நடிகை பிரியா பவானி சங்கர் விஜய் டிவியின் மூலம் சின்னத்திரை சீரியல்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.சீரியல்களிலும் செய்தி வாசிப்பிலும் சிறந்து விளங்கிய பவானி சங்கர் தற்சமயம் திரைப்படத்துறையில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வந்து கொண்டிருக்கிறார்.
நடிகை பிரியா பவானி சங்கர் சென்னை சேர்ந்தவர். இவரது ஆரம்ப காலம் முழுவதும் செய்தி வாசிப்பாளராக புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பணிபுரிந்தார்.பிறகு செய்தி வாசிப்பில் சிறந்து விளங்கியதால் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இவரது வசீகரமான பேச்சாளும் முகபாவனையாளும் பல இளைஞர்கள் மற்றும் குழந்தைகளை வெகுவாக கவர்ந்தார்.
பின்னர் இவருக்கு திரைப்படத்துறையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட பிரியா பவானி சங்கர் முதல் முதலில் ‘மேயாத மான்’ என்ற திரைப்படத்தில் நடிகர் வைஃபுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் இவரை தேடி வந்தது.சாதாரண செய்தி வாசிப்பாளராக தொடங்கிய பவானி சங்கர் தற்சமயம் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.
இவர் ‘கடைக்குட்டி சிங்கம்’ என்ற திரைப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் குடும்ப கதாபாத்திரத்தில் சிறந்து விளங்கியதன் காரணமாக அடுத்தடுத்து இவருக்கு குடும்ப கதாபாத்திரங்கள் கொண்ட கேரக்டர்கள் கொடுக்கப்பட்டது.மேலும் யானை ,குருதி ஆட்டம், கசடதபற, களத்தில் சந்திப்போம் ,மாபியா திருச்சிற்றம்பலம் மற்றும் சமீபத்தில் வெளியான அகிலன் திரைப்படத்திலும் நடித்திருந்தார் பிரியாபவனி சங்கர்.
இந்நிலையில் பிரியா பவானி சங்கர் தற்சமயம் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் படு கவர்ச்சியாக புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இது ரசிகர்களுக்கு மிகவும் அதிர்ச்சியை தந்துள்ளது பல படங்களில் குடும்ப கதாபாத்திரங்கள் கொண்ட திரைப்படங்களில் நடித்துள்ள பிரியா பவானி சங்கர் தற்சமயம் இப்படி படு கவர்ச்சியாக உடை அணிந்து போட்டோக்களை பகிர்ந்ததன் மூலம் ரசிகர்கள் அதிர்ச்சி ஆகி உள்ளனர்.இந்த புகைப்படம் இணையத்தில் மிக வேகமாக பரவி வருகிறது.
மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.