Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

ரெண்டு வருஷத்துல எனக்கு இது வேணும்ன்னு கேட்டேன்.. பாடகி சுசித்ரா..!

கடந்த இரண்டு நாட்களாக கோலிவுட் சினிமாவில் தலைப்பு செய்தியாக பேசப்பட்டு வருவது பாடகி சுசித்ராவின் பேட்டிகள் தான்.

பாடகி சுசித்ரா வானொலி தொகுப்பாளியாகவும் , தொலைக்காட்சி தொகுப்பாளினியாகவும், பாடகியாகவும், நடிகையாகவும் பல பன்முக திறமைகளை கொண்டு சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பிரபலமான பெண்மணியாக ஜொலித்துக் கொண்டிருந்தார்.

பாடகி சுசித்ரா:

இவர் இப்படியாக இருந்த சமயத்தில் திடீரென இவரது ட்விட்டர் அக்கவுண்டில் இருந்து நடிகர் நடிகைகளின் அந்தரங்க லீலைகள் மற்றும் வீடியோக்கள் புகைப்படங்கள் வெளியாகி எல்லோரையும் பேரு அதிர்ச்சிக்குள்ளாகியது.

நடிகர் நடிகைகளின் அந்தரங்க விஷயத்திற்குள் சுசித்ராவுக்கு என்ன தொடர்பு இருக்கிறது? என பல விதமான கேள்விகள் கடந்த 2016 ஆம் ஆண்டு கேட்கப்பட்டு ஒட்டுமொத்த கோலிவுட் சினிமாவையே அதிரவைத்தது.

---- Advertisement ----

இந்த விவகாரம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு பல நட்சத்திர நடிகர்கள் இந்த விவகாரத்தில் சிக்கியதை தொடர்ந்து அவர்களின் முகம் சீர் அழிந்தது என்றே சொல்லலாம்.

அதில் குறிப்பாக நடிகர் தனுஷ், திரிஷா, அனுயா, ஹன்சிகா, ஆண்ட்ரியா, அனிருத் உள்ளிட்ட பல பிரபலங்கள் இதில் சிக்கி தவித்தனர்.

பிரபங்களின் அந்தரங்கம்:

அதன் பிறகு சில ஆண்டுகளுக்கு பிறகு இந்த பிரச்சனை ஆய்ந்து ஓய்ந்தது. ஆனால், தற்போது மீண்டும் பாடகி சுசித்ரா தொடர்ந்து YouTube சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருவது பெரும் பரபரப்பாக பார்க்கப்பட்ட வருகிறது.

அதிலும் அவர் பல நடிகர் நடிகைகளின் அந்தரங்க விஷயங்களை போட்டு உடைத்து இதுவரை வெளிவராத பல ரகசிய விஷயங்களை உடைத்து வருவது தான் கோலிவுட் சினிமாவில் விழிபிதுங்க வைத்துள்ளது.

மீண்டும் சுசித்ராவின் விவகாரம் பெரும் பூதாகரத்தை கிளப்பி வருகிறது இதனால் ஒட்டு மொத்த YouTube சேனல்களும் தமிழ் சினிமா செய்தி தளங்களும் சுசித்ராவின் செய்திகளையே தலைப்பு செய்தியாக வெளியிட்டு வருகிறார்கள்.

வம்பில் மாட்டிய தனுஷ்:

அப்படித்தான் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவாகரத்து குறித்து பேசிய சுசித்ரா தனுஷை விட ஐஸ்வர்யா அந்த விஷயத்தில் மிகவும் மோசமானவர்.

அதாவது தனுஷ் தெரிந்தே ஐஸ்வர்யாவுக்கு சீட்டிங் செய்து பலருடன் தகாத உறவில் இருந்து வந்தார் என்றால், ஐஸ்வர்யா தனுஷுக்கு தெரியாமல் பலபேருடன் ரகசியமாக உறவு வைத்துக் கொண்டு அவரை ஏமாற்றினார் .

இதற்கிடையில் மாட்டிக் கொண்டது அவர்களது இரண்டு பிள்ளைகள் தான் எனக்கூறி அதிர வைத்தார்.

அதோடு நடிகை திரிஷா இந்த சுச்சி லீக்ஸ் விவகாரத்தில் தெரிந்தே அவர் தன்னுடைய பிரைவேட் புகைப்படங்களை கொடுத்தார்.

அதன் பிறகு இந்த பிரச்சனை பூதாகரமாக வெடித்ததை தொடர்ந்து ஒரே ஒரு ட்வீட் மட்டும் போட்டு அவர் எஸ்கேப் ஆகிவிட்டார்.

அவர் ஒன்றும் அவ்வளவு யோக்கியம் கிடையாது என த்ரிஷா குறித்து பூதாகரத்தை கிளப்பினார்.

இதை எடுத்து திரிஷா அவருக்கு பதிலடி கொடுத்ததெல்லாம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த பாடகி சுசித்ராவின் விவகாரம் தற்பொழுது மீண்டும் பூதாகரமாக வெடிக்க தொடங்கி இருக்கிறது.

மீண்டும் சர்ச்சை கிளப்பும் சுசித்ரா:

இதற்கு முக்கிய காரணம் வேறு யாரும் கிடையாது. பாடகி சுசித்ராவே தான் பல்வேறு தகவல்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை அதிர வைத்து வருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது தன்னுடைய கணவர் குறித்து இவர் வெளியிட்டுள்ள விஷயம் இனைய பக்கங்களை கிடுகிடுக்க வைத்திருக்கின்றது.

அவர் கூறியதாவது நான் தனிமையில் இருக்கிறேன். எனக்கு ஒரு துணை வேண்டும். அதனால் இரண்டு வருடத்திற்குள் எனக்கு ஒரு குழந்தை வேண்டும் என கேட்டேன்.

என் புருஷன் ஓரினச்சேர்க்கையாளர்:

ஆனால் அதற்கு கார்த்திக் குமார் தயாராக இல்லை. அறிவியல் ரீதியாக அவர் குழந்தை பாக்கியம் கொடுப்பதற்கு தகுதி இல்லாத ஒரு நபர்.

ஓரினச்சேர்க்கை பழக்கம் உள்ளவர். அவரிடம் குறை இருக்கிறது என்பதை என்னிடம் ஒப்புக் கொண்டிருப்பவர்.

கடைசியாக என்னை அவருடைய நண்பர்களுக்கு விருந்தாக்கி விட்டு சென்று விட்டார் என அதிர வைக்கும் தகவல்களை வெளியிட்டு இருக்கிறார் பாடகி சுசித்ரா.

Continue Reading

More in Tamil Cinema News

Trending

To Top