“நீங்கள் தரிசிக்க வேண்டிய மிக முக்கிய கோயில்கள்..!” – எது என தெரிந்து கொள்ளலாமா..!

தமிழகத்தில் குறிப்பாக தஞ்சை மற்றும் கும்பகோண பகுதிகளில் அதிக அளவு கோயில்கள் காணப்படுவதால் கோயில்களின் நகராக அந்த இரண்டு ஊர்களும் கூறப்பட்டு வருகிறது.

 எனினும் ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்நாளில் மிக முக்கியமான சில கோயில்களில் சென்று கடவுளை தரிசிப்பதன் மூலம் எண்ணற்ற நன்மைகளை அவர்களது வாழ்நாளில் அடைய முடியும்.

அத்தகைய முக்கியம் வாய்ந்த கோயில்கள் எது எது என்பது பற்றி எந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம். மேலும் அந்தக் கோயில்களை நீங்கள் உங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது சென்று வழிபட முயற்சி செய்வது மிகவும் நல்லதாகும்.

தமிழகத்தில் இருக்கும் மிக முக்கிய கோயில்கள்

சமயபுரம் மாரியம்மன்

திருச்சிக்கு அருகில் இருக்கக்கூடிய சமயபுரத்தில் எழுந்தருளி இருக்கும் மாரியம்மன் பற்றி அனைவருக்குமே நன்றாக தெரியும். எந்த மாரியம்மன் கோயில் திருச்சிராப்பள்ளியில் இருந்து 15 கிலோமீட்டர் தூரம் கொண்டது. உங்கள் வாழ்நாளில் இங்கு இருக்கும் மாரியம்மனை ஒரு முறையாவது தரிசிப்பது மிகுந்த சிறப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.

பழனி

பழனி மலையில் எழுந்தருளி இருக்கும் பழனி முருகன் மிகவும் அழகாகவும் உலகிற்கே கலைகளையும் ஆன்மீகத்தையும் பறைசாற்றக்கூடிய கோயிலாக விளங்குகிறது. இந்த கோயிலை நீங்கள் தரிசிப்பதன் மூலம் உங்களுக்கு எண்ணற்ற பலன்கள் ஏற்படும்.

ஸ்ரீரங்கம்

ஸ்ரீரங்கத்தில் எழுந்திருக்கும் ஸ்ரீ ரங்கநாதர் சுவாமிகள் மகாவிஷ்ணுவின் அம்சமாக கருதப்படுகிறார். மிகச் சிறந்த வைணவ சேத்திரங்களில் ஒன்றாக திகழும் இந்த ஸ்ரீரங்கம் 108 பிரதான விஷ்ணு கோயில்களில் ஒன்றாக உள்ளதால் இதனை தரிசிப்பது மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.

திருச்செந்தூர் முருகன்

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்திருக்கும் திருச்செந்தூர் முருகனை நீங்கள் வழிபட உங்கள் குடும்பத்திற்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும். மேலும் இக்கோயில் ஆனது 2000 ஆண்டுகளுக்கு முந்தையதாக கருதப்படுகிறது. கடற்கரை ஓரத்தில் அமைந்திருக்கும் இந்த கோவிலில் முருகர், வள்ளி தெய்வானையோடு காட்சி அளிக்கிறார்.

ராமேஸ்வரம்

அப்பர், சுந்தரனார் பாடப்பட்ட திருத்தலமான ராமேஸ்வரத்தில் ஸ்ரீ ராமநாத சுவாமிகள் இருக்கிறார். தமிழ்நாட்டில் கடை கோடி பகுதியில் இந்த திருத்தலம் அமைந்துள்ளது. இந்தியாவில் உள்ள 12 ஜோதிர் லிங்க தளங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. இத்தலத்தில் ராவணனை கொன்ற பாவம் தீர ராமன் சிவனை வழிபட்டதாக புராணங்கள் கூறுகிறது.

 

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

தமிழ் சினிமாவின் பிரபலமாக வளர்ந்து வரும் நடிகைகளில் மிக முக்கியமானவராக கீர்த்தி சுரேஷ் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் சினிமாவிற்கு வந்த …

Exit mobile version