ஜெய்பீம் படத்தில் செங்கேனி-யாக நடித்தவர் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் பிறந்த நடிகை லிஜோ மோள் ஜோஸ். கடந்த 2014ஆம் ஆண்டு மகேஷின்டே ப்ரதிகாரம் என்ற படத்தில் சோனியா என்ற கதாபாத்திரத்தில் நடித்து திரைத்துரைக்குள் காலடி எடுத்து வைத்தார்.
அதனை தொடர்ந்து 2019ஆம் ஆண்டு சிவப்பு மஞ்சள் பச்சை என்ற திரைப்படத்தில் ராஜலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் இதுதான் இவருடைய முதல் தமிழ்த் திரைப்படம் ஆகும். அதன் பிறகு தீதும் நன்றும் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
ஆனால் இவருக்கு மிகப்பெரிய அடையாளம் கொடுத்தது இவர் நடித்த மூன்றாவது தமிழ் திரைப்படமான ஜெய்பீம் ஆகும். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உண்மையில் சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியின் சாதியை மற்றும் மதத்தை மட்டும் மாற்றி படமாக எடுத்து வெற்றி பெற்றனர் ஜெய்பீம் படக்குழுவினர்.
இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 5 விருதுகளை குவித்துள்ளது. இந்த படத்தில் இடம்பெற்ற உண்மை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடிகை லிஜோ மோள் ஜோஸ் நடித்திருந்தார்.
தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி படத்தின் கதைக்கு பக்கபலம் சேர்த்திருந்தார் லிஜோ மோள். தற்பொழுது அன்னபூரணி மற்றும் புத்தம் புது காலை விடியாதா என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
இந்தப் படங்கள் விரைவில் வெளியாக உள்ளது. ஜெய்பீம் படத்தில் நடித்ததற்காக இதுவரை மூன்று விருதுகளை பெற்றுள்ளார். சிறந்த நடிகைக்கான JFW விருது, சிறந்த நடிகைக்கான நொய்டா திரைத்திருவிழா விருது, சிறந்த நடிகைக்கான தேசிய விருது என மூன்று விருதுகளை பெற்றுள்ளார் லிஜோமோள்.
இந்நிலையில் இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் ஜெய்பீம் படத்தில் செங்கேனியாக நடித்த லிஜோ மோளா இது..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.