்படத்துக்கு கௌரஹரி, அனுதீப் தேவ் மற்றும் கிருஷ்ண சௌரப் மூன்று இசை அமைப்பாளர்கள் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள்.

இந்த படமானது சூப்பர் ஹீரோ ஜானலில் தயாராகி இருக்கும் இந்த படத்தை பிரைம் ஷோ என்டர்டைன்மென்ட் சார்பில் கே நிரஞ்சன் ரெட்டி தயாரித்து வருகிறார்.

 ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறைவடைந்து உள்ள நிலையில் இதன் இறுதி கட்டப் பணிகள் தற்போது மிகவும் வேகமாக நடைபெற்று வருகிறது.

 மிகுந்த ஆவலோடு காத்திருக்கும் இந்தப் படமானது தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் என என பல மொழிகளில் ஒரு பான் இந்திய திரைப்படமாக விரைவில் வெளிவரவுள்ளது.

 இதுவும் வசூலில் காந்தாரா, பொன்னியின் செல்வனைப் போல பட்டையை கிளப்பும் என்று இவர்கள் நினைத்துக் கொண்டிருக்கின்ற வேலையில் இந்த திரைப்படம் வெளியான பின்பு தான் இதன் வசூல் என்ன படத்தின் கதை என்ன என்பது வெட்ட வெளிச்சத்திற்கு வரும்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

வெட கோழி.. இப்படி ஓப்பான காட்டினா எப்படி?அத பார்த்ததும் கண்ணு கட்டிடுச்சு..கருப்பு டெவிலாய் பிரியா பவானி ஷங்கர்!..

வெட கோழி.. இப்படி ஓப்பான காட்டினா எப்படி?அத பார்த்ததும் கண்ணு கட்டிடுச்சு..கருப்பு டெவிலாய் பிரியா பவானி ஷங்கர்!..

கண்ணுக்கு மை அழகு கவிதைக்கு பொய் அழகு என்ற பாடல் வரிகளை கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்த வரிகளுக்கு ஏற்ப தற்போது பிரியா …