நடிகை இனியா பாடகசாலை என்ற திரைப்படத்தில் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். மலையாள நடிகையான இவர் தமிழில் வாகை சூட வா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.
இந்த திரைப்படத்தில் செங்கல் சூளை காட்டில் வேலை செய்யும் ஒரு பெண்ணாக நடித்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற சர சார காத்து வீசும் போதும் சார பாத்து பேசும் போதும் என்ற பாடல் இன்றளவும் பல இளசுகளின் விருப்பமான பாடலாக இருக்கின்றது.
இந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு அரசு விருது பெற்றார். தொடர்ந்து பல விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டார். இந்த படத்தை தொடர்ந்து இவர் நடித்த பல படங்கள் தோல்வியை சந்தித்ததால் ராசியில்லாத நடிகை என்று முத்திரை குத்தப்பட்டு பேக் செய்யப்பட்ட நடிகை இனியா.
ஆனாலும் மலையாளம் கன்னடம் ஆகிய மொழிகளில் கவனம் செலுத்தி வரும் இவர் தொடர்ந்து தன்னுடைய சினிமா வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
தற்பொழுது கணிசமான உடல் எடையை குறைக்கும் நடிகை இனியா கவர்ச்சி உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது கேரளாவின் பாரம்பரிய உடை அணிந்து கொண்டு தன்னுடைய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வருகின்றது.
ஓணம் பண்டிகை வந்துவிட்டாலே நடிகைகள் கேரளாவின் பாரம்பரிய உடைகளை அணிந்து கொண்டு கிளுகிளுப்பான போஸ் கொடுத்து ரசிகர்களை சுண்டி இழுப்பார்கள். அந்தவகையில் நடிகை இனியாவும் தன்னுடைய பங்கை சிறப்பாக செய்திருக்கிறார் என்றுதான் கூறவேண்டும்.