“மற்ற தெய்வங்களை விட ஸ்பெஷல் உங்க குலதெய்வம்..!” – ஏன் தெரியுமா?

எத்தனை தெய்வங்களை நீங்கள் வழிபட்டாலும் உங்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் முதலில் வந்து உங்களை காக்கின்ற கடவுளாக உங்கள் குலதெய்வம் தான் இருக்கும்.

 மேலும் இந்த குலதெய்வத்திற்கும் மற்ற தெய்வங்களுக்கும் உள்ள அடிப்படை வித்தியாசம் என்னவென்று தெரியுமா? மற்ற தெய்வங்களுக்கு எண்ணற்ற பிள்ளைகள் இருந்தாலும் உங்கள் குலதெய்வத்திற்கு உங்கள் குல வம்சங்கள் மட்டுமே பிள்ளைகள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

நீங்கள் வருடம் ஒருமுறை உங்கள் குலதெய்வத்திற்கு உரிய மரியாதையை நீங்கள் கொடுக்கும்போது உங்களுக்கு எத்தனை எண்ணங்கள் ஏற்பட்டாலும் அது சூரியனைக் கண்ட பனி போல எளிதில் விளக்கி ஓடிவிடும்.

 நீங்கள் குலதெய்வ வழிபாட்டை விடாமல் செய்வதின் மூலம் நவகிரகங்கள் அனைத்தும் உங்களுக்கு பக்கபலமாக நிற்கும். இதனால் தோஷங்கள், தடைகள், பிரச்சனைகள் எது வந்தாலும் அதை உங்கள் குலதெய்வம் முன் நின்று காக்கும்.

 குலதெய்வ வழிபாட்டை மறந்து விட்டால் நீங்கள் உங்கள் பெற்ற தாயை பட்டினி போடுவதற்கு சமம் என்பதை உணர்ந்து கொண்டு வருடம் தோறும் உங்கள் குலதெய்வ வழிபாட்டை சீரும் சிறப்புமாக செய்து வாருங்கள்.

 எனவே தான் குலதெய்வத்தை விட உலகில் உயர்ந்த தெய்வம் எதுவும் இல்லை என்று நமது முன்னோர்கள் கூறி வந்தார்கள். உங்களுக்கு இன்னல் என்று வந்துவிட்டால் கண்ணின் இமை போல குலதெய்வமே வந்து காத்து நிற்கும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

மேலும் உங்கள் குலதெய்வத்திற்கு புகைப்படம் இருந்தால் கண்டிப்பாக அந்த புகைப்படத்தினை உங்கள் வீட்டில் வைத்து வணங்கி வரவும்.

 இதன் மூலம் குலதெய்வத்தின் அருளை பெறுவதோடு பலவிதமான ஐஸ்வரியமும் உங்கள் வீட்டுக்கு வந்து சேரும்.ஆண்டியை அரசனாக வரும் அரசனை ஆண்டியாக்குவதும் குலதெய்வமே இந்த குலதெய்வம் தான் உங்களுக்கு முதன்மையான தெய்வமாக இருக்க வேண்டும் அதற்கு அடுத்து தான் இஷ்ட தெய்வங்களும் வரும்.

எனவே குலதெய்வத்தை கட்டாயம் தெரிந்து கொண்டு அதற்குரிய வழிபாடுகளை குடும்பத்தோடு சென்று செய்யுங்கள். அதன் மூலம் எண்ணற்ற பயன்களை அடைவீர்கள்.

 குலதெய்வம் தெரியாதவர்கள் திருச்செந்தூரில் இருக்கும் முருகப்பெருமானையோ அல்லது காமாட்சி அம்மனுக்கு வழிபட்டு வந்தால் நிச்சயம் உங்களுக்கு நல்லதே நடக்கும்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

&Quot;சமந்தாவின் மார்பில் இது இல்லை..&Quot; நடிகை ஸ்ரீரெட்டி மோசமான பேச்சு..!

“சமந்தாவின் மார்பில் இது இல்லை..” நடிகை ஸ்ரீரெட்டி மோசமான பேச்சு..!

ஸ்ரீரெட்டி : பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்து கொள்ளச் சொல்லி தன்னை படுக்கையில் ஆசை தீர பயன்படுத்திக் கொண்டு கடைசியில் …

Exit mobile version