“கேட்டதெல்லாம் கொடுக்கும் வலம்புரி சங்கு வழிபாடு..!” – நீங்களும் செய்யுங்க..!

நினைத்த வரம் எளிதில் கிட்ட சிவபெருமானை வணங்க வேண்டும் என்று கூறுவார்கள். அதுபோலவே உங்களுக்கு நினைத்ததெல்லாம் கிடைப்பதற்கு வலம்புரி சங்கு வழிபாடு செய்ய வேண்டும்.

அப்படி வலம்புரிச் சங்கு வழிபாட்டை உங்கள் வீட்டில் நீங்கள் செய்வதின் மூலம் எண்ணற்ற நன்மைகளை பெற முடியும். குறிப்பாக இந்த வலம்புரிச் சங்கை வீட்டில் புதைத்து வைத்து வழிபட்டால் கணக்கில் அடங்காத அற்புதங்கள் உங்கள் வீட்டுக்குள் நடக்கும்.

valamburi-sangu-pooja

இந்த வலம்புரி சங்கோடு நீங்கள் சிவனுக்கு உகந்த வில்வம், துளசி போன்றவற்றை போட்டு நீங்கள் உங்கள் வீட்டில் வடகிழக்கு மூலையில் ஒரு குழியை பறித்து அதில் வலம்புரி சங்கை புதைத்து விடுங்கள். பிறகு சங்கு புதைத்த இடத்தில் விளக்கை ஏற்றி வழிபாட்டை செய்து பாருங்கள். நிச்சயம் அஷ்ட ஐஸ்வர்யங்கள் உங்கள் வீட்டுக்கு வந்து சேரும்.

மேலும் வலம்புரிச் சங்கை உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து வழிபடும்போது நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றியடையும். உங்கள் வீட்டு பூஜை அறையில் வலம்புரி சங்கை வெள்ளி அல்லது தங்க நாணயத்தில் வைத்து வழிபடுங்கள்.

valamburi-sangu-pooja

மேலும் இதில் குங்குமத்தை வைத்து வழிபடலாம். குறிப்பாக அதர்வண தெய்வமான வராகி அம்மன், காளியம்மன் போன்ற உக்கரமான தெய்வங்களிடமிருந்து பெற்று வந்த குங்குமத்தை ஈட்டு சங்கை வழிபடுவது சிறப்பாகும்.

தினம் தோறும் இந்த சங்குக்கு தூப ஆராதனை செய்து கோவில்களில் இருந்து கொண்டு வரும் அபிஷேகத் தீர்த்தத்தை தெளித்து பூஜை செய்வதின் மூலம் குடும்பத்தில் செல்வம் பெருகும். பில்லி, சூனியம், ஏவல் போன்ற எதிர்மறை சக்திகள் நமது வீட்டுக்குள் வராது.

valamburi-sangu-pooja

வாழ்க்கையில் வெற்றி பெற நினைப்பவர்களுக்கு வெற்றி மேல் வெற்றி வந்து சேரும். வீட்டில் செல்வ செழிப்பு அதிகரிக்கும். வலம்புரி சங்கில் மகாலட்சுமி வாசம் செய்வதாக நமது முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். எனவே இந்த சந்தை வைத்து வழிபடுவது லக்ஷ்மி பூஜையை செய்வதற்கு இணையாக கருதப்படுகிறது.

வலம்புரி சங்கில் நீரை வைத்து சுவாமிக்கு பூஜை செய்வதை சங்காபிஷேகம் என்று கூறுகிறோம். இதுபோல செய்வது நாம் செய்த பாவங்களை எல்லாம் அகற்றக் கூடிய சக்தி இந்த சங்காபிஷேகத்திற்கு உள்ளது.

எனவே இனி மேலாவது வலம்புரி சங்கின் மகத்துவத்தை அறிந்து கொண்டவர்கள் அந்தச் சங்கை இது போல பூஜித்து பயன்பெறுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ராதிகா ஷூட்டிங்கில் 2 பெண்கள்.. எல்லார் முன்னாடியும் அவுத்து போட்டு.. 37 நடிகைகள சூறையாடிய நடிகர்.. 75 வயசுல அந்த நடிகையோடு ஜல்சா!!

அட்ஜஸ்ட்மென்ட் விவகாரமானது தற்போது வெட்ட வெளிச்சத்திற்கு வந்திருப்பதோடு மட்டுமல்லாமல் ஹேமா கமிஷன் மூலம் இந்தியா முழுவதும் இதன் தாக்கம் அதிகரித்து …