Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

வீட்டில் தனியாக இருக்கும் போது இதை பண்ணுவேன்.. வெளிப்படையாக பேசிய ஐஸ்வர்யா மேனன்..!

சில நடிகைகள் நல்ல அழகு நல்ல தோற்றம் வசீகர அழகு இருந்தாலும் கூட அவர்களால் சினிமாவில் தாங்கள் நினைத்த இடத்தை அடைய முடியவில்லை.

தாங்கள் மிகப்பெரிய ஹீரோயின் ஆக வேண்டும் என்ற கனவோடு லட்சியத்தோடு பல வருடங்களாக தொடர்ந்து முயற்சி கைவிடாமல் இருந்து வருகிறார்கள் .

ஐஸ்வர்யா மேனன்:

அப்படிப்பட்ட நடிகைகளில் ஒருவராக பார்க்கப்படுபவர் தான் நடிகை ஐஸ்வர்யா மேனன். கேரளாவை சொந்த ஊராக கொண்ட இவர் பிறந்தது என்னவோ தமிழ் நாட்டில் தான்.

இவரது குடும்பம் கேரளாவின் சேந்தமங்கலத்தை சேர்ந்தது. ஆனால் தமிழ்நாட்டில் ஈரோட்டில் தான் பிறந்து வளர்ந்தார்.

இருந்தாலும் கேரளாவில் வளர்ந்ததால் பார்ப்பதற்கு கேரளா பெண்களை போன்றே மிகவும் அழகாக இருப்பார்.

முதன்முதலில் காதலில் சொதப்புவது எப்படி என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமாகி இருந்தார் ஐஸ்வர்யா மேனன் .

அதை எடுத்து தொடர்ந்து தமிழ் திரைப்படங்களில் நடிக்க ஆர்வத்தை செலுத்தி அடுத்தடுத்து கிடைத்த வாய்ப்புகளில் நடித்து வந்தார் .

திரைப்படங்களில் ஐஸ்வர்யா மேனன்:

அதன்படி தமிழ் , தெலுங்கு, கன்னடம் ஆகிய திரைப்படங்களில் தொடர்ந்து முயற்சித்து வந்தார். தமிழில் ஆப்பிள் பெண்ணே என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் தாய் மற்றும் மகள் உறவை அடிப்படையாகக் கொண்டு வெளியாகியிருந்தது . இந்த திரைப்படம் அவருக்கு நல்ல ஒரு அறிமுகத்தை கொடுத்திருந்தாலும் மிகப்பெரிய அளவில் பிரபலமாக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

தொடர்ந்து தீயா வேலை செய்யணும் குமாரு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படத்தில் இவரது ரோல் கொஞ்சம் கவனத்தை ஈர்க்கும் படியாக இருந்தது .

தொடர்ந்து தமிழ் படம், நான் சிரித்தாள் உள்ளிட்ட படங்களில் ஐஸ்வர்யா மேனன் நடித்திருக்கிறார். இதனிடையே தனது சமூக வலைதளங்களில் எப்போதும் படு கவர்ச்சியான கிளாமரான புகைப்படங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார் ஐஸ்வர்யா மேனன்.

அதன் மூலம் தனக்கான தனி ரசிகர்கள் பட்டாளத்தையும் உருவாக்கி வைத்திருக்கிறார். குறிப்பாக இவரது கவர்ச்சி அழகை ரசிக்கவே ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் இருக்கிறார்கள்.

தனியாக இருக்கும் போது அதை செய்வேன்:

கவர்ச்சி காட்டி எப்படியாவது சினிமாவில் வாய்ப்பு பெற்று முன்னணி நடிகையாகி விட வேண்டும் என்ற ஒரு கனவிலே தொடர்ந்த இருந்து வருகிறார் ஐஸ்வர்யா மேனன்.

இந்த நிலையில் சமீபத்திய பேட்டிகளில் கடைசியாக நீங்கள் அழுதது என்றால் அது எப்போது? என தொகுப்பாளர் கேள்வி கேட்டதற்கு கிட்டத்தட்ட நாலு மாதத்திற்கு முன்பு இருக்கும்.

நான் பொதுவாக எல்லோர் முன்னாடி எல்லாம் அழமாட்டேன். தனியாக வீட்டின் அறைக்குள் உட்கார்ந்து அழுவேன். எல்லோர் முன்னாடி அழும் பழக்கமே எனக்கு இல்லை.

குறிப்பாக அம்மா முன்னாடியே அழுதா கூட அவங்க கஷ்டப்படுவாங்க இல்லையா அதனால் நான் தனியாக அழும் பழக்கம் கொண்டவள்.

மேலும் ஐஸ்வர்யா மேனன் போன்ற அழகாக ஆவதற்கு ஏதேனும் டிப்ஸ் சொல்லுங்கள் என கேட்டதற்கு, உண்மையிலே சொல்லப்போனால் மன நிம்மதி, சந்தோஷம், அமைதியான ஒரு வாழ்க்கை வாழ்ந்தாலே தானாக முகப்பொலிவு வந்துவிடும் என கூறியிருந்தார். இதை நான் பெரிதாக நம்புகிறேன் எனவும் அவர் அந்த பேட்டில் அழுத்தமாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

More in Tamil Cinema News

Trending

To Top
Exit mobile version